வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்த போதும், அம்மாவும் அண்ணாவும் இருக்கிறார்கள் தானே என்ற துணிவில் இருந்த அந்த நாட்களை நினைக்கையில், எதையோ இன்று இழந்த உணர்வு. (எல்லா விடயங்களையும் நான் பகிர்ந்துகொள்ளும் உறவுகள் - காதல் விடயங்களாக இருந்தாலும் கூடவே.. என் காதலா என்று கேட்க்கக் கூடாது, அது என் வகுப்பு நண்பர்களுடைய காதல்கள்..)
என் வாழ்க்கையைத் திருப்பியது மட்டும் அல்லாமல் வாழ்கை என்பதை சிறிதளவேனும் கற்பித்த காலப் பகுதியும் இதுவே (வாழ்க்கை என்பதை அறிந்ததால் தான் வாழ்க்கையே வேண்டாம் என்று தோன்றியதோ)
சாதிக்க வேண்டும் என்று தோன்றிய காலம் போய் வாழ்க்கையின் வேதனையான காலம் என்னையும் எட்டிப் பார்க்கத் தொடங்கியதும் இந்த நாசமாகிப் போன காலப் பகுதியில் தான்.
இங்கு வந்ததில், நான் அறிந்து ஒரே ஒரு நன்மை மட்டும் தான். பல நல்ல உறவுகள் கிடைத்தன, முக்கியாமாக் வெற்றிக் குடும்பத்தின் (வானொலித் துறையில் நாட்டம் அதுகம் என்பதால் அம்மாவை தொடர் நாடகம் பார்க்க விடாமல் சூரியன் பண்பலை கேட்ட காலம், அம்மா கேட்பார் "நீ அவங்களைப் பற்றி எதுக்கு என்கிடா சொல்ற, அவங்களுக்கு உன்னைத் தெரியுமா?" நான் யாரு நான் சொல்வேன் "எனக்குப் பிடித்தவர்களைப் பற்றி நான் கதைப்பதில் என்ன தப்பு இருக்கிறது. சினிமா நடிகர்களைப் பற்றி எல்லோரும் கதைக்கிறாங்களே, அது எதுக்கு?" அம்மா பாவம் எதுவும் பேச மாட்டாங்க (இப்ப எல்லாக் கதைகளையும் அவங்களிடம் சொல்ல முடியாமல் இருப்பதையிட்டும் கவலை தான். இந்த ஒரு வருட காலப் பகுதியில் நடந்தவற்றைச் சொல்வதற்கு ஒரு மாத காலப் பகுதி காணுமா என்பது கேள்விக் குறிதான் (அது தான் வருகிற ஆடியில் ஊருக்குப் போறேனே) நட்பு மற்றையது பதிவுலக உறவுகள்...(நான் அதிகம் கற்றுக் கொண்டது இங்கே தான்) இதை எல்லாம் விட்டால் என்ன நல்ல விடயங்கள் என்று பார்க்கப் போனால், யாவுமே மனதில் நிற்காதவை (கேட்ட விடயங்கள் அதிகமாக நடந்ததால் தான்) ஆனால் கிடைத்த பல உறவுகளைத் தவற விட்டதும் இங்கு தான் என்பது சோகக் கதை சொந்தக் கதை..
ஒரு வருடம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்று புரிந்துகொண்டேன். (அப்புறம் ஒரு நிமிடமே மாத்துகிறது, நீங்கள் என்ன ஒரு வருடம் என்றீங்க என்று குண்டக்க மண்டக்க எல்லாம் கேட்கப்படாது)
iந்த ஒரு வருடத்தில் நடந்த பல விடயங்களை மறக்க வேண்டியுள்ளது, ஆனால் முடியாவில்லை (மன வலியைக் குறைக்க வழி சொல்லுங்கள்)....
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று" (வள்ளுவர் நிச்சயமாக இப்படி எழுதி இருக்க மாட்டார் - எனக்குத் தெரிந்த தமிழில் எழுதியுள்ளேன். தமிழ்ப் பற்றாளர்கள் மன்னிக்க வேண்டும்.)
வாழ்க்கைக்கு ஒத்து வருமா என்பது சந்தேகம் தான்....
பி.கு: எழுத்துப் பிழைகள் அதிகம் இருந்திருந்தால் மன்னிக்கவும்.... அவசரமான பதிவு..