Sunday, May 10, 2009

அன்னைக்கு ஒரு நாள்



வாழ்வு என்று தெரியாத வயது
இல்லை இல்லை
அன்று எனக்கு பூச்சியமாவது வயது
இன்றும் அப்படியே வாழ ஆசை
உன் மடியில்த் தலை வைத்து
நீ ஊட்டும் உணவு மட்டுமே சக்தி
தருவது போல ஒரு உணர்வு

எந்த எதிர் பார்ப்பும் இல்லாத
உன்னத உறவு
தன் பிள்ளையை
வளப்பால் மாற்றக் கூடிய
மந்திர சக்தி அவளிடம்
அவளுக்கும் ஒரு நாள்..

நாள் முழுதும் கடமைப் பட்ட ஒரு உறவுக்கு ஒரு நாள் போதுமா?இன்றாவது நன்றி சொல்ல வாய்ப்புக் கிடைக்கிறதே..

2 comments:

வேத்தியன் said...

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்...

குமரை நிலாவன் said...

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்...


கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்
வருத்தம் வேண்டாம்