Wednesday, January 27, 2010

இயற்கை

அடிமையாகிறேன் உனக்கு
நீ அழகாய் இருப்பதால்
கடவுள் உன்னை மட்டும்
அழகைப் படித்ததன்
நோக்கம் தான் என்னவோ?

செயற்கையே அறியாத உன்னை
இயற்கை என்கிறது மனிதம்

உன்னை அழிக்க வந்த
மனிதனை நம்பும் நீ
ஏமாளியா?
கொலையாளியையும்
அரவணைக்கும் கருணையளியா?

அழகு படுத்த வேண்டிய
உன்னை அழிப்பதன் நோக்கம்

உன் புற அழகில்
திளைக்கும் மனிதன்
உன் அக அழகால்
உயிர் வாழ்வதால்
ஈனமற்றவனாகிரானோ?

பதில் சொல்லாமலே
உறையும் உன்னை காப்போம்

2 comments:

அண்ணாமலையான் said...

நிச்சயாமாய்

Sinthu said...

//அண்ணாமலையான் said...
நிச்சயாமாய்//
எனக்கும் ஆதரவாளர்களா? (அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா )


நன்றி Henry J