Thursday, January 7, 2010

நட்புக்குள் பொறாமை ஏது?

மொட்டை மாடியிலிருந்து அந்த நகரத்தையே ஆராய்ச்சி செய்வபவள் போல வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் புவி.அவளின் மன ஓட்டத்தில் எதோ ஓரிடத்தில் எதோ தடங்கள் ஏற்பட்டது போல "What the hell is going around me?" என்று கத்தினாள்.

எதை நினைத்து இப்படி ஓலமிட்டாள் என்று அவளும் அறிந்திருக்கவில்லை, ஆனால் ஏதோ ஒன்று அவள் மனதை நெருடிக் கொண்டிருப்பதை உறைந்தவள் முன்னையநாள் பிற்பகல் நடந்த நிகழ்வை நினைவுபடுத்த முற்படுகிறாள்.

அன்றும் வழமை போல வேலையை முடித்துவிட்டு தன்னிருப்பிடம் திரும்பியவள் திடீர் என்று நண்பிகளின் அறைக்கு விரைந்தாள் (அது அவளுடைய வழைமையும்
கூட). அங்கு நடைபெற்ற உரையாடல் அவளின் மனதை அழமாகப் பதித்தது.

"ஏனடி புவி நம்மகிட்ட இதை மறைத்தாள்," வேணியின் அழுகையுடன் கூடிய குரல் மூடியிருந்த கதவையும் தாண்டி ஒலித்தது.

சந்தியா ஏதோ சொல்லி முடிக்க "அப்படி என்ன மறைத்திட்டாள்? அப்படி மறைத்தாலும் என்ன? அவள் என் உண்ட Best friend ஓ? ஏன் அழுகிறாய்?" இது சந்தியாவின் பொன்னான வாயால் வந்த அற்புதமான வார்த்தைகள்.

அழுகையிலும் அவளுக்கு வந்த கோவம் அனைவரையும் சுட்டெரிப்பது போல் இருந்தது. ஏதாவது ஏசிவிடுவாளோ என்று ஒருகணம் எல்லாரும் திகைத்திருக்க, ஏமாற்றமே பதிலானது.

"சொன்னாலும் சொல்லாட்டிலும் புவி என் best firend தான்," என்று வேணியின் மனம் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

"அவள் யாரிட்டையோ கடன் எல்லாம் வாங்கினாளாமே, உனக்கு தெரியுமடி," என்கிறாள் இன்னொருத்தி.

"ஏன்டி இது என்ன அவளுக்கு புதுசா?" மறுபடியும் சந்தியா குறுக்கிட்டாள்.

புவிக்கு எதுவுமே விளங்கவில்லை. அவள் எப்போது யாரிடம் கடன் வாங்கினால் என்று யாருக்குமே புரியாத நிலையில் அந்த சுவரோரத்தில் அப்படியே இருந்துவிட்டாள்.
உரையாடல் நீண்ட நேரமாக நீடித்துக் கொண்டிருந்தது.அன்று அவள் நண்பிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது, அவர்கள் புவியைப் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தனர்.

அவளுக்கு அப்படி காசு வேண்டும் ஏன்டா அவள் நம்ம யார் கிட்டையாவது கேட்டிருக்கலாமே. என் கேக்கல்ல என்று கேட்டுவிடலாமா? என்றாள் வேணி.

"அவள் எப்படிக் கேட்பாள், அவள் தான் என்கிட்ட நிறையத் தாரம் வாங்கிட்டாளே, மறுபடியும் எப்படிக் கேக்கிறது எண்டு தான் ஜோதியிடம் வாங்கிட்டாள்," மறுபடியும் சந்தியா குறுக்கிடவே மௌனமானாள் வேணி.

அவள் சின்ன சின்ன களவு வேறை செய்கிறது மட்டுமில்லாமல் எங்களைப் பற்றி வேறை பிள்ளையளிடம் சொல்கிறாளாம் என்ற முறைப்பாடுகளும் புவி மீது சுமத்தப்படுகின்றது.
இனி எதையும் கேட்க முடியாதவள் தன் அறைக்கு திரும்பினாள் புவி. நேரம் எவ்வளவோ தாண்டியும் அறைக்கு வராத வேணிக்கு தவறிய அழைப்பு (Missed call) ஒன்றையும் போட்டுவிட்டு அவள் வரும் முன்னரே உறங்கிவிட்டாள்.

ஒருவாறாக எல்லாம் முடிய, இன்றைக்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்று முடிவுடன் வந்தால் வேணி. இவள் என்ன இப்பவே நித்திரை கொள்கிறாள் என்று நினைத்த வேணி "எழும்படி புவி, ஏன் இப்படி தூங்கிறாய்" என்று எதுவும் தெரியாதவள் போல எழுப்ப புவியின் தூக்கமும் கலைத்தது. ஆனால் எழுந்திருந்தாலும் அவள் எழுந்ததாகக் காட்டிக் கொள்ளவுமில்லை.
தூங்கிறவனை எழுப்பலான் தூங்கிற மாதிரி நடிப்பவனைத் தான் எழுப்ப முடியாதே, அது தான் இங்கேயும்.
பல நிமிடங்களின் பின்னர் எதுவுமே தெரியாதவள் போல எழும்பினாள் புவி. அருகில் அப்போதும் அவளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேணி இருந்தாள். அவளைப் பொருள்ப் படுத்தாதவளாக மெல்ல குளியலறைக்கும் நுழைந்தாள் புவி.

"என்ன இவள் எதுவுமே கேண்டுக்காமல் போறாள்," இது வேணியின் புலம்பல். அந்தக் கசப்பான உரையாடலைக் கேட்ட பின் புவியால் வேணியுடன் வழமை போல பேச முடியவில்லை.ஆனாலும் செய்யாத குற்றங்களுக்குப் பலியாக அவள் விரும்பவுமில்லை. உரையாடலின் இடையில் புகுத்தப் பட்ட ஜோதி என்பவளை சந்திப்பதே முடிவாக முடியும் என்று புறப்பட்டாள்.

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல புவி அவளின் அறையை நீங்கவும் ஜோதி தென்பட்டாள்.
"Jhoti, I have to talk to you darling," என்றாள் புவி.
"Ok, sure dear. I also have come to discuss with you something, so what's up? You look awful," என்றாள் ஜோதி.
"Nothing da, but..." என்று இழுத்த புவியை இடைமறித்தாள் ஜோதி.
"But what?"
"Did I borrow something from you? I mean money or something,"
ஜோதி யோசித்துவிட்டு "Yep, Santhya borrowed for you."
"What are you saying, Jyoti? என்றால் புவி எதுவுமே தெரியாதவளாக.
"She said like that da," என்றவளை இடைமரித்தாளாள் புவி, "what did she say?"
"She said that you needed some money."
எதுவும் அறியாதவளாக "Ok, but I didn't get that money. Anyhow you will be given your money. Thanks da," என்று அவளிடமிருந்து விடைபெற்றாள்.

களவு என்றும் எதோ பேசப் பட்டது அவள் நினைவுக்கு வர அதைப் பற்றி ஆராய முனைதாள். அன்று ஒரு நாள் அவளும் சந்தியாவும் கணணியரையிலிருந்த பேனாவை எடுத்தனர் (அன்று என் பேனையை யாரோ எடுத்திட்டாள், so நான் இதை எடுக்கிறேன் என்று சந்தியா தான் எடுத்தாள்.)
வேறு ஒரு நாள், சந்தியா பசிக்கிறது என்று சொல்ல புவி தான் dining hall இலிருந்து biscuit எடுத்துக் கொடுத்தாள் (வழமையாக அவள் நண்பிகள் செய்வதைத் தான் அவளும் செய்தாள் என்பது சந்தியாவைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது.தனிமையில் யோசிக்கும் போது தான் புவிக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வந்தது. சந்தியா ஏன் இப்படி தன் நண்பிகளிடம் சொல்கிறாள் என்று.
ஜோதியிடமிருந்து காசு வாங்கிய விடயமோ, biscuit எடுத்த விடயமோ யாருக்கும் தெரியாக் கூடாது என்று சந்தியா சொல்லியிருந்ததை நினைவுபடுத்தினாள் புவி.
அதற்கான காரணம் இப்போது அவளுக்கு எல்லாமே புரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் புவி என்பவள் அந்த நண்பிகள் குழுவில் இல்லாத நேரம் சந்தியாவுக்கு வேணி தான் நெருங்கிய நண்பி. இப்போது புவி தன் இடத்தைப் பிடித்துவிட்டளோ என்ற பயம் சந்தியாவுக்கு வரவே அவர்களைப் பிரிக்க இந்த நாடகம்.
எல்லாவற்றையும் நினைக்க அவள் கண்ணிலிருந்து கண்ணீர் அருவியாகப் பாய்ந்தது.
"இதை எல்லாம் சொன்னால் யார் தான் நம்புவார்களோ," என்று வீரிட்டு அழுதாள் அந்த அப்பாவி.
யாரோ அழும் குரல் கேட்ட அவ்வழியே சென்ற ஜோதி மெல்ல எட்டிப் பார்த்தாள்.
விவரங்கள் யாவற்றையும் சொல்லி கதறிக் கதறி அழுதாள் புவி. அன்று முழுதுமே அறைக்கு வராத புவியைத் தேடி வந்த வேணியின் காதில் புவி சொன்ன அத்தனையுமே இடியாக விழுந்தது.
நேற்று புவி சந்தியாவின் அறைக்கு வந்த விடையத்தையும் ஊகித்துக் கொண்டவள், ஓடிவந்து புவியைக் கட்டி அணைத்தாள்.
தனக்கு மட்டுமே நெருங்கிய நண்பியாக இருக்க வேண்டும் என்ற சந்தியாவின் கற்பனை நனவாகவே முடியாமல் கானல் நீராகியது.

6 comments:

Subankan said...

நல்லாருக்கு சிந்து

Sinthu said...

நன்றி.

தேவன் மாயம் said...

அன்புடன் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

அண்ணாமலையான் said...

ஓகே சிந்து...

மந்திரன் said...

பெண்ணின் நட்பு பித்து .
ரொம்ப நாட்களுக்கு பிறகு , பெண்ணிய பார்வையில் ஒரு நல்ல கதை .

Sinthu said...

புது வருட வாழ்த்துக்கள் தேவா அண்ணா.

//அண்ணாமலையான் said...

ஓகே சிந்து...//


ஆஹா.......... என்ன சொல்ல வாறீங்க...?


//மந்திரன் said...


பெண்ணின் நட்பு பித்து .
ரொம்ப நாட்களுக்கு பிறகு , பெண்ணிய பார்வையில் ஒரு நல்ல கதை .//


நன்றி. பல வருடங்களாக சிறுகதையே எழுதவில்லை, அது தான் இடையிடையே சில தவறுகள். இனி நன்றாக வரும். நல்ல கதை என்று சொல்லிட்டீங்க, அது உண்மையா?