Thursday, June 25, 2009

நினைவுகள்

நிறைய நாட்களின் பின் என் கிறுக்கலைப் படிக்க வந்தவங்களே... கவனம்...

பாடப் புத்தகம்
தூக்கும் நேரம் எல்லாம்
உன் நினைவு..
காரணம் கேட்கிறாயா
படிக்க வந்து தானே
உன்னைப் படிக்க ஆரம்பித்தேன்
*************************************
நித்திரைக்காக எதையுமே
தூக்கி எரியும் நான்
உனக்காக நித்திரையைத்
தூக்கி எறிந்தேன்
நித்திரை என்னுடன்
கோவித்துக் கிண்டு
வர மாட்டேன் என்கிறதடா...

பி.கு:பரீட்சை காரணமாக வலைத் தளப் பக்கம் வர முடியாமல் இருந்தது. (அப்படி எண்ணத்தைத் தான் படிச்சு கிளித்திட்டீங்க என்றெல்லாம் கேக்கக் கூடாது) இன்னும் பதினான்கு நாட்களில் வீட்டுக்குப் போக இருக்கிறேன், அதனால் இன்னும் ஒரு மாதத்துக்கு பதிவுகள் குறைவாகவே இருக்கும். அப்புறமாக வந்து பார்க்கலாம்..

2 comments:

Admin said...

//நிறைய நாட்களின் பின் என் கிறுக்கலைப் படிக்க வந்தவங்களே... கவனம்...//

என்ன சிந்து வந்ததுமே கவனம் எல்லாம் சொல்றிங்க. படிங்க படித்து பரிட்சை எழுதிட்டு இந்த பக்கம் வங்க எழுதுங்க எங்க சிந்துவ காணேல்ல எண்டு யோசித்தோம் வந்துட்டிங்க.

என்ன சிந்து பல நாளா காணல்ல எண்டு பின்னூட்டம் போட்டதுமே வந்திட்டிங்க...

Sinthu said...

"என்ன சிந்து வந்ததுமே கவனம் எல்லாம் சொல்றிங்க. படிங்க படித்து பரிட்சை எழுதிட்டு இந்த பக்கம் வங்க எழுதுங்க எங்க சிந்துவ காணேல்ல எண்டு யோசித்தோம் வந்துட்டிங்க.

என்ன சிந்து பல நாளா காணல்ல எண்டு பின்னூட்டம் போட்டதுமே வந்திட்டிங்க..."

அது தான் சிந்து..