Thursday, August 20, 2009

யாரை நம்ப...

அனைத்தையும் அடையலாம்
நட்பால் என்று
உன்னைக் கண்டதுமே
நினைக்கத் தோன்றியது
எல்லாமே பறந்ததடி
உன் காதால்
பொய்யே உருவானாய்
காரணமே இலலாமல்

சாதாரனமாகின - உன்
பொய்ச் சத்தியங்கள்
அதையும் நம்பினர் - என்
நண்பிகள்
காரணமே இல்லாத - உன்
மாற்றத்துக்கு காரணம் தேடின
அந்த நல்ல

நகரம் நரகமாக்கியது
உன் நுழைவால்
காரணமற்ற பேச்சுகள்
உன் சார்பில் எழுந்தாலும்
பேச மறுத்தன நம் உதடுகள்
பிடிக்கவில்லையடி - உன்
முகம் காண
தெரியவில்லையடி - உன்னைத்
திருத்தி எடுக்க

அறியாமல் செய்த தவறு
எவராலும் திருத்தப் படலாம்
அறிந்தே செய்த தவறை
யார் சொல்லித் திருத்த
முகம் காண ஆசை என்று
நீ விடுமுறையில் அனுப்பிய
sms ஐ அழிக்க முயல்கிறேன்
முடியாதவளாகிறேன்
எனக்கு பல நண்பிகள்
இருக்கிறார்கள் என்ற ஒரே
காரணத்துக்காக......

2 comments:

திவா said...

வணக்கம் சிந்து...
இன்று முதல் நானும் ஒரு வலைப்பதிவு எழுத ஆரம்பித்து விட்டேன்.. வருகையை எதிர்பார்க்கிறேன்...

www.thiva-muru.blogspot.com

Sinthu said...

Whenever I have time, I'll read it..