Sunday, January 24, 2010

கடவுளுடன் ஒரு உரையாடல்

கற்பனைகளும் யதார்த்தங்களும் கூடிய பதிவு இது. கடவுளுடன் சம்பந்தமாக எழுதலாமே என்று ஒரு எண்ணம் தோன்றியது. இப்போது தான் நேரம் கிடைத்ததால், எழுதலாமே என்று. கடவுள் ஒருவர் கண்ணெதிரே தோன்றும் சந்தர்ப்பங்களையும், அந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையில் எப்படிப் பேசுவார் என்பதையுமே இப்பதிவு கொண்டு வருகிறது.


நாத்திகன் ஒருவன் கடவுளை சம்பந்த சம்பந்தமில்லாமல் ஏசிக் கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாத கடவுள், அவன் முன்னே தோன்றினார்.
கடவுள் - என்ன உரிமை இருப்பதால் நீ என்னை ஏசுகிறாய்?
நாத்திகன் - எந்த உரிமையும் இல்லாததாலே எசுகிறேன், நீ யார் கேட்பதற்கு? உன்னை நம்பிற ஆத்திகனே உன்னை ஏசுகிறான், நான் ஏசினால் என்ன?
கடவுள் - அவன் என்னை நம்புபவன், அவனுக்கு என் மேல் உரிமை இருக்கிறது. என்மேல் உரிமை இருக்கும் என்னை நம்பும் யாருக்கும் என்னைப் பற்றிப் பேசும் உரிமை உண்டு. என்னைப் பற்றிப் பேசும் அவனுக்கு என்னை ஏசும் உரிமை இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
எதுவுமே சொல்ல முடியாமல் திக்கு முக்காடியவனை, அரவணைத்த கடவுள் என்னை நம்புவதும் நம்பாததும் உன் விருப்பம், ஆனால் ஒருவரைப் பற்றிப் பேசும் அல்லது ஏசும் முன் சிந்தனை செய் என்றார்.
*****************************************************************************************

ஆத்திகன் ஒருவன் எவ்வளவு தான் கடவுளை நம்பி இருந்தும் என் என் வாழ்க்கை இப்படிப் போகிறது என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
என்னை இப்படி நம்பும் இவனா இப்படிப் பேசுகிறான் என்ற கவலையுடன் அவனை நெருங்கிய கடவுள் அரவணைக்க முற்படுகிறார்.
ஆத்திகன் - இப்ப மாத்திரம் வந்து என்ன பயன், எல்லாமே போச்சு...
கடவுள் - மனிதன் வழிநடத்தப் படுவதற்காகவே மனிதனால் உருவாக்கப் பட்டவன் நான். என்னை நம்பி நீ இருந்தது மட்டுமல்லாது, உன் மேல் நீ நம்பிக்கை வைத்து, கடினமாக உழைக்காமல் விடும் பட்சத்தில் என்னால் மட்டுமல்ல யாராலும் உன் பிரச்சனையிலிருந்து உன்னைக் காப்பாற்ற முடியாது. கடவுள் கடவுள் என்று தன அன்றாட நடவடிக்கைகளை மறந்த இவனுக்கு அப்போது தான் ஞானம் பிறந்தது.
தன் வாழ்க்கையை அவனே வழி நடத்த வேண்டும் என்பதை அறிந்த அவன், தன் வெற்றிப் பாத்தியை நோக்கி நடைபோடுகிறான்.
****************************************************************************************

தங்கள் காதலை இதுவரை காலமும் மறைத்து வைத்த காதலர்கள், எப்படியாவது தங்கள் காதலை சேர்த்து வைக்கும் படி கடவுளிடம் கேட்ட போது.
கடவுள் - நீங்கள் காதலிக்கும் ஆரம்பத்தில் என்னிடம் கேட்கவில்லையே (காதல் சொல்லிக் கொள்ளாமல் வருவது தானே என்று வாதித்தால், அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை), என்னையாவது விடுங்கள் உங்களை வளர்த்து ஆளாக்கிய உங்கள் பெற்றோரிடம் சொன்னீர்களா?
காதலர்கள் - கடவுளே, உதவி கேட்கும் நேரத்தில் இப்படிக் காலைவாரி விடுவது நியாயமா?
கடவுள் - அப்படி இல்லைக் குழந்தாய், காரணம் இல்லாமல் வருவது தான் காதல், ஆனால் வாழ்க்கையின் நியதிகள் பல. எல்லா விருப்பங்களையுமே பூர்த்தி செய்யும் உங்கள் பெற்றோருக்கு செய்யும் நன்றிக் கடன நீங்கள் செய்யும் நன்றிக் கடன் இது தானா? [என்ன பழைய டயலாக் மாதிரி இருக்கா, அட்ஜஸ்ட் (adjust) பண்ணுங்க.. ]
காதலர்கள் - எங்கள் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் அவர்கள் ஏன் இதை மட்டும் மறுக்கிறார்கள்?
கடவுள் - தவறான பொருள்களை வாங்கிய பின்னோ பெற்ற பின்னோ தவிர்த்து விடலாம் அல்லது வேறு பொருளை வங்கி விடலாம், ஆனால் வாழ்க்கை ஒரு முறை தவறினால் திருப்பி வாங்கப் பட முடியாதது.
காதலர்கள் - நாங்கள் எங்களை நன்கே புரிந்து கொண்டு தானே காதலிக்கிறோம், அதனால் எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் வரத்து.
கடவுள் - இப்படித் தான் பல காதலர்கள் சொல்லி, கடைசியில் பெற்றோரிடமே பிச்சை கேட்கும் நிலைமையில் இருக்கிறார்கள்.
காதலர்களுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, இளங்காதல் முடிவெடுக்க மறுத்ததை உணர்ந்த கடவுள் தானாகவே விலகிக் கொண்டார்.

பி.கு - கடவுள் சம்பந்தமா போடுவமா? என்று யோசித்தேன், சும்மா ஒரு மொக்கை போடலாமே என்று தான் போட்டேன். வாசித்ததுக்கு அப்புறமா இங்க வந்திடாதேங்க, எதுக்கா? அடிக்கத் தான்..

2 comments:

Senthu VJ said...

ஏச இதுல ஒண்டுமே இல்ல, நல்லா சிரிக்கிறமாதிரி இருந்தது, இன்னும் எழுதுங்க..Ha.ha.. LMAO..

Sinthu said...

உண்மையாகவா? நன்றி...