Saturday, October 17, 2009

hostel இலிருந்து பார்

பார் காதலித்துப் பார் என்ற கவிதையை லோஷன் அண்ணா ஃபெயில் பண்ணிப்பார் என்று மாற்றி அமைத்ததைத் தொடர்ந்து ஆதிரை (கடலேறி) அண்ணா பல்கலை வந்து பார் என்ற தலைப்பைத் தத்துருவமாக வடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அண்ணா 3 A எடுத்துப்பார் என்ற தலைப்பிலும் சுபாங்கன் அண்ணா பதிவு எழுதிப்பார் என்ற தலைப்பிலும் எழுது கலக்கிவிட்டார்கள். இப்படியான திறமையான பதிவர்களின் வரிசையிலே நீயும் எழுதலாமே சிந்து (நீ திறமையானவலா என்ற கேள்வியை இங்கே கேக்க வேண்டாமே) என்று ஒரு சின்ன ஆசை. அது தான் உங்க......... சும்மா........





கவிப் பேரரசு வைரமுத்து தன பாவம் இந்தக் கவிக் கீல்கரசி கூட கவிதை எழுத வந்திட்டாலே என்று வாசித்து நொந்து போகாமல் இருக்கட்டும் என்பதற்காக இந்தக் கவிதையை இங்கே பிரசுரிக்கிறேன்..





hostel இலிருந்து பார்
உன் வாழ்க்கை
வட்டமே மாறியதை
உன்னுள்ளே
உணர்வாய்
எத்தனை பேர் இருந்தாலும்
நீ மட்டும்
சுதந்திரப் பறவையாய் உணர்வாய்
நீ சாதரணமானவளாக இருந்தும்
வானிலிருப்பதாய் உணர்வாய்
உன் நடத்தை உனக்கே வியப்பாய்த்
தெரியும்
வாழ்க்கையே புதிதாய்
உணர்வாய்

hostel இலிருந்து பார்
இனி எங்கு சென்றாலும்
வாழ்ந்துவிடலாம் என்பாய்
சந்தூச்த்தைக் கொண்டாட
நண்பிகளை அழைப்பாய்
நள்ளிரவில் நண்பிகளின்
குரலுக்காய் விளித்திருபபாய் - வரும் வரை
missedcall இடுவாய்
வந்துவிட்டால் தூங்கிவிடுவாய்
பல மாடிகள் தள்ளி இருந்தும்
ஒரே அறையில் இருப்பதாய் உணர்வாய்
நீயே வாழ்க்கையின் அதிஷ்டசாலி என்பாய்


சோகம் வரும் வரை
சந்தோசத்துக்காய் மட்டுமே
hostalகள் என்பாய்
இது என் மாடி வீடு என்பாய்
hostel இலிருந்து பார்

சந்தோசத்தில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா?

உண்மை நட்பை
புரிந்து கொள்ள வேண்டுமா?

குதுகலத்தின் உச்சத்தை

அடைய வேண்டுமா?

நண்பர்களே
வாழ்க்கையாக வேண்டுமா?

உன்னுள்ளே தன்னம்பிக்கை

பிறக்க வேண்டுமா?


hostel இலிருந்து பார்

homesick என்ற வார்த்தை மனப்படமாகும்

உன் மொழியில் கலப்படம் தெரியும்

உன் பேச்சில் கருத்துக்கள் மறையும்

சந்திப்புகள் மெல்ல மெல்ல சகயமாகும்

hostel இலிருந்து பார்


புதிய நட்புகளில் இணைந்து இணைந்தே

வாழ வேண்டுமா?
சண்டை சச்சரவுகளில் நுழைந்து நுழைந்தே
மீண்டு வர வேண்டுமா?


உனக்குப் பிரதியீடாக நீயே வேண்டுமா?

நண்பிகளை எதிரியாக்கவும்
எதிரிகளை நண்பிகளாக்கவும்
முடிய வேண்டுமா?


hostel இலிருந்து பார்
சின்னச் சின்ன சந்தோசங்களில்

மூழ்க முடியுமே
அதற்காகவேனும்
உன்னைப் பார்த்து முறைத்த பெண்ணின்
வாயிலிருந்து ஒரு hi வேண்டுமா
அதற்காகவேனும்
எதிரியும் உன்னுடன் உனக்காக
நடை போட வேண்டுமா
அதற்காகவேனும்

hostel இலிருந்து பார்
புதிய புதிய
அனுபவங்களில் நீ
இணைக்கப் பட வேண்ட
அதற்காகவேனும்
அழுதுகொண்டே சிரிக்கவும்
சிரித்துக்கொண்டே அழவும்
அதற்காகவேனும்
இன்ப துன்பங்களை
மாற்ற முடியுமே
அதற்காகவேனும்
hostel இலிருந்து பார்



சொர்க்கம் நரகம்

இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்



பி.கு: இக்கவிதை பொதுவாகப் பெண்களுக்கு, அதுவும் வெளிநாடு சென்று hostel இல் தங்கிப் படிப்பவர்களுக்கும் பெண்களுக்கு மிகப் பொருத்தமானது..

இதுவே என் கடைசிப் பதிவாகவும் இருக்கலாம்.. சில மாற்றங்கள், சில கஷ்டங்கள் இந்த பதிவுலகாலும் ஒரு பெண் என்ற வகையில்......

Saturday, October 10, 2009

சண்டைகள் இப்படியும் வரலாம்..


நேற்றுத் தான் தூயா அக்காவின் Farm Ville பற்றிய பதிவைப் படித்துவிட்டு, Farm Ville இப்படி பிரபலமாகி விட்டதா என்ற கேள்வியுடன் எனது விவசாயத்தை ஆரம்பித்தேன். இணையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் புதிதாக நட வேண்டிய பயிர்களையும் நடாமல், அறுவடை செய்ய வேண்டிய பழங்களையும் அறுவடையும் செய்யாமல் கவலையுடன் திரும்பினேன்.

Farm Ville இல் என்ன முக்கியத்துவம் என்னவென்றால், எங்களுக்காக மட்டுமல்ல, நண்பிகளுக்கும் சேர்த்து தானே விளையாடுகிறோம். அவள் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் அவளுக்கு நேரம் இல்லை என்றால், அவளின் முகப்புத்தகத்தை நாமே திறந்து அறுவடை செய்யக் கூடத் தயங்குவத்தில்லை. இப்படியே சும்மா சின்னச் சின்ன சண்டைகள் Farm Ville வியாளையாடுபவர்களுக்கும் விளையாடாதவர்கலுக்கும் வருவது வழமை..
அப்படியே முடிந்துவிட்டும் என்று நினைத்த நாட்கள் போய். நேற்று சிறிய வாய்ப் பேச்சு, பெரிதாக்கி ஒரு பதினைந்து நிமிடங பேசாமல் இருக்கிற அளவு சண்டையாகிவிட்டது.
முகப்புத்தகத்தில் Farm Ville க்கு எதிராக குழு ஆரம்பித்ததே சண்டைக்குக் காரணமானது. நண்பிகள் எழ்வரில் இருவர் வேறு கட்டடத்தில் இருப்பதால் இரவு 12 மணிக்கு அப்புறம் எம்முடன் இருப்பதில்லை, அதனால நாங்கள் இவர் தான் கூடியிருந்தோம். Farm Ville இவரிடமும் இருந்தாலும் மூவர் மட்டுமே விளைய்டாடுவதுண்டு. அதனால் விளையாடாத இருவரும் சேர்ந்து தங்கள் குழுவின் பெருமைகளைப் பேச, நாங்கள் யார் சும்மா விடுவமா ஏட்டிக்குப் போட்டியாக பேச்சுகள் தொடர்ந்தன.
அவர்கள் சொன்னார்கள், வெட்டியாக முகப் புத்தகத்தில் இருந்து Farm Ville விளையாடி நேரத்தை நாங்கள் வீனாக்குகிரோமாம். நாங்கள் விடுவமா, அதுவும் நான், வழமையாகவே என் வாய் சும்மா இருக்காது, அதுக்குள்ளே இப்படி வர "உங்களளவு நாங்க படிக்கிறோம், அதே நேரத்தில் Farm Ville ஆயும் manage பன்னிரமே, நாங்கள் talented ஆனா ஆக்கள். நீங்களும் நாங்களும் ஒரே நேரம் தானே தூன்கிரம், படிக்கிறம், வீட்டு வேலை செய்கிறோம்," - இது நான். காரணம் எல்லோரும் ஒன்றாக படித்து ஒரே நேரம் தான் தூங்குவது வழமை. நான் சொன்ன இந்த வார்த்தை ஒருத்தியைக் காயப்படுத்தவே அவள் நான் சொன்ன அந்த "talented" என்ற சொல்லைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
இது ஒரு படியாக இந்தப் பிரச்சனை முடிய...
அவர்கள் தொடங்கிறார்கள், Farm Ville விளையாடும் ஒருவரே எண்கள் குழுவில் அங்கத்தவர் என்று. அவள் விட்டப் அதில்லை, காரணம் அவளாக இந்தக் குழுவில் இணையவில்லையே, எங்களில் ஒருத்தி அவளது முகப் புத்தகத்தினைத் திறந்து அவளையும் அங்கத்தவராக்கிவிட்டாள். அவள் தொடங்கினால், 'நீ என்னுடைய முகப் புத்தகத்தைத் திறக்கலாம், ஆனால் எனக்கு விருப்பமில்லாத குழுவில் என்னை இணைத்தது கேவலம்." அவளை இந்தக் "கேவலம்' என்ற சொல் காயப் படுத்த அவள் ஆரைக்குப் போவதாகக் கிளம்பினாள், அவளும் இவளும் ஒரே அறை என்பதால் சண்டை சிறிதே நீடித்தது. காரணம் இருவரும் ஒன்றாகவே அறைக்குப் போக வேண்டும்.
அப்படியாக அவர்கள் இனி Farm Ville பற்றிக் கதைக்க மாட்டோம் என்ற முடிவைச் சொல்ல, நாங்கள் மூவரும் சந்தோசம் என்று ஒன்றாகவே சொல்ல, அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
பதினைந்து நிமிட அமைதியின் பின்னர், எங்களுக்குப் பசிக்கிது என்று தொடங்கினார்கள், எண்கள் மூவரிடமுமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காததால், இரவு சாப்பிடாமல் எடுத்து வைக்கப் பட்ட சாப்பாட்டை மெல்லத் திறந்தார்கள், நாங்கள் அசையவே இல்லை. இப்ப சாப்பிடப் போறீங்களா இல்லையா என்று ஒருத்தி தொடங்கினாள். ஒருவரை விட்டுவிட்டு எவருமே சாப்பிடுவது வழக்கமால. ஒருவர் சாப்பிடாவிட்டால் எல்லாரும் பட்டினி என்பதால், அவர்களுக்காகவே கொஞ்சமாவது எல்லோரும் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்தால், சண்டை மெல்லத் தனிய ஆரம்பித்தது. வேண்டாமடா இனி இதைப் பற்றியே கதைக்க வேண்டாம் என்று நினைத்து, தூங்கலாம் என்று முடிவெடுத்தோம்.
அவர்கள் இருவரும் தங்கள் அறைக்கு செல்லவே, நாங்களும் எங்கள் கட்டிலிலே தூங்க ஆரம்பித்தோம். ஒருத்திக்கு நித்திரை வரவில்லை என்று, மற்றவர்கள் இருவரையும் தூங்க விட்டாளா..........? இல்லவே இல்லை...
இப்படித் தான் ஒவ்வொரு நாளும் உறங்குவதற்கு 2, 3 மணி ஆகும்...
எப்படியோ.............. Farm Ville கூட எங்களுக்குள் சண்டை வரக் காரணமாகிவிட்டது. நல்ல வேலை அந்தக் கோபம் எல்லாம் பதினைத்து நிமிடங்கள் தான், இல்லை என்றால் ஒரு அறையில் அவர்கள் இருவரும், நாங்க மூவரும் கதைக்காமல் இருந்திருப்போமே........
வழமையாக இருவருக்கு ஒரு கட்டில், மூவருக்கு இருகட்டில் ஒன்றாகத் தான் போடப் பட்டிருக்கும், இனி எப்படி
நண்பிகள் யாவரும் ஒரே அறையில் வசிக்க வேண்டும் என்பதட்கால நாங்க போட்ட நாடகமே நாங்கள் மூவரும், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கக் காரணமானது....
பேச்சு எச்சாகி சண்டையாகியது வியப்பானது, காரணம் இப்படிப் பல பிரச்சனைகள் நடந்தாலும், அதை நாங்க பெரிதாக எடுப்பதில்லை. ஆனால் இந்த Farm Ville இப்படி இரு பிரச்சினையக் கிளப்பும் என்று நாம் நினைக்கவே இல்லை...

பி.கு: படங்கள் எனது தோட்டத்தில் எடுக்கப்பட்டவை...

Thursday, October 8, 2009

சிறியவை...

*******************************
மேகங்களின் சேரல்
மழையானது
காதலின் சேரல்
என்னவானது?
*******************************
சந்திப்புகளுடன்
கலைந்த அவள்
வாழ்க்கை
முதல் சந்திப்பிலேயே
அரும்பானத்தை
யாரறிவார்
******************************
உன் மீதான
என் நட்பு
எப்படிப் பிரித்தது
உன்னுடனான அவள் நட்பை...
*************************************
நீலாம்பரி ராகத்தினாலான
பாடல்களே
தூங்க வைக்கும் என்பர்..
உனைப் பற்றிய பாடல்களும்
தூங்க வைத்தடி - என்னை
கனவிலும் நீ வருவாய்
என்ற நம்பிக்கையில்...
***********************************

Tuesday, October 6, 2009

காதல் வராதா?

தன் கையே தனக்குதவி என்று
எல்லாம் என் செயல் என்றவன்
எல்லாம் அவள் செயல் என்றானே

அம்மா என்றெல்லவா அழைப்பான்
இன்றென்ன மாற்றமோ
அஞ்சலி என்கிறான்

அவனால் தொலைபேசி தூக்கப் படுவதே
அவன் அம்மா அழைத்தால் மட்டுமே
அது நேற்று வரையா...?
நான் அழைக்காவிட்டால்
யாரடா அழைப்பால் அவளை
என்கிறான் இன்று

காதலிக்கிறாயா?
என்று ஏளனம் செய்தவனா - இன்று
காதலியை பகல்க் கனவில் காண்கிறான்


கடவுள் நம்பிக்கை
இல்லாதவனே
அழைக்கிறான் "கடவுளே"
காதல் வராதா என்னுள்ளே என்று
புலம்புகிறான் இன்னொருவன்..........

Sunday, October 4, 2009

இவ்வுலகம்

பிடித்த சிலரிடமிருந்து
கிடைத்த உன் முகவரி
என்னுள்ளே
சிறிய ஈர்ப்பை
ஏற்படுத்தியதால் - நான்
இங்கே இக்கவிதையுடன்

எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல் அறிமுகமான உன்னை
தினமும் சந்திக்க
துடித்தேன்
பலர் தடுத்த போதும் கூட

பல உறவுகள்
உன்னால் கிடைத்தது எனக்கு
அவை யாவுமே
மறக்க முடியாதவை என்னால்
எதிபார்ப்புகளற்ற அந்த
உறவுகளால்
நன்றி சொல்கிறேன் உனக்கு

சந்திப்புகளால் நிரப்பப்பட்டது
வாழ்க்கையானாலும்
சந்திப்புகள் அமைக்கப் பட்டும் விதம்
வித்தியாசமானதே தவிர்க்கப் படைக்க் கூடியவையுமே
நீ கொடுத்தாய் சந்திப்புகளை
தவிர்க்க முடியாத
அற்புதமான உறவுகளினூடு

பதிவுலேகே - நீ
கற்றுத்தந்தது
அளவிட முடியாதது
அளவிடப் பாடவும் கூடாது
நன்றி ஒன்று மட்டுமே
சொல்ல முடிகிறது உனக்கு

தேடலுக்கான முக்கியத்துவம்
உள்ளுனர்வுக்கான வெளிப்பாடு
சிந்தனைக்குள்ள வலிமை
யாவுமே உன்னால்
வெளிக்காட்டப் படுவது
உனக்கான சிறப்பே -
எனக்கானதல்ல..

தேவையானது - உன்
உறவு எப்போது
என் வாழ்க்கை வட்டப் பாதையில்..

Wednesday, September 30, 2009

கணிதம் பொய்யாகிறது..

என்ன பயந்திட்டீங்களா? தலைப்பு அப்படியானாலும் நான் இங்கே சொல்ல வரும் விடயமே வேறு..


முன்னைய காலத்திலேயே அதிகமான சித்திரங்களை நோக்கியிருந்தாலும், பதிவுலகில் நான் இல்லாததினால் அந்த சித்திரங்களை இது தாங்க. கணித் இப்படிப் பின்னர் இரண்டு படங்கள் மாத்திரம் சிக்கியுள்ளன. இதோ உங்களுடன், ஏன் இவை கணித ரீதியில் தவறானவை என்று பார்க்கலாம் வாங்க...

இந்த சித்திரத்தில் நீரருவி ஒன்று உள்ளது, அதைக் கண்டுபிடித்தவுடன், அந்த நீர் எப்பாதை வழியே செல்கிறது என்பதையும் தெளிவாகப் பாருங்கள். அந்த நீர் மீள மீள சுற்றிக் கொண்டிருக்கின்றமை புரிகிறதா? ஒரு பட்சில்லின் உதவியுடன் நீரானது கடத்தப் படுவது இயல்பாக இருந்தாலும், உண்மையிலே கணிதத்தின் படி, நீர் சம பாதையிலோ அல்லது மேலிருந்து கீழோ தான் செல்லுமே தவிர, கீழிருந்து மேலாக செலுத்தப் பட முடியாது எந்த வித பிரவிசைகளையும் பிரயோகிக்காதவிடத்து . இந்த சித்திரத்தில் மேலிருந்து விழுகின்ற நீரானது மறுபடியும் மேலே செல்வதாக வரையப் பட்டிருக்கிறது. அந்தக் கட்டடத்தின் தூண்களை நன்கு அவதானித்தீர்களாயின் நீரானது கீழிருந்து மேலாக செல்கின்றமையை அவதானிப்பீர்கள்.

இது தாங்க, இந்தப் படத்தில் பிழை. ஆரம்ப காலத்திலேயே, கணிதத்துக்கும் சித்திரத்துக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று நினைத்திருந்தேன், ஆனால் இப்போது தான் புரிந்தது, முன்னைய ஓவியர்களில் பலரும், இப்போதைய ஓவியர்களும் கணிதத்தின் உதவியுடன் தான் ஓவியங்களை வரைகிறார்கள் என்று. ஆனால் அது இந்த சித்திரத்தில் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருந்தாலும், பார்ப்பவர்கள் இதைக் கவனிக்க மாட்டார்கள் (நாங்கள் தான் எத்தையுமே உன்னிப்பாகப் பார்ப்பத்தில்லையே.. அப்ப நீ எப்படிப் பார்த்தாய் என்றீங்களா? அது சும்மா, இப்ப தான் எல்லாவற்றையுமே உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது..)
இப்படியான பல சித்திரங்கள் இருக்கலாம், இப்பவே தேடத் தொடங்குங்க..


மறைந்திருப்பவை என்ன?

1.
2.


3.
4.
5.
6.

இந்தப் பாடங்களில் என்ன பார்த்தீர்கள்...?






படங்களைப் பெரிது படுத்திப் பாருங்கள். கண்டுபிடிக்க முடியல்லையா, கீழே வாங்க..






  1. ஜேசுவின் முகத்திலே பல போதகர்கள் இருக்கிறார்கள்.

  2. அந்த மரத்துக்கு அருகில் பாருங்க ஒரு முகம் இருக்கிறது.

  3. ஜேசுவின் முகத்திலே மக்கள் கூட்டமும் ஒரு வழிப் போக்கனோ, செய்தி கடத்துனரோ குதிரையில் இருக்கிறார்.

  4. இது கடற்கரையின் ஒரு பாகமாக இருந்தாலும், அந்த பாறை குதிரையின் முகம் போல தெரிகிறது பாருங்க..

  5. அந்தப் பனி மேடையில் பல குதிரைகள் அணியாக நிற்பது தெரிகிறதா?

  6. அந்த எலும்புக் கூடை கவனமாகப் பாருங்கள், இரண்டு சிறுமிகள் ஒரு நாய்க் குட்டியுடன் இருக்கிறார்கள்

வெண்மையான பகுதியைத் தெரிவு செய்து பாருங்கள்...

பி.கு:

இவ்வாறான படங்களை ஆங்கிலத்தில் optical illusion என்பார்கள். தமிழில் எப்படி சொல்வார்கள் என்று யாருக்காவது தெரிந்தால், கூற முடியுமா? தமிழ் தெரியாதா உனக்கு என்று பலர் கேக்கிறீர்களா? இந்த சொல் எனக்குத் தெரியாது. அதனால் தான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்....

Saturday, September 26, 2009

சந்திப்பு


பார்வைகளால் மோதும்
சந்திப்பு
ஈர்ப்பு

கேட்டலில் மெருகேறிய
சந்திப்பு
கவி

இதழ்களின் நெருங்கிய
சந்திப்பு
முத்தம்

மெய் திருடிய
சந்திப்பு
காமம்

நுகர் வாசனைகளின்
சந்திப்பு
பூந்தோட்டம்

இவையுடன் சேர்ந்த
மனங்கள் இடம் மாறும்
சந்திப்பு
காதல்

Tuesday, September 22, 2009

சந்தோசம்

இது ஒரு சதாப்தம் முடிந்து தொடங்கும் பதிவு, அதனால் இன்பமான ஒரு விடயம் எழுதலாமே என்று ஆரம்பிக்கிறேன். கவிதையை வாசித்திவிட்டு இது உண்மையிலையே சந்தோசமான கவிதை தானா என்ற சந்தேகம் வந்தால் நான் பொறுப்பல்ல.

வாழ்க்கையில்
பலர் எதிர்பார்க்கும்
அற்புதமான
வசந்தம்
சந்தோசம்

சிலர் வாசலை
மட்டுமே தட்டும்
அறிய
பொக்கிஷம்
சந்தோசம்

வாழ நினைப்பவனை
பணத்தைக் காட்டியே
கொள்ளும்
பேய்
சந்தோசம்

வாழ்க்கையே
ஒரு பகுதி என்று
பலர் சொன்னாலும்
சிலர்கையைஈதொடாத்
........................................
சந்தோசம்

பி.கு: இடைவெளியில் ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ,
வசனத்தையோ இட்டு கவிதையை நிறைவு செய்க...

Monday, September 21, 2009

சதம் அடிச்சச்சோ...


என்னடா இது என்று பாக்கிறீங்களா.....................

இது தான் என்னுடைய நூறாவது பதிவுங்க. நம்ப முடியல்லையா (நம்பித் தான் ஆகணும்...)

நான் இந்த நூறாவது பதிவை எழுதிறதுக்கு காரணமா இருக்கிறவர்களே இந்தப் பதிவுலகத்தினர் தான். எனக்கும் ஒரு பதிவகர் என்ற அங்கிகாரம் கொடுத்து எழுத வைத்தவர்கள் பலர். அவர்களை எல்லோருக்கும் நன்றி... அவர்களது ஆதரவு இல்லை என்றால் இந்தப் பதிவே இருந்திருக்காது..


இது எனது நூறாவது பதிவாக இருந்தாலும், நான் எழுதியவை பல அர்த்தமற்றவை என்பது தான் உண்மை. நல்ல பதிவுகள் என்று பார்க்கப் போனால் விரல் விட்டு எண்ணக் கூடியனவாகவே இருக்கும்.


பதிவுலகம் எனக்குப் புகட்டிய பாடம் பல, என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக தன்னை மாற்றிக் கொண்டதும் அதுவே... எந்தக் காரணத்தைக் கொண்டும் தன்னை நான் மறக்கக் கூடாது என்பதற்காக நிறைய அனுபவங்களைத் தந்துவிட்டது.


என்னையும் எழுதத் தூண்டும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்..


Sunday, September 20, 2009

அநாதை

யாரும் அநாதை
இல்லை என்பதற்காகவே
ஒருவனுக்கு அம்மா அப்பா
என்ற உறவு
என்றான் இறைவன்
பாசத்துக்கு கோயில்
கட்டு என்றான் அவன்
இங்கோ..............

அம்மா அப்பாவால் வந்த

ரத்த உறவுகளை

உடன் பிறப்பாக்கியதால்

காரணமே இல்லாமல்

உறவுகளின் எண்ணிக்கை

அதிகரித்தது

பாசமே பணம் கொடுத்து

வாங்கும் பொருளானது

தரும் பணமும்

பாசத்துக்காய் என்றது

அந்த அறியா மனது

காவலுக்கு விட்டவனே

கூட்டிக் கொடுப்பவனானான்

வாங்கிய கடனை

மீட்க்க முடியாத

அவனால் உறவுகளுக்குப் பணம்

கொடுக்க முடிந்தது

மனைவியைத் தவிக்க

விடவும் முடிந்தது

பணத்தால் ஆரம்பமான

சண்டை

பாசத்துக்கு கட்டுப்பட

மறுத்தது

பணத்துக்காக சேர்ந்த

உறவு தானே

பாதியிலே போனது

மீண்டும் பணம் வரும் வரை...............

பி.கு: இது பாசத்தையோ, பணத்தையோ கொச்சைப் படுத்தும் நோக்கமல்ல. இப்படியும் நடக்கின்றன என்பதற்காகத் தான்.

Saturday, September 19, 2009

முற்காலப் பதிவு


எனது கடந்த பதிவு தொடர் பதிவு என்பதை மறந்துவிட்டேன். அதனால் நண்பர்களை அழைக்கவும் தவறிவிட்டேன். கவலைப் படாதீங்க... இவங்க தான் இந்தப் பதிவைத் தொடரப் போறவங்க.....
பதியப் பார்வையிட... முக்கியமாக இந்த திடர் சங்கிலியில் இணைக்கப் பட்டவர்கள்...

காதல், அழகு, கடவுள், பணம் ஆகியவை பற்றிய உங்கள் கருத்து என்ன என்பதைப் பகிர்ந்துகொள்ள நான் அழைப்பவர்கள்..

லோஷன் அண்ணா - இவரைப் பற்றி சொல்லனும் என்றால்.................... இவர் ஒரு சகலகலாவல்லவர்...

சுபாங்கன் அண்ணா - எல்லோருடனும் சகயமாகப் பேசக் கூடியவர். நல்ல தேடலாளர். ஆனாலும் இந்தப் பதிவில் தேடலை விசுத்து சொந்த அனுபவத்தைத் தருவதற்காக அழைக்கிறேன்...

தேவா அண்ணா - வைத்தியராக இருந்தாலும் நன்றாகவே காதல்க் கவிதைகள் எழுதுவார், காதலைப் பற்றிய இவர் கருத்து என்ன என்பதையும் பார்க்கலாமே..
தொடரட்டும் உங்கள் பணி...

காதல், அழகு, கடவுள், பணம் - நினைவில் இருப்பவை...

தொடர் பதிவு ஒருவகை உத்தி - காரணம், நம்மளை மாட்டி விடுபவர்களை நாம் மாட்டி விட எங்களுக்குக் கிடைக்கின்ற அறிய சந்தர்ப்பம். நான் இப்போ சொன்னது போல வழமையாக நான் தான் சதீஸ் ஐ வம்பில் மாட்டி விடுவேன், இப்போது அவர் என்னை மாட்டி விட்டுவிடர். அது தாங்க என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்ததே அந்தப் புண்ணியவான் தான்..

ஒருவர் கேட்டு அதை உடனே செய்யவில்லை என்றால் அவரது மனம் கஷ்டப் படுமே அது தான் பதிவை உடனேயே போட்டு விடலாம் என்று தொடங்கிவிட்டேன்..(உண்மையான காரணம் யாருக்குத் தெரியும் - புனித ரமழானின் காரணத்தால் பல்கலைக்கழகத்தில் ஏழுநாட்கள் விடுமுறை... அது தான் உடனேயே பதிவு போடுவதற்குக் நேரம் கிடைத்தது.)

காதல்

இந்த வார்த்தை தான் இந்த உலகம் முழுவதும் பரவி வாழ்கின்ற ஒன்று... யாரையாவது பார்த்து நீங்கள் காதலிக்கிறீர்களா என்றால் இல்லை என்பார்கள், இல்லை என்றால் ஆம் என்பார்கள்.. இல்லை என்பவர்களிடம் ஏன் நீங்கள் உங்களுடைய அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தங்கை, தம்பி யாரையுமே காதலிக்கவில்லையா என்றால், அது வேறை இது வேறை என்பார்கள்.. திருமணம் என்று பார்க்கப் போனால், காதல் திருமணம் என்ற பெயரில் கல்யாணம் முடிந்து, அதற்கு அப்பால், சண்டைகளே வாழ்க்கையான பல யோடிகளைப் பார்த்திருக்கிறேன். அதை எல்லாம் பார்த்து காதல்த் திருமணம் செய்தால் இது தான் நிலை என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்; ஆனால் என்னைப் பொறுத்த வரை இது காதலாகவே முடியாது, எதோ ஒரு ஈர்ப்பின் காரணமாக் ஒன்று சேர்ந்த யோடிகள், குடும்பம் என்று வரும் போது வருகின்ற கஷ்டங்களால், அன்பை விற்று விற்றுவிடுகின்றன.
காதல் எந்தக் காலகட்டத்திலும் அன்பால் மட்டுமே நிரப்பப்பட்ட ஒன்று, ஆனால் அதே அதிகமானால் எதிபார்ப்புகலாலேயே அருந்துவிடுக்கிறது (நிறையக் காதலர்களைப் பார்த்த பின் எடுக்கப் பட்ட முடிவு.)


அழகு
அழகாய் ரசிக்கலாம், ஆனால் அபகரிக்க நினைக்கக் கூடாது என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்; அது உண்மை தான். மனிதன் என்பவன் எவ்வளவு அழகாய் அடைத்திருந்தாலும் அதை விட அழகானதை அடைய வேண்டும் என்று நினைப்பவன், ஆனால் இயற்கையில் எவ்வளவு அழகான விடயங்கள் இருக்கின்றனவே, அதை சேமிக்க வேண்டும் என்று நினைத்ததே கிடையாது. எல்லா அழகையும் விட இயற்கையின் அழகே என்னை அதிகம் வசப்படுத்துவது, காரணமே இல்லாமல் இரசித்து அம்மாவிடம் ஏச்சு வாங்கிய நாட்கள் பல (எமிலாந்தாமல் நடந்து வா சிந்து என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள்.) இப்போதும் நண்பிகளிடமும் ஏச்சு வாங்குவதுண்டு.

கடவுள்
எம்மை மீறிய சக்தி, நமக்காகவே படைக்கப் பட்ட சக்தி, வாழ்க்கையின் பயங்கரத்தை உணர்த்தும் சக்தி...என்னைவிட அதிகமாக நம்புகின்ற ஒருவர் கடவுள் தான். எதற்காகவும் விட்டுக் கொடுக்காத ஒருவரும் அவரே.. கடவுள் ஒருவர் என்ற நோக்கத்துடன், எல்லா ஆலயங்களுக்கும் செல்வது என் வழமை. எல்லா விடயங்களையும் நான் பகிர்ந்து கொள்வதும் அவரே. அடிக்கடி நான் கேட்டவற்றைக் கொடுக்காவிட்டால் சின்னச் சின்ன சண்டைகளுடன் தொடர் கதையாக நிகழும். நான் தவறு செய்ததினால் தான் கடவுள் நான் கேட்டதைத் தரவில்லை என்ற நம்பிக்கையில் அவர் மீதான நம்பிக்கை இப்போதும் பெருகிக் கொண்டே செல்கிறது. எந்தக் கால கட்டத்திலும் அன்பு செலுத்தப் பட வேண்டியவர் என்று அடிக்கடி நினைப்பேன். எவெரேனும் கடவுளைக் குறை சொன்னால் அவர்கள் மேல் தான் தப்பு என்பதைப் புரிய வைப்பதில் முன்னிட்பேன்.

பணம்
இது இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய புண்ணியவானாக இருந்தாலும் வாழ முடியாது. பணமா குணமா என்று கேட்க்கப்படும் கேள்விக்கு அதிகமானவர்களின் பதில் பணமாகவே அமைகிறது. பணம் இல்லாத காரணத்தால் மட்டுமே பலர் பலரால் புறக்கணிக்கப் பட்டத்தை என் வாழ்நாளின் பல பாகங்களில் கண்டிருக்கிறேன். பணம் இல்லாததால் நான் அனுபவித்த துன்பங்களும் பல (இதானால் குணத்துக்கு நான் முன்னுரிமை கொடுக்கவில்லை என்று நினைக்க வேண்டாம் - எனக்கு இந்த இரண்டுமே வேண்டும் என்பது தான் உண்மை..)வாழ்க்கையின் எந்த மூளையையும் இது தட்டும் வரை மக்களிடையே பிரச்சனை தான். உறவுகள் பாசத்தால் இணைக்கப் பட்டவை என்று கூறுவதெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது (அதற்காக எல்லா உறவுகளையும் சொல்ல வரவில்லை...) இப்போதெல்லாம் சில உறவுகள் பணத்தை நம்பியே என்பது தான் உண்மை...

Thursday, September 17, 2009

நன்றி சொல்ல ...................

எனக்கும் விருதா..............?
அதிசயம் ஆனால் உண்மை என்று பத்திரிகையில் படித்து தான் தெரிந்த எனக்கு, இந்த வலையுலகத்தில் பல அதிசயங்கள் நிகழ்ந்துவிட்டன (இந்த
விருதுகளைத் தான் சொன்னேன்....)
எனக்கு சந்ரு அண்ணா ஒரு விருது கொடுத்து இருக்கிறார். எதுக்காகக் கொடுத்தார் என்று என்க்குத் தெரியாது. அவருக்கு ஒரு நன்றி சொல்லாவிட்டால் எப்படி.. நன்றி அண்ணா....

இந்த வலையுலகத்தில் என்னையும் ஆர்வப்படுத்தப் பலர் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது ரொம்பவே சந்தோசமா இருக்கிறது. விருதில ஒரு சொல் "scrumptious" இந்த சொல்லை நான் சாப்பாட்டுக்குத் தான் அதிகமாகப் பயன்படுத்துவேன். (என்னடா இவள் சாப்பாட்டைப் பற்றியே அதிகம் நினைப்பீர்களோ? என்று கேக்கிறீங்க என்று புரிகிறது.) ஆனால் விருதில போட்டிருப்பதன் அர்த்தம் வேறாக இருந்தாலும், இந்த சொல்லைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது சாப்பாடு தான் (உண்மையை சொல்லி இருக்கிறேன், நம்புங்க..)


இந்த விருதை இன்னும் பத்து பேருக்குக் கொடுக்கணுமாம், ஆனால் நான் இதை ஆறு பேருக்குத் தான் கொடுக்கப் போகிறேன். அவங்க இவங்க தான்.......

தமிழ்த்துளி
அருண் பிரசாத்
ஹிஷாம் முஹம்மத்
கலை - இராகலை
வதீஸ்வருணன்
கார்க்கி

பி:கு: நான் ஆறு பாருக்குத் தான் விருது வழங்கி இருக்கிறேன் என்பதற்காக் நீங்களும் ஆறு பேருடன் நிறுத்தி விடாதீங்க. பத்து பேருக்கு கொடுங்க.

Sunday, September 13, 2009

ஆண்.... பெண்

என்ன தலைப்பே வில்லங்கமாக இருக்கிறது என்று பாக்கிறீங்களா? இவங்க இரண்டு பேரும் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லையே.. வாழ்க்கைக்கு முக்கியமானவர்கள் சந்திக்கின்ற போது ஏற்படுகின்ற பிரச்சனைகளே (பிரச்சனை மட்டுமா என்று கேக்காதீங்க) வாழ்க்கையின் பெரிய பகுதியை அடக்கி விடுகின்றன..

முதலாவதாக சொன்னதெல்லாம் சும்மா.. இப்ப விடயத்துக்கு வரலாம். எனக்கு ஒரு சந்தேகம் நீண்ட காலமாக இருக்கின்றது. அதை முன்வைக்க இது ஒரு சிறந்த இடம் என்பதால் தான் இந்தப் பதிவு. கேள்வி இதோ..?

பெண்கள் ஆண்களுடன் கதைப்பது தவறா? (இது தாங்க கேள்வி....)

பழகினா என்ன நடக்கும் என்று நான் சொல்றேன், சரியா தவறா என்று நீங்க சொல்லுங்க...

பழகினால் இரண்டு விடயங்கள் நடக்கலாம்..

  • பார்ப்பவர்கள் தப்பாகப் பேசுவார்கள்.. (எப்படியா) அவங்களையே கதை கட்டி மற்றும் பலருக்கும் சொல்வார்கள் (இது தான் அவர்களுடைய தொழிலாகவும் சிலர் கருதுவார்கள்) எப்பவுமே பெண்கள் ஆண்களுடன் கதைத்தால் அவர்களை எதிர் மறையான கோணத்தில் பார்ப்பது எங்கள் சமுதாயத்தினருக்குப் பழக்கமாகிவிட்டது. நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் பழகுபவர்களைக் கூட தப்பாகப் பார்க்கும் நல்ல உள்ளங்கள்.. எல்லோரது பார்வைகளும் வித்தியாசமானாலும், இந்த விடயத்தில் ஒன்றாக்குவது ஏன்?
  • பழகுபவர்களே தப்பாக நினைக்கிறார்கள். ஒரு பெண் ஒருவனுடன் சிரித்துப் பேசினால் அதை அவன் தப்பாகப் புரிந்து கொள்வான் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். அப்போதெல்லாம் தெரிவதில்லை, இப்போது சிந்திக்கும் போது அது தான் உண்மை என்று இப்ப தான் புரிகிறது. இதற்குக் காரணம் பெண்களாகவும் இருக்கலாம் என்பது என் கருத்து. ஒருவன் நல்ல பேசினால், அவனுடன் பேசிக் கொண்டிருப்பாங்க. அவள் பேசுவதை அவன் தப்பாகப் புரிந்து கொள்வான். அடடா இந்தப் பொண்ணு என்கூட நல்ல பேசுகிறாளே. அதனால இவள் என்னைக் காதலிக்கிறாளோ.. என்ற பல கேள்விகளுடன் திக்கி திணறி கடைசியாக அவங்க காதலிக்கத் தொடங்குவார்கள்... அங்க தான் பிரச்சனையே ஆரம்பம். அவள் பழகிய விதம் அவளுக்கு சரியாக இருந்தாலும், அவனுக்கு அது அசாதரணமாகவே தான் இருக்கிறது. காதலிக்க ஆரம்பித்தவனால் எப்படி விட முடியும்.. (அது கூட ஒரு வகைப் பிரச்சனை தான்).

இப்படி இரு வேறு வழிகளால் பிரச்சனையாகவே வருவதால், பெண்கள் ஆண்களுடன் கதைப்பதை நிறுத்தி விடலாமா?

இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தர முடியுமானவர்கள் தரலாம்....

பி.கு: இத்தளத்தை அதிகமாக ஆண்கள் வாசிப்பதால், உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப் படுகின்ரான..

Thursday, September 10, 2009

சாலையோரம்


புதுமைப் பெண்ணிவள் என்று
பலர் சொன்னதனால்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
சென்ற அவளை
அன்று தலை குனிய
ைத்தவன் அவன்

யாருக்கும் அடங்காதவள்
இவள் என்ற கூற்று
பொய்யானது
அந்த சாலையோரத்தில்
யார் சொல்லியும்
குறையாத அவள் வீரம்
அந்தக் கணத்தில்

சாலையோர ஆண்களையே
குற்றவாளிகளாக்கும்
அவள் பார்வை
அன்று மட்டும்
குற்றவாளியாக்கியது
அவன் பார்வை
அவள் மீது பட்டதாலா...................?

Sunday, September 6, 2009

காண்பதெல்லாம் கனவா?

வருகைக்காகக் காத்திருந்த நாள் போய்
நினைவுகள் மட்டுமே இன்று
என்று நினைத்தேன்
அவையும் கனவாகினவோ...

வாழ்க்கை என்பது
எது எனப் புரிகையில்
நடந்தவை கனவு தான்
எனக்கிது நிஜம்

காரணமில்லாத பேச்சு
கரிசனையாக அமைய
காதல் என்ற
கருத்து நம்மிடையே...

Saturday, August 22, 2009

வார்த்தை இல்லை சொல்ல..

காலத்தைக் காரணம் காட்டிய - நீ
காலம் சேர்த்து வைத்த
நம்மை நினைக்காதது
உன் தவறே
என்கிறாயா...

நினைவுகளுடன் இருந்த என்னை
நிஜங்களுடன் இணைக்க
நினைத்த நீயா
கனவென மறந்தாய் அனைத்தையும்
என்கிறாயா....

கனவுகள் மறந்தாலும்
நனவுகள் மறவாது
என்று
வசனம் பேசிய உன்னால்
நனவையே கனவாக்க
முடிந்ததேயானால்
நிஜத்துக்கு ஆதாரம்
என்னவென்று கேட்கிறாயா
பதில் இல்லை என்னிடம்

Thursday, August 20, 2009

யாரை நம்ப...

அனைத்தையும் அடையலாம்
நட்பால் என்று
உன்னைக் கண்டதுமே
நினைக்கத் தோன்றியது
எல்லாமே பறந்ததடி
உன் காதால்
பொய்யே உருவானாய்
காரணமே இலலாமல்

சாதாரனமாகின - உன்
பொய்ச் சத்தியங்கள்
அதையும் நம்பினர் - நம்
நண்பிகள்
காரணமே இல்லாத - உன்
மாற்றத்துக்கு காரணம் தேடின
அந்த நல்ல

நகரம் நரகமாக்கியது
உன் நுழைவால்
காரணமற்ற பேச்சுகள்
உன் சார்பில் எழுந்தாலும்
பேச மறுத்தன நம் உதடுகள்
பிடிக்கவில்லையடி - உன்
முகம் காண
தெரியவில்லையடி - உன்னைத்
திருத்தி எடுக்க

அறியாமல் செய்த தவறு
எவராலும் திருத்தப் படலாம்
அறிந்தே செய்த தவறை
யார் சொல்லித் திருத்த
முகம் காண ஆசை என்று
நீ விடுமுறையில் அனுப்பிய
sms ஐ அழிக்க முயல்கிறேன்
முடியாதவளாகிறேன்
எனக்கு பல நண்பிகள்
இருக்கிறார்கள் என்ற ஒரே
காரணத்துக்காக......

யாரை நம்ப...

அனைத்தையும் அடையலாம்
நட்பால் என்று
உன்னைக் கண்டதுமே
நினைக்கத் தோன்றியது
எல்லாமே பறந்ததடி
உன் காதால்
பொய்யே உருவானாய்
காரணமே இலலாமல்

சாதாரனமாகின - உன்
பொய்ச் சத்தியங்கள்
அதையும் நம்பினர் - என்
நண்பிகள்
காரணமே இல்லாத - உன்
மாற்றத்துக்கு காரணம் தேடின
அந்த நல்ல

நகரம் நரகமாக்கியது
உன் நுழைவால்
காரணமற்ற பேச்சுகள்
உன் சார்பில் எழுந்தாலும்
பேச மறுத்தன நம் உதடுகள்
பிடிக்கவில்லையடி - உன்
முகம் காண
தெரியவில்லையடி - உன்னைத்
திருத்தி எடுக்க

அறியாமல் செய்த தவறு
எவராலும் திருத்தப் படலாம்
அறிந்தே செய்த தவறை
யார் சொல்லித் திருத்த
முகம் காண ஆசை என்று
நீ விடுமுறையில் அனுப்பிய
sms ஐ அழிக்க முயல்கிறேன்
முடியாதவளாகிறேன்
எனக்கு பல நண்பிகள்
இருக்கிறார்கள் என்ற ஒரே
காரணத்துக்காக......

Wednesday, August 19, 2009

இனி என்ன இருக்கிறது சொல்ல..

தலைப்பு வில்லங்கமாக இருந்தாலும் சொல்ல "நன்றி" என்ற வார்த்தை இருக்கிறதே என்பது தான் உண்மை. எதற்காக இந்த நன்றி என்று கேக்கிறீங்களா? எனக்கும் ஒருவர் விருது வழங்கி இருக்கிறார். சுவாரசியமான வலைத்தளம் எனக்குத் இந்த விருதை பதிவர் சுபாங்கன் அவர்கள் (மரியாதை என்று நினைக்காதீங்க) எனக்குத் தந்திருக்கிறார் (உண்மையாவா என்று என்னைக் கேக்காதீங்க). நன்றிகள் கோடி...




இந்த விருதைப் பதிவர் செந்தழல் ரவி அவர்கள் ஆரம்பித்து வைத்தாலும் எனக்கு இதனை வழங்கியவர் மாண்புமிகு(சும்மா build up தான்) பதிவர் சுபாங்கன் தான். இந்த விருது எனக்கு கிடைத்துள்ளது என்று நினைக்கும் போது பெருமையாக இருந்தாலும், என்னுடன் விருது வழங்கப் பட்டவர்களின் தளங்களைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது.
இந்த விருதை மேலும் ஆறு பதிவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கடைப்பாடு எனக்கு இருப்பதால் எனக்குத் தெரிந்த நல்ல பதிவர்கள் அறுவருக்கு இந்த விருதை வழங்கலாம் என்றிருக்கிறேன்.

பிரபா

புதிய பல விடயங்களை அலசி ஆராய்வதில் இவருக்கு ஆர்வம் அதிகம். அது மட்டுமல்லாது தான் அறிந்த விடயங்களை மற்றவர்களுக்குத் தெரியப் படுத்துவதும் இவர் வழமை.

பிரசாத்

இவர் ஒன்றுக்கும் சளைத்தவர் அல்ல என்று பல இடங்களில் நிறுபனமாகி இருக்கின்றன. பேய்களைப் பற்றி ஆராய்வதில் இவருக்கு உள்ள நாட்டம் யாராலும் விஞ்சப்பட முடியாது. இதற்காகப் புதிய வலைத் தளத்தையே உரிவாக்கியவர் இந்த வல்லவர்.

தேவா

வைத்தியர் என்ற காரணத்தைக் காட்டி நோய்களைப் பற்றி எழுதும் இவர் கவிதைத் தொடர்களுக்கு நான் அடிமை.

ஹிஷாம்

வேலைப்பளு காரணமாகவும் சில பிரச்சினைகளின் காரணமாகவும் இப்போது இவர் பதிவிடுவது குறைவு, ஆனாலும் இவர் பதிவுகள் யாவும் ஏதாவது கருத்தை சொல்லும்.

வதீஸ்வருணன்

இவரும் இப்போது பேய்களைப் பற்றி எழுதத் தொடங்கியுள்ளார். நல்ல எழுத்தாளர். அதிக வேலை காரணமாக நான் இப்போது எழுதுவதில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்.

கார்க்கி

இவர் ஒரு சகலதுறை ஆட்டக் காரர். எல்லாவிதமான பதிவுகளையும் இவர் தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.

எப்படியோ ஆறு பேருக்கு விருதை வழங்கி இருக்கிறேன். நீங்களும் இந்த விருத்த அருவரிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Sunday, July 26, 2009

நினைவுகள்

பள்ளிப் பருவமா? இதைத் தான் நான் இப்போது அதிகமாக நினைத்துக் கொள்வேன், காரணமே இல்லாமல். எனக்கு இது இரண்டாவது தொடர் பதிவு. என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் சுபாங்கன் அவர்கள். நன்றிகள் கோடி (காரணம் என்னை எல்லாம் தொடர் பதிவுக்கு அழைக்கிறீங்க...)

பள்ளிப் பருவம் என்று எடுத்துக் கொண்டால் சொல்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கும், ஆனால் எதை சொல்வது என்று தெரியவில்லை.
பள்ளிப் பருவத்தின் ஒவ்வொரு வருடத்திலும் நிகழ்ந்த ஒவ்வொரு விடயங்கள் உங்களுடன் இப்போது...

நாட்டு சூழலின் காரணமாக அளவெட்டி, வலிகாமம் இலிருந்து இடம் பெயர்ந்து துன்னாலை, கரவெட்டி க்கு எனது நான்காவது வயதில் என் அம்மாவுடனும் அண்ணாவுடனும் வந்தேன். அழுகையுடன் ஆரம்பமான பாலர் பாடசாலை அறிமுகங்கள் இப்போதும் இனிமையான நினைவுகளாக (காரணம் கேக்கிறீங்களா என்னுடன் அப்போது படித்த நண்பர்கள் சிலர் இப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள்). கற்றல் என்பது என்ன என்று தெரியாத காலத்திலேயே கற்றது வேடிக்கையாக இருந்தாலும், அதுவே இன்றைய கல்விக்கு அத்திவாரம் என்கின்ற போது பெருமையாக இருக்கின்றது.

பாலர் பாடசாலையை முடித்த பின்னர், என் அண்ணா படித்த காசிநாதர் வித்தியாலயத்திலேயே என்னையும் அம்மா சேர்த்துவிட்டார். ஆரம்ப காலத்திலேயே அம்மாவுடன் பாடசாலைக்கு சென்றிருந்தாலும் பின்னர் அண்ணாவுடன் செல்லப் பழகிக் கொண்டேன்.

இரண்டாவது ஆண்டிலே வகுப்பறைகள் மாறுவது புதிய விடயம் - முதலாம் ஆண்டில் ஒரு வகுப்பில் விடுவார்கள், அப்புறம் ஒரு வருடத்தின் பின்னர் வேறு இடத்துக்கு மாற வேண்டும் . இரண்டாவது ஆண்டில் அது தான் முதல் அனுபவம், வகுப்பு மாறி அதற்காக எம்மைப் பழக்கப் படுத்த வேண்டும் (இங்க தாங்க எனக்கு பிரச்சனையே வந்திச்சு). என்னால் அந்த வகுப்பறையை சாதாரணமாகப் பழக்கப் படுத்திக் கொள்ள முடியவில்லை.

அப்புறம் மூன்றாவது ஆண்டு. அந்தப் பாடசாலையின் நடுத்தர ஆண்டு, நன்கே பாடசாலை பலகிவிட்டலும். தவணை முடிவில் அம்மாவின் பின்னர் நின்று கொண்டு தான் ஆசிரியரிடம் மதிப்பெண் அட்டையை வாங்குவேன் (ரிப்போர்ட்) (ஏனடி நீ அம்மாவின் சீலையை விட்டு எப்ப வெளியே வருவாய் என்று அதிபர் கேட்டது இப்போதும் மனதிலே...)

அப்படியா நான்காம் ஆண்டுக்கு வந்தாச்சு. முன்பெல்லாம் கோவம், நேசம் என்று பலருடன் சண்டை போடும் காலம். அப்படித் தான் ஒரு நடனத்துக்காக என் தோழியின் அத்தையின் உதவியை நாடினேன், சில நாட்களின் பின்னர் அவளுடன் கதைக்காமல் விடவே அவள் என் அத்தை தானே உனக்கு அன்று சேலை கட்டிவிட்டார், அதற்கான கூலியத் தா என்று (இப்போது நினைக்கையில் சிருப்பாக இருந்தாலும், அக்காலத்தில் அது பெரியதே....)

ஐந்தாம் ஆண்டு, ச்சொலர்ச்திப் (Scholarship), நாங்கள் படிப்பதை விட எங்கள் பெற்றோர்கள் தான் படிப்பார்கள். என்னை விட என் அம்மா கஷ்டப்பட்டார் என்று தான் சொல்லுவேன். எவ்வளவு தூரம் படித்தேன் என்று தெரியவில்லை, சித்தியடைந்ததால் வந்த பணம் மாத்திரம் என் படிப்புக்கு கை கொடுத்தது என்பேன்.

அந்நாளில் அதிகம் பேசாதவளாக இருந்தாலும் இந்நாளில் அதிகம் பேசுபவளாக மாற்றிக் கொண்டேன் (அப்படியே பேசாமல் இருந்திருக்கலாமோ என்று நினைப்பதும் உண்டு - முடிவதில்லை)
இப்படியே நீண்ட வாழ்க்கையில் இப்போது பல மாற்றங்கள். அந்த சிறு வயது வாழ்க்கையையே இப்போதும் விரும்புபவளாக இருந்தாலும்முடியாதவளாக..


இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பவர்கள்
ஹிஷாம்
சதீஷன்
கலை

பி.கு: இந்த பதிவுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. என் வாழ்க்கையிலே என்னால் மறக்க முடியாத பதிவு; காரணம் நான் முதன் முதலாக வீட்டிலிருந்து இந்தப் பதிவை எழுதியுள்ளேன்..

Tuesday, July 7, 2009

பயணம்

இந்தப் பயணம் ஒன்று தான் எப்போதுமே எங்களுடன் இருப்பது என்றாகிவிட்டது. நாங்கள் தவிர்க்க நினைத்தாலும் அதுவாக வந்து அமைந்துவிடும். பயணங்கள் பல காரணங்கள் இல்லாமல் ஏற்பட்டாலும், சிலருக்கு அது வாழ்க்கையாகவே அமைகிறது; குறிப்பாக தமிழர்களுக்கு.
ஏன் இதை எல்லாம் சொல்கிறாள் என்று நினைக்கிறீங்களா? காரணம் இருக்கிறது. வாழ்க்கையில் பல இடங்களுக்கு சென்றிருந்தாலும், வாழ்க்கையிலே எனக்கான மூன்றாவது முக்கிய பயணம் இப்போது நான் ஸ்ரீ லன்காவுக்குப் போவது தான்.
பயணம் ஒரு படிப்பனை. இதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
சொல்ல வந்த விடயத்தை சொல்லவில்லையே. நான் வரும் வியாழக் கிழமை ஊருக்குப் போகிறேன், இவ்வளவு நாட்களாக பறேட்சை காரணமாக வலைத் தளப் பக்கம் வர முடியவில்லை, இனி ஊருக்குப் போனால் பதிவுகள் குறைவாக இருக்கும் (இருக்காது என்று உண்மைய சொல்ல விரும்பல்ல), (என்ன நீ உருப்படியாவ எழுதிறியா, நீ எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஒன்று தான் என்கிறீங்களா?)
பயணம்
உறவுகளை
உருவாக்கவும்
உன்னதமாக்கவும்
உதவிய உன்னை
உதருவதா? உறவாக்குவதா?

உறவுகளின் வலிமை
உணர்வுகளின் தேடல்
உயிரின் மகத்துவம்
யாவையும் பரிசாக்கப் பட்டது
உன்னாலே...

Monday, July 6, 2009

மீண்டும் கிடைத்த பொக்கிஷம்

தவறுகள் எங்கு என்பதை விட
தவறைத் திருத்திக் கொண்டமையே
உன்னையும் என்னையும்
சேர்த்தது

நண்பர்களிடையே என்ன
பேதம் என்று நினைத்த காலம் போய்
எதிரிகளாகவே மாற்றப் பட்ட காலம்
யாராலும் மறக்கப் பட முடியாதது

நண்பர்களிடையே

அதிக பாசம்
நிரம்பிய நம்பிக்கை

இவை தான் மறுபடியும் நம்முடன்

யார் வந்தாலும் பிரியோமடி இனி
நம்முடன் எத்தனை உறவுகள் சேர்ந்தாலும்
நம் உறவு என்றுமே
நிலைக்கும் நம் வாழ்வின் இறுதி வரை...

Thursday, July 2, 2009

சந்தோசம்...

இந்த மாதம் நல்ல மாதமாக மாறி இருப்பதற்கு பல காரணங்கள்..

என்னடா இவள் பல காரணங்கள் என்றாளே என்கிரீன்களா?

என்ன செய்ய பல கவலையான நிகழ்வுகளை சுமந்து வந்தது இந்த 16 மாதங்கள்..... (என்ன எந்த வித சந்தோசமான விடயங்களும் நடந்ததே இல்லையா என்று கேக்கிறீங்களா.......... நடந்தன சந்தோசமான விடயங்களை விட சோகமான விடயங்களா அதிகமாக நடந்தன.

வாங்க காரணங்களைப் பாத்திடலாம்..


  • ஊருக்குப் போறேன்

  • அம்மா, அண்ணா ஆகியோரின் அருமை புரிந்த பின்னர் அவர்கள் இருவரையும் பார்க்கப் போகிறேன்.

  • அதிக நாட்களின் பின்னர் என் நண்பர்களைப் பார்க்கப் போகிறேன்

  • கொழும்பை நண்பிகளுடன் சுத்தியதில்லை. எங்கு போனாலும் உறவுக் காரர்களுடன் தான். இந்த முறை நண்பிகளுடன் ஊர் சுத்தும் வாய்ப்புக் கிட்டியுள்ளது

  • இங்கு வந்தவுடன் கோயிலுக்குப் போவது குறைந்துவிட்டது. அப்படி சென்றாலும் மன நின்மதி கிட்டியதில்லை. கோயிலுக்குப் போகவுள்ளதால் மனதில் இப்போதே ஒரு உற்சாகம் கிட்டியுள்ளது

  • பாடசாலை போகப் போகிறேனே. எப்பவுமே மறக்க முடியாத இடம்.

  • அம்மா அண்ணாவுடன் அலட்டிய நாட்களை மீண்டும் பெறப் போகிறேனே என்ற ஆர்வம் (எல்லா விடயங்களையுமே அலசும் இடம் என் வீடு, என் வீட்டில் என்ன கேட்ட விடயம் செய்தாலும் அதை சொல்லி மன்னிப்பு கேட்க்கும் பழக்கம் உண்டு அதனால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. என் அம்மாவின் கருத்துக் கணிப்பின் படி, வேறு ஒருவர் என்னையும் என் அண்ணாவைப் பற்றி அவரிடம் சொல்ல முன்னர் தன் பிள்ளைகள் தன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பார். - அது எனக்கு தப்பாகப் படவில்லை, அதனால் எல்லா விடயங்களையும் சொல்லி வாங்கிக் கட்டுவேன்.)

  • 16 மாதங்கள் நடந்தவற்றை வீட்டார்டன் பகிரப் போவதே இந்த மாதத்தில் தான்.

இன்னும் நிறைய இருக்கிறது, நீங்க நான் எழுதி இருப்பதைப் படித்து கஷ்டப் படுவது தெரிகிறது என்பதால் இவ்வளவும் போதும் என்றிருக்கிறேன். சந்திக்கலாம்...

காதலா...

காதலர்களைப் பார்த்து
நானும் காதல் கொண்டால்
என்ன என்று யோசிக்க நேர்ந்தது

காதலிக்கமலே பலரின்
காதலியாக்கப் பட்டது
யார் தப்பு....

சகோதரர்களையே
காதலர்களாகப் பார்க்கின்ற
இவ்வுலகத்தில்
பிறந்த - நான்
காதலிப்பது சரியானதா...
வேண்டாமடா...

Monday, June 29, 2009

சீக்கிரமாகவே பிரிவோமா..

சேர்ந்தால் பிரிவு நிச்சயம்
என்று தெரிந்துமே
பழக ஆரம்பித்தோம்
ஆனால்
அந்தப் பிரிவே
இவ்வளவு சீக்கிரமேவா..?

எதிர்பார்ப்பே இல்லாத
உறவுகளில் காதலும்
ஒன்று என்பார்கள்
ஆனால்
அந்தக் காதலுக்காக
பல எதிர்பார்ப்புகளை
விட்டு வரமுடியாதடா...?

Sunday, June 28, 2009

நேர மாற்றம்...

என்னடா இவள் நேர மாற்றம் என்றாலே என்று பாக்கிறீங்களா... ? கொஞ்சம் பொறுத்திருங்க காரணத்தை சொல்றேன்..
அப்படியே கீழ போங்களேன்,,,, (என் கல்லூரியில் நடக்கின்ற சோகக் கதை..)



















அது தாங்க பங்களாதேஷ் இன் அரசாங்கம் பங்களாதேஷ் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரித்துள்ளது (அது தான் இப்ப ஸ்ரீ லங்கா மற்றும் இந்தியா ஆக்கிய நாடுகளுக்கும் பங்களாதேஷ் க்குமான நேர இடைவெளி ஒன்றரை மணித்தியாலம் (ஆமா நேரம் அதிகரிப்பை எண்டா இவள் இப்ப சொல்றாளே என்று பாக்கிறீங்களா.. ஒரு முக்கியமான விடயம் வரப் போகிறதே...)
அது வேறை ஒன்றும் இல்லை. வெளிநாட்டவர்களில், காதலில் விழுந்தவர்கள் (அது தானுங்க காதலர்கள் இருப்பவர்கள்) படும் பாடு இருக்கே, கொடுமையுங்க.. என்ன அது என்று ஆவலா... அது வேறு ஒன்றுமல்ல. வழமையாக தெற்காசிய நாடுகளில் அரசாங்க வேலையாகவோ அல்லது கல்லூரிகளோ முடிவது கிட்டத் தட்ட ஒரே நேரமாகவே இருக்கும், ஆனால் இப்போது பங்களாதேஷ் இல் இருப்பவர்களுக்கு எல்லாமே முன்கூட்டியே முடிந்துவிட்டும்.. அதனால் காதலர்களுடன் chat பண்ணுகின்ற நேரங்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காதலர்களால் chat பன்னாவலும் இருக்க முடியாது, அதே நேரம் நேர அட்டவணையுடன் படிப்பவர்கள் நண்பர்களுடன் படிப்பவர்களுக்கும் கொஞ்சம் சிக்கல் தான். உதாரணமாக பங்களாதேஷ் இல் 3.30 pm என்றால் ஸ்ரீ லங்காவில் 2.00pm ஆக இருக்கும், அங்கே iruppavarkalaal sri lanka nerappadi 3.00 pm க்குத் தான் வர முடிகிறது, அப்போது பங்களாதேஷ் இல் 4.30 ஆகிவிடும் அதனால் செய்கின்ற வேலை எல்லாமே ஒரு மணித்தியாலத்தால் தாமதமாகிக் கொண்டே போகும். வள்ளியாக தேநீர் இடைவேளைக்கு முன் chatting முடியும் என்றால் இப்போதெல்லாம் இரவு உணவு நேரம் தான் முடிகிறது. இதாவது பரவாயில்லை எப்படியாவது வீட்டு வேலைகளை இரவு முளித்திருந்தாலாவது செய்வார்கள்.
வழமையாக 9.30pm இலிருந்து 11.00 pm மட்டும் chat பண்றவங்க பாடிருக்கே, அவர்களின் காதலர்கள் இப்போதும் வழமையான நேரத்துக்குத் தான் வர முடிவதால் பங்களாதேஷ் இல் 10.00 pm ஆகிவிடுவதால் ஒரு மணித்தியாலங்களே chat பண்ண முடிகிறது. ஏன் 11.00 pm க்கு அப்புறமாக chat பண்ணலாமே என்று நீங்க கேட்ப்பது புரிகிறது. அதுக்கும் காரணம் இருக்கே. எண்கள் கல்லூரியில் 11.00 pm க்கு அப்புறமாக கணணி பயன்படுத்த அனுமதி கிடையாது.
இந்த விடயத்தில் நான் அதிச்டசாளிங்க. எனக்குத் தான் காதலன் இல்லையே. அதனால் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிட முடிகிறது.
நண்பர்களுடன் இருக்கும் போது ஒரு தெம்பு எப்போதுமே எமக்குள்ளே இருக்கும். அது போதும் எனக்கு.. (காதல் அனுபவம் இருப்பவர்கள் எனக்கு அடிக்க வரக் கூடாது)

Saturday, June 27, 2009

கடவுளை எப்போதும் கும்பிடும் நீ
காதல் விடயம் பேசும் போது மட்டும்
கிட்டவே கடவுளைக் கூப்பிடாதது
கீழ்த் தரம் என்பதா...
குறும்புகளுடன் இருந்த நீ
கூறிய அம்பாக மாறியதற்கு காரணமும் அவனா
கெட்டவர்களானோம் உன் காதால்
கேட்பதற்கு யாரும் இல்லை என்றா
கையைப் பிடிக்கவே முடிந்தது
கொடுமையடி
கோடையில் இலையுதிர்வது போல
கௌரி யாக இருந்த நீ காந்தமாக அவனால் இழுக்கப் பட்டது தான் ஏனோ..?

Thursday, June 25, 2009

நினைவுகள்

நிறைய நாட்களின் பின் என் கிறுக்கலைப் படிக்க வந்தவங்களே... கவனம்...

பாடப் புத்தகம்
தூக்கும் நேரம் எல்லாம்
உன் நினைவு..
காரணம் கேட்கிறாயா
படிக்க வந்து தானே
உன்னைப் படிக்க ஆரம்பித்தேன்
*************************************
நித்திரைக்காக எதையுமே
தூக்கி எரியும் நான்
உனக்காக நித்திரையைத்
தூக்கி எறிந்தேன்
நித்திரை என்னுடன்
கோவித்துக் கிண்டு
வர மாட்டேன் என்கிறதடா...

பி.கு:பரீட்சை காரணமாக வலைத் தளப் பக்கம் வர முடியாமல் இருந்தது. (அப்படி எண்ணத்தைத் தான் படிச்சு கிளித்திட்டீங்க என்றெல்லாம் கேக்கக் கூடாது) இன்னும் பதினான்கு நாட்களில் வீட்டுக்குப் போக இருக்கிறேன், அதனால் இன்னும் ஒரு மாதத்துக்கு பதிவுகள் குறைவாகவே இருக்கும். அப்புறமாக வந்து பார்க்கலாம்..

Sunday, May 10, 2009

கேள்வியும் பதிலும்..

தொடர் பதிவு தாங்க இது..

இந்த தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நிலாவன் அண்ணாவுக்கு நன்றிகள்...
நிலாவும் அம்மாவும் அவர்கள் அவர்களுக்கு என் நன்றிகள் .
காரணம் இந்த தொடர் பதிவை ஆரம்பித்து வைத்தவர் நிலாவும் அம்மாவும் அதன் பின் எனக்கு தெரிந்து தொடர்ந்தவர்கள்
ரவீ
அத்திரி
கடையம் ஆனந்த்
கார்த்திகை பாண்டியன்
தேவன் மாயம்
இவங்க எல்லாருமே பெரியவங்க அதனால் எல்லோருக்கும் சேர்த்து அவர்கள் எண்டு போடோட்டுக்கலாமா? அவர்கள் என்று போட்டு வாசியுங்கள்...
வாங்க என்னைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திட்டுப் போங்கோ...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் இயற்பெயர் சிந்துகாவாக இருந்தாலும் எனக்குப் பிடித்த பெயர் சிந்து தான். சிந்துகா என்ற பெயர் பிடிக்காததட்கும் சிந்து என்ற பெயர் பிடிப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன...

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நேற்று முன் தினம்...விஜய் டிவி இல் நடத்தப்ப்படும் யார் உங்களில் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் ராம்கோபால் அவர்களின் நடனத்தின் போது.. (இலங்கைத் தமிழர்களின் நிலைமையை இலங்கையில் இருந்த போது நான் அறிந்ததை விட இப்போது அதிகமாகவே அறிகிறேன். அங்கு இருப்பவர்களாலும் எதுவும் செய்யமுடியாது என்பதும் உண்மையே.)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
சந்தர்ப்பத்தைப் பொறுத்து...

4.பிடித்த மதிய உணவு என்ன?
என் அம்மா மற்றும் அண்ணா சமைத்த எல்லா உணவுகளும்...இங்கு இருக்கும் போது தான் புரிகிறது. அம்மா அடிக்கடி சொல்லுவார் "நீ இங்கு செய்யும் அடாவடித் தனத்துக்கு எல்லாம் அனுபவிப்பாய்." அது தான் அனுபவிக்கிறேனோ?

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்ல. பழகுவேன், பிடித்திருந்தால் மட்டுமே நண்பர்களாக முடியும்...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டுமே, ஆனால் பயத்துடன்... ஆனால் நான் இதுவரை காலமும் அருவியில்க் குளித்தது இல்லை...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம், ஆடை..

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
இரண்டுக்கும் ஒரே விடை தான். எல்லோருடனும் அக்கறையுடன் பேசுவது. அதுவும் அதிகமாகப் பேசுவது.. பலர் தப்பாகப் புரிந்த சந்தர்ப்பங்களும் உண்டு..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
யாருங்க அது..

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா, அண்ணா, நண்பர்கள், இன்னும் ஒருத்தர் ஆனால் யார் எண்டு சொல்ல மாட்டேனே..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?கருப்பு நிற ஜீன்ஸ் உம் பச்சை நிற மேலாடை (Black jeans and green T - shirt)

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கணனித் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வெற்றி வானொலி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கடல் நீல நிறம், பச்சை நிறம்

14.பிடித்த மணம்?
மல்லிகையின் நறுமணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
கவின்
- ஈழத்தில் இருக்கும் பற்று, உண்மைகளை உளறல். அக்கறை (யார் மேல எண்டு கேக்காதீங்க) தமிழில் வழக் கொழிந்து வரும் சொல்ட்களைத் தேடிக் கொண்டிருப்பவர் (தெரிந்தவர்கள் யாராவது சொல்லி உதவலாம்), யாருக்காவது பிரச்சனை என்றால் உதவுதல், ஆனால் தன பிரச்சனைகளைச் சொல்லவே மாட்டார் இவர்.

கமல் - அதே தமிழ் மற்று தமிழீழப் பற்று. நல்ல வர்ணனை - பேச்சுத் திறமை எண்டும் எடுத்துக் கொள்ளலாம். அதிகமாகப் பேசுவது.. தமிழர்களின் நிலைமைகளை வெளிக் கொண்டுவரத் தன்னாலான உதவிகளை செய்பவர்.

கலை - எனக்கு மன உளைச்சல் என்ற நேரம் தியானம் என்ற பதிவினூடு உதவியமை. மலையகத்தின் மேலுள்ள பற்று. பெரியவர்களின் நினைவு நாள்களை நினைவுபடுத்துதல்.. என்னைப் போல அவரும் ஒரு தனிமை விரும்பி.
(இந்த மூன்று பேருக்கும் இரு ஒற்றுமை.. கண்டு பிடியுங்க..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

முயற்சி ... என்ற கவிதை

வெற்றியின் தேடலில்

ஒவ்வொரு முறை

தோற்கும்போதும்

எங்காவது ஓடிச்சென்று

அழுது திர்த்துவிடுவதென்று

தனி இடம் அமர்கின்ற

மனது

அடுத்த தோல்விக்கு தயாராகிவிடுகிறது

உண்மையை சொல்லி இருக்கிறார். அது மட்டும் அல்ல அதை சொன்ன விதமும் பிடித்திருக்கிறது..

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட், கரப்பந்தாட்டம், கால்ப்பந்தாட்டம், கொல்ப் (golf), சதுரங்கம், மற்றும் டென்னிஸ்

18.கண்ணாடி அணிபவரா?

ஆமாம்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நாள்ல கதை உள்ள படம். நகைச்சுவையான படம், எனக்குப் பிடித்தவர்களின் படம்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

அபியும் நானும்

21.பிடித்த பருவ காலம் எது?

வசந்தகாலம், மற்றும் மழைக்காலம்

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கடைசியாக வாசித்த தமிழ் புத்தகம் - அனைத்துக்கும் ஆசைப்படி - புத்தகம் தந்து உதவியவர் கவின் அவர்கள்...

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நான் மாற்றுவதில்லை.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது - குயிலோசை

பிடிக்காதது - இராணுவத் தளபாடங்களினால் ஏற்படுத்தப் படும் கொடிய சத்தம் (அனுபவம் தான் - என் வீடுக்குப் பக்கத்தில் இருக்கும் வைத்தியசாலைக்குப் பக்கத்தில் வைத்து ஏற்படுத்திய அந்த ஓசையை எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாது - அது தான் பலரை ஒழித்த சத்தமாச்சே)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
யாழ்ப்பாணத்துக்கு சிட்டகொங்க்கும் (Chittagong) இடையிலான தூரம். என்னவோ அது தான் நான் பயணித்த அதிகபட்ச தூரம்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
பாடுதல், பழகிய சிறு காலப் பகுதியிலேயே எல்லோருடனும் சகயமாகப் பழகுதல், மதியாதார் வாசல் மிதியாதே என்றமைக்கு அமைவாக வாழ்பவள், அதிகம் அலட்டுதல்

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தாங்கள் செய்யும் அதே தப்பை மற்றவர்கள் செய்யக் கூடாது எண்டு சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
போலியான பாசங்களையும் இலகுவில் நம்பிவது..
கடைசி நேரத்தில் எல்லாம் செய்வது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
Opera House - ஆஸ்திரேலியா

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
யாரையும் காயப் படுத்தாமல் இருக்க ஆசை, என்னை அறியாமலே நிறையப் பேரைக் காயப் படுத்தி இருக்கிறேன். அவர்கள எல்லாம் என்னை மன்னிப்பாங்களா எண்டு தெரியவில்லை..

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
----------------

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அனைத்துக்கும் ஆசைப்பட அரியதொரு வாய்ப்பு

இந்தத் தொடருக்கு நான் அழைப்பவர்கள்
கவின்
கமல்
கலை
இவங்க மூன்று பேரும் என்னை விட நல்லாவே அசத்துவாங்க..

அன்னைக்கு ஒரு நாள்



வாழ்வு என்று தெரியாத வயது
இல்லை இல்லை
அன்று எனக்கு பூச்சியமாவது வயது
இன்றும் அப்படியே வாழ ஆசை
உன் மடியில்த் தலை வைத்து
நீ ஊட்டும் உணவு மட்டுமே சக்தி
தருவது போல ஒரு உணர்வு

எந்த எதிர் பார்ப்பும் இல்லாத
உன்னத உறவு
தன் பிள்ளையை
வளப்பால் மாற்றக் கூடிய
மந்திர சக்தி அவளிடம்
அவளுக்கும் ஒரு நாள்..

நாள் முழுதும் கடமைப் பட்ட ஒரு உறவுக்கு ஒரு நாள் போதுமா?இன்றாவது நன்றி சொல்ல வாய்ப்புக் கிடைக்கிறதே..

Friday, May 1, 2009

வாழ்த்துக்கள்

"உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே."

ஏன் இது இப்ப என்று யாரும் கேட்க மாட்டீங்க என்று நம்பிகிறேன்.


நேரத்தின் அருமை

காலத்தின் தேவை

உறவின் வலிமை

உழைப்பின் மேன்மை

உழைத்தால் தெரியும்

நீயும் பெருமைப் படலாம்


என்ன உழைப்புக்கு இதெல்லாம் இருக்கா என்று கேட்கிறீர்களா... நிட்சயமாக.


அனைவருக்கு இனிய தொழிலாளர் நாள் வாழ்த்துக்கள்

உழையுங்கள்

Tuesday, April 21, 2009

நீயா..

யாருடனும் பேசாத
பேச்செல்லாம் - நீ
பேசியதாலேயே
வியந்தேன்
நீயா என்று......

சம்பந்தமே இல்லா
விடயங்கள்
தாமாகவே சம்பந்தமாகின
சம்பந்தமே இல்லாமல்..
நம்மால் என்று சொல்லலாமா?
புரியாதவளாக...
புரியத் தெரியாதவளாக....
தெரிந்தும் புரியாதவளாக....
யாதுமே அறியாதவளாய்...

பதில் எங்கோ...?
அது கூடத் தெரியாது அவளுக்கு..

Saturday, April 18, 2009

இரண்டு...

எல்லா விடயங்களுக்கும் ஒரு எதிர்க் கருத்து இருப்பது போல வாழ்வதுக்கும் சாவதுக்கும் கூட எதிர்க் கருத்தான கேள்விகளும் கருத்துக்களும் இருக்கின்றன...நீங்க ஒருவரிடம் போய் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கு என்று சொன்னீங்க என்றால், அவர் சொல்லுவார் - நாளை வருவதே பெரிய விஷயமா இருக்கு அதற்க்குள் நீர் என் எதிர் காலத்தைப் பற்றி எல்லாம் கவலை என்பாங்க.. அது மட்டும் இல்லாமால் நிறைய விளக்கம் வேறு சொல்வார்கள். உதாரணமாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி எல்லாம் சொல்லுவாங்க..


கொஞ்ச நாள் கழித்து அதே நபரிடம் வேறு ஒருவர் போய் எதிர் காலமே பொய் தானே எண்டு சொன்னேங்க என்றால் அவர் சொல்லுவார் - யார் அப்படிச் சொன்னது என்று கேட்பார்?


அப்படித் தான் என் அசிரியரிடன் என் நண்பி கேட்டாள் "எதிர் காலத்தை நினைத்து பயமா இருக்கு"
அதுக்கு ஆசிரியார் சொன்னார் "நீர் உம்மளுடைய நாளாந்த வேலையப் பாரும்"

கடந்த புதன் கிழமை நான் அந்த ஆசிரியரிடம் மாறி வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேன். அன்று எனக்கு உடல் நலம் குறைவாக இருந்தது. ஆனாலும் ஆசிரியரிடம் சில சந்தேகங்களைக் கேட்க்க வேண்டிய நிலைமையில் அவருடைய அலுவலக நேரத்துக்குப் போனேன். என் அன்பு நண்பிகள் எனக்கு வருத்தம் என்று சொல்லிவிட்டார்கள் (இத்தனைக்கு வியாழக் கிழமை செயல்த்திட்டம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டி இருந்தது - அதற்கான சந்தேகங்களைத் திருத்தவே போயிருந்தேன்). அதற்கு ஆசிரியர் "ஏன் நீர் உமது செத்தவீட்டுக்கு சொல்லி அனுப்பப் போறீரோ உமது செயல்த்திட்டத்தை என்னிடம் தர முன்." என்று சொன்னார். நான் என் நண்பிகளைத் தமிழில் தான் ஏசினேன் ஆனால் அந்தப் புத்திசாலி ஆசிரியர் புரிந்து கொண்டார் (அவரின் முன் தமிழ் பேசி இருக்கக் கூடாது தான் - என்ன செய்ய).

அப்படியாக படிப்பு விடயத்துக்கு வந்தாச்சு. சரி என்று சில சந்தேகங்களைக் கேட்டு சில சந்தேகங்களுடன் வெளியேறுகையில் மறுபடியும் சாவுவீடு பற்றியும் அன்றைய இரவு அதிகமாகப் படிக்க வேண்டாம் என்றும் சொன்னார். என் வாய் தான் சும்மா இருக்காதே "I don't like to be here. I would like to die.' என்று சொல்லிவிட்டேன். என் நண்பிகள் தான் பாவம். என்னை அறையில் வைத்துக் கதவையும் அடைத்து கேள்வி மலை தொடர்ந்தது.

நான் சொன்னேன் "Future never comes." enru

Miss Carly சொன்னார் "Future always comes." அதுக்கு அப்புறமா வாழ்க்கை வரலாறு மாதிரி எதோ கலந்துரையாடல் தொடர்ந்தது.

அவருடன் கதைத்ததில் கொஞ்சம் மன நின்மதி தான், ஆனால் இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் மாத்தியில் வாழ்வது கடினம் என்பது தான் உண்மை..

வாழ்க்கை என்பது என்ன? நாங்க எதற்காக வாழ்கிறோம்?

பி.கு: வாசித்தவர்களுக்கு நன்றி..... என் என்றால் அதிக நாள் பதிவு போடாததால் எதோ தோன்றியது அது தான் இந்த அலம்பல்....

Saturday, April 4, 2009

நல்லது..

பங்களாதேசத்தில் பிச்சை எடுக்கத் தடை என்பது அருண் அண்ணாவின் வலைத்தளம் பார்த்த பின்னரே எனக்குத் தெரிய வந்தது. சில நாட்களாக கல்லூரிக்குள்ளேயே இருந்ததால் தான் இந்த செய்தி தெரிய வராமல் விட்டது. வீதிகளில் காவல்த்துறையினர் (போலீஸ் என்றால் தான் விளங்கும் சிலருக்கு) நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக நண்பிகள் சொன்னார்கள் (அது மட்டும் இல்லீங்க, பிச்சை எடுப்பவர்களை அடிக்கிறார்களாம்.)

இவ்வளவு நாளும் அவர்களைப் பிச்சை எடுக்க விட்டு ஊக்கிவித்ததே பங்களாதேசத்து அரசாங்கம் தானே..அது மட்டும் இல்லை, நாளுக்கு நாள் பிச்சை எடுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருந்தது. (ஒரு நாள் ஏதாவது கொடுத்தல் தினமும் பின்னே வரும் சிறுவர்கள்)

தினம் தினம் வெளியே போகும் போது வயதானவர்களிலிருந்து தவழும் குழந்தை வரை கையை நீட்டும். அந்த சின்னப் பிள்ளை தான் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் எங்களுடைய கையைப் பிடிக்கும். அந்த பிள்ளையைத் தூக்கி இருக்கும் அம்மா அந்தப் பிள்ளையை பார்த்து எதோ பங்களா மொழியில் சொல்லுவாங்க (எங்களுக்கு இந்த மொழி அவ்வளவாகத் தெரியாது என்பது தான் உண்மை). ஆனால் ஆன்டி (Aunty) என்று கூப்பிடச் சொல்றாங்க எண்டு மட்டும் விளங்கும். அந்தப் பிள்ளைக்கு என்ன தெரியும், அதுவும் கூப்பிடும் (எங்களுக்குத் தலை எழுது பாருங்க. என்ன செய்யக் கேட்டுக் கொண்டு தான் வர வேண்டும்).
அதுவும் எங்களிடம் தான் கேட்பார்கள். இந்த நாட்டு யாராவது என்றால் ஏசி விடுவார்கள். நாங்க கொஞ்சம் புத்திசாலிகள் என்று தான் நினைக்கிறேன், இப்படி யாரவரு பிச்சை கேட்டல் ஏதாவது ஒரு கடைக்குள் போவோம் (போனதுக்காக ஏதாவது வாங்கிக் கொண்டு வாறது.)

எழ்மை என்பதை ஏழைகள் நினைத்தால் ஒழிக்கலாம் என்பது என் கருத்து. பங்களாதேசத்தில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகிக் கொண்டிருப்பது உண்மை தான். ஆனால் பணக்காரர்களால் கட்டப் படும் கட்டடங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போகின்ற வேலை அந்தக் கட்டிடப் பணியில் வேலையாட்களாக வேலை செய்தாலாவது தங்கள் குழந்தைகளைக் கொஞ்சமாவது முன்னிக்கு வரச் செய்யலாமே..(அதை விட்டிட்டு வீதியில்)
இந்த அரசாங்கம் செய்தது சரியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் இருக்கிற நாட்டுப் பிரச்சனை அச்சே அது தான் இந்தப் பதிவு. (ஆனால் நாங்க இனி நின்மதியாக வெளியே போகலாம்)

Thursday, April 2, 2009

நினைவுகள்

யாராகவோ இருந்த - நீ
நானாக மாறுகையில்
உனக்காகவே வாழ்ந்த நான்
நீயாக மாறுவதில்
தப்பு எதுவும் இல்லையே..

எனக்காக நீ இருந்த
காலம் போய்
உனக்காக நான்
என்ற நிலைமை வருவதற்கு
யார் காரணமாகினார்கள்.....

உனக்காக நன்றி சொல்கிறேன்
யார் யாரிடமோ எல்லாம்....

Saturday, March 28, 2009

திருப்பு முனை


என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள்.. காரணம், என் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட இந்த நாளை எப்படி மறக்க முடியும். இவள் என்ன சொல்கிறாள் என்று நினைக்கிறீர்களா? அது தானுங்க இந்த சிந்து என்றவள் இந்த பங்களாதேசத்துக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் முடிகிறது, அதைப் பற்றித் தான் இங்க அலம்பலாம் என்று பதிவை எழுதத் tதொடங்கினேன். அது எப்படிப் போய் முடியும் என்று தெரியாது.
வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்த போதும், அம்மாவும் அண்ணாவும் இருக்கிறார்கள் தானே என்ற துணிவில் இருந்த அந்த நாட்களை நினைக்கையில், எதையோ இன்று இழந்த உணர்வு. (எல்லா விடயங்களையும் நான் பகிர்ந்துகொள்ளும் உறவுகள் - காதல் விடயங்களாக இருந்தாலும் கூடவே.. என் காதலா என்று கேட்க்கக் கூடாது, அது என் வகுப்பு நண்பர்களுடைய காதல்கள்..)
என் வாழ்க்கையைத் திருப்பியது மட்டும் அல்லாமல் வாழ்கை என்பதை சிறிதளவேனும் கற்பித்த காலப் பகுதியும் இதுவே (வாழ்க்கை என்பதை அறிந்ததால் தான் வாழ்க்கையே வேண்டாம் என்று தோன்றியதோ)
சாதிக்க வேண்டும் என்று தோன்றிய காலம் போய் வாழ்க்கையின் வேதனையான காலம் என்னையும் எட்டிப் பார்க்கத் தொடங்கியதும் இந்த நாசமாகிப் போன காலப் பகுதியில் தான்.
இங்கு வந்ததில், நான் அறிந்து ஒரே ஒரு நன்மை மட்டும் தான். பல நல்ல உறவுகள் கிடைத்தன, முக்கியாமாக் வெற்றிக் குடும்பத்தின் (வானொலித் துறையில் நாட்டம் அதுகம் என்பதால் அம்மாவை தொடர் நாடகம் பார்க்க விடாமல் சூரியன் பண்பலை கேட்ட காலம், அம்மா கேட்பார் "நீ அவங்களைப் பற்றி எதுக்கு என்கிடா சொல்ற, அவங்களுக்கு உன்னைத் தெரியுமா?" நான் யாரு நான் சொல்வேன் "எனக்குப் பிடித்தவர்களைப் பற்றி நான் கதைப்பதில் என்ன தப்பு இருக்கிறது. சினிமா நடிகர்களைப் பற்றி எல்லோரும் கதைக்கிறாங்களே, அது எதுக்கு?" அம்மா பாவம் எதுவும் பேச மாட்டாங்க (இப்ப எல்லாக் கதைகளையும் அவங்களிடம் சொல்ல முடியாமல் இருப்பதையிட்டும் கவலை தான். இந்த ஒரு வருட காலப் பகுதியில் நடந்தவற்றைச் சொல்வதற்கு ஒரு மாத காலப் பகுதி காணுமா என்பது கேள்விக் குறிதான் (அது தான் வருகிற ஆடியில் ஊருக்குப் போறேனே) நட்பு மற்றையது பதிவுலக உறவுகள்...(நான் அதிகம் கற்றுக் கொண்டது இங்கே தான்) இதை எல்லாம் விட்டால் என்ன நல்ல விடயங்கள் என்று பார்க்கப் போனால், யாவுமே மனதில் நிற்காதவை (கேட்ட விடயங்கள் அதிகமாக நடந்ததால் தான்) ஆனால் கிடைத்த பல உறவுகளைத் தவற விட்டதும் இங்கு தான் என்பது சோகக் கதை சொந்தக் கதை..

ஒரு வருடம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்று புரிந்துகொண்டேன். (அப்புறம் ஒரு நிமிடமே மாத்துகிறது, நீங்கள் என்ன ஒரு வருடம் என்றீங்க என்று குண்டக்க மண்டக்க எல்லாம் கேட்கப்படாது)
iந்த ஒரு வருடத்தில் நடந்த பல விடயங்களை மறக்க வேண்டியுள்ளது, ஆனால் முடியாவில்லை (மன வலியைக் குறைக்க வழி சொல்லுங்கள்)....
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று" (வள்ளுவர் நிச்சயமாக இப்படி எழுதி இருக்க மாட்டார் - எனக்குத் தெரிந்த தமிழில் எழுதியுள்ளேன். தமிழ்ப் பற்றாளர்கள் மன்னிக்க வேண்டும்.)
வாழ்க்கைக்கு ஒத்து வருமா என்பது சந்தேகம் தான்....

பி.கு: எழுத்துப் பிழைகள் அதிகம் இருந்திருந்தால் மன்னிக்கவும்.... அவசரமான பதிவு..

Friday, March 27, 2009

நண்பியே....

எங்கிருந்தோ வந்த - இரு
சுதந்திரப் பறவைகள்
கூண்டுப் பறவைகளானதால்
அன்றொரு நாள் உறவாளிகளாக
வேறொரு கூண்டுப் பறவை
வந்தந்ததால்
இன்னொரு நாள் பகையாளிகளாக
சமாதானக் கூண்டுப் பறவைகளால்
வேறொரு நாள் அயலாளிகளாக
இன்னும் எத்தனை
கூண்டுப் பறவைகளால்
பிறிதொரு நாள் ............

Thursday, March 26, 2009

யாரடி....?

உன்னிடம்
சொல்லக் கூடாத விடயங்கள்
சொல்லப்படும் போது
நான் கூட
சிந்திப்பதில்லை
நீ கூடவா சிந்திக்கவில்லை..
எதற்காகச் சொல்கிறேன் என்பதை..

உன்னிடம்
சொல்லக் கூடாது
என்று நினைத்த
பல விடயங்கள்
தானாகவே
வெளிவருகின்றனவே
எதற்காக என்பதை
அறிவாயா?

Monday, March 23, 2009

காதலர்கள்...

என்ன பதியலாம்..............................

என்ன பதியலாம் என்று நினைத்த போது எந்த விடயமுமே மனதில் எட்டவில்லை, எனவே வழமை போல என் வீட்டு வேலையைச் செய்யத் தொடங்கிய போது தான் என் அறைத் தோழிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது தான் என் நீண்ட நாள் சந்தேகம் நினைவுக்கு வந்தது. எனக்கு வந்த சந்தேகத்தை உங்கள் முன்னிலையில் வைத்து உங்கள் கருத்துக்களையும் அறியலாம் என்ற நோக்கத்தில் எழுதும் பதிவு தான் இது.

என் பங்களாதேசத்து வாழ்க்கையிலிருந்து அறிந்த / பெற்ற அனுபவம் தான் இது என்று சொல்லலாம். (என் சொந்த அனுபவம் தான் ஆனால் இந்த சம்பவம் எனக்குத் தான் என்று கருதுவது தப்பு)

என்ன சும்மா அலட்டுகிறேனோ? வாங்க விசயத்துக்குப் போகலாம்..

முதலாவது கேள்வி இது தான்...

காதலிப்பவர்கள் தொலைபேசியில் பேசும் போதோ அல்லது இணையத்தில் கதைக்கும் போதோ மெல்லமாகப் பேசுவது ஏன்? அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்று நான் ஒட்டுக் கேட்பதும் இல்லை அப்படிக் கேட்டாலும் எனக்கு விளங்கப் போவது இல்லை, காரணம் அவர்கள் பேசுவது அவர்களுக்கே விளங்குகிறதா என்பது மட்டுமல்ல, பலர் பிற மொழிகளில் பேசுவார்கள் ( சிங்களம், பங்களா அல்லது பங்காளி, கமாய், நேபாளி, உருது).

மற்றவர்களுடன் பேசும் போதே மெதுவாகப் பேசும் அவர்கள் தங்கள் காதலர்களுடன் பேசும் போது என்றால் கேட்கவா வேண்டும். அவர்கள் பேசுகிறார்களா என்ற சந்தேகம் பலமுறை எனக்கு மட்டுமல்ல என் நண்பிகளுக்கும் தான்.

இதன் காரணம் என்ன, (மற்றவர்கள் கேட்டுவிடுவார்கள் என்றோ)?

காதலித்தால் அந்த இயல்பு தானாகவே வந்துவிடுமா? அப்படி மெல்லமாகக் கதைக்க வேண்டும் என்றால் காதலிக்கத் தான் வேண்டுமா? (இந்தக் கேள்வி கேட்பதற்குக் காரணம், நான் பொதுவாக சத்தமாகத் தான் கதைப்பேன் - மெதுவாகப் பேச நினைத்த போதும் முடிவதில்லை - உதவிலக் வரவேற்கப்படுகின்றன)

காதலிக்கும் பெண்கள் மட்டுமா இல்லை ஆண்களும் மெல்லமாகத் தான் பேசுவார்களா? உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி? பதில் சொல்வது உங்கள் கையில்த் தான் இருக்கிறது.....

Saturday, March 21, 2009

ஏனடா..?

ஏன் சந்தித்தாள் உன்னை

தானாகவே

வாழவிரும்பியவளை

நீயாக மாற்றியதால்

தன்னை இழந்தவளாய்....


எதையுமே சாதிக்கத்

தெரியாதவளாயிருந்தவள்

உன்னைக் கண்டதும்

எப்படி

சாதிக்கத் தொடங்கினாள்

தன்னாலேயே

கட்டுப்படுத்த முடியாத

அவள் கோபம்

எங்கு போனது

உன்னைக் கண்டதும்

உன்னுள்ளே உறங்தவளாக

உன் எண்ணங்களுக்குக்

கட்டுப்பட்டவளாக....

Thursday, March 19, 2009

காதலா..?

கவிதைக்கு - நீ

காதலியாகலாம் உனக்கு

உனக்குக் காதலியாக

வரவேண்டும் என்பது...

பேராசை

****************************

காதல் பாடல்களுக்கே

தடையான

இடத்தில் இருக்கும் - நீ

காதலித்தால்...

*****************************

உன்னை நான்

வெறுப்பதற்கு - நீ

போட்ட நாடகம்

எனக்கு உன்மீதான

காதலைப் பெருக்கியதேடா..

Tuesday, March 17, 2009

எழுதத் தெரியாமல் எழுவது..

தன்மையாம் என்னுள்
முன்னிலையாம் - நீ
கலந்ததால்
படர்க்கைச் சிலர்
அள்ளித் தெளித்த
வார்த்தைகள்
நம்மை மீண்டும்
தன்மையாகவே
மாற்றிவிட்டதடா..




கண்ணுக்குள்

நீயடி என்று

பொய் சொல்ல

மறுத்த நீ

என் இதயமே

நீயடி என்று

சொன்ன பொய்யை

நினைத்து

யோசிக்கிறேன்

யோசிக்கத் தெரியாதவளாக..

என்னை யோசிக்க வைக்க

யோசிக்காமல் - நீ

எடுத்த முடிவு கூடப்

பலரை யோசிக்க வைத்ததடா?

Sunday, March 15, 2009

பூமி வெப்பமடைதல்

நான் இப்போது இருக்கும் நாடு என்ற வகையில் பங்களாதேசத்தைப் பற்றிய ஒரு திடிக்கிடும் செய்தி பங்களாதேசம் என்பது இன்னும் கொஞ்சக் காலத்துக்குத் தான் என்பதும் உண்மை. அதாவது கடலுடன் மூழ்குவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது, ஏன் எனில் பூமி வெப்பமடைந்து வருவதால் பனிக்கட்டி உருகி நாட்டின் நிலப் பரப்பைக் குறைக்கிறது. தாழ் பிரதேசம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பல மேற்கத்தேய நாடுகளின் CO2 வெளியீட்டால் அதிகளவு பாதிக்கப்படும் நாடுகளில் இந்த நாடும் ஒன்று.


அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும் நாடு எது என்று கேட்டீங்க என்றால் எல்லோரும் சொல்லுவாங்க ( நான் இங்கே வரும் போதும், பங்களாதேசமா அது தான் வெள்ளம் வர்ற நாடு ஆச்சே.. எதுக்கு போறீங்க என்றார்கள் பங்களாதேசம் எங்கிருக்கிறது என்று தெரியாத மனிதர்கள் கூட. இதில் இருந்து என்ன தெரிகிறது. பெயரை வைத்தே பொது அறிவை வளர்த்திருக்கிரார்களோ?)

மேலை நாட்டவர்களின் CO2 வெளிப்பாட்டால் அவர்களது நாட்டவர்கள் மட்டும் பாதிக்கப் படப் போவதில்லை. காரணம், அவை வளியுடன் கலக்கும் போது தனியாக இந்த நாட்டவர்கள் தான் என்னை வெளியிட்டவர்கள் அதனால் நான் அவர்களின் நாட்டுக்கு மேலத் தான் இருப்பேன் என்று நிற்பதில்லை. Ahmed என்பவர் சொன்னார், மேலை நாடுகள் பூமி வெப்பமடைவதால் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்கின்றங்க. ஆனால் பங்களாதேசத்தைப் பொறுத்த வரை இந்நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையையே தொலைக்கின்றனர். அது மட்டும் அல்லாது பூமி வெப்பமடைதலுக்கு எந்தவிதக் காரணமாகவும் இல்லாத நான் மக்கள் ஏன் பாதிக்கப் பட வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பினார்? (யாராவது பதில் வைத்திருந்தால் சொல்லலாம்)

இது ஆரம்பம் தான் இன்னும் வரும் இந்த நாட்டைப் பற்றியும் பூமியைப் பற்றியும்..

Saturday, March 14, 2009

பொய்

பொய் சொல்லடி
என்ற - நீ
பொய்யை வெறுக்க
காரணமானவள் அவள்

மெய் விரும்பியை
பொய்மை வாதியாக்கியது
உன் பேச்சு

வாய்மை வெல்லும்
என்றவளே வாய்மைக்கு
எதிரியாக

பொய்மையின்
இருப்பிடமாம் - நீ
சாட்சிக் கூண்டிலா...

Thursday, March 12, 2009

உயிரினங்கள்

மனிதர்கள் கொல்லப் படுவதைக் கண்டிக்கும் நாங்க எப்போதாவது பிற உயிரினங்களைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறோமா? (என்கேயோ சமயத்தில் படித்த மாதிரி இருக்கா? நானும் படித்தேன் ஆனால் சிந்தித்ததே கிடையாது)

மாணவர்கள் எல்லோரும் உயர் தரத்தில் கலைத் துறையை படிப்பதிலும் விஞ்ஞான கணிதத் துறைகளில் ஆர்வம் காட்டுவது வழக்கம் தான (அதுவும் அதைத் தொடர முடியாமல் மாறிப் படிப்பவர்களும் உண்டு, அதேன்றாலும் பரவாயில்லை, சிலர் இல்லை நான் படிப்பேன் என்று படித்துக் கவிளுபவர்களும் உண்டு - நான் அப்படித் தான் - யாழ் பல்கைலைக் கழகத்துக்கு கிடைத்தாலும் கவிழ்ந்தேன் என்பது உண்மை தான்.) ஆமா என் இதை இப்ப சொல்றேன்..? ஆ ஆ இப்படி உயிரியல் என்று படித்தாலும் அதை வெட்டிக் கொத்தி பார்க்கிறதோட சரி, அப்படி இப்படி என்று கணிதத்துக்கு வந்தா தரவுகள் அது இது தான். உந்த உயிரினங்கள் எப்படி வாழ்கின்றன அதை எப்படிப் பாதுகாப்பது என்பதை பற்றி யோசிப்பதே கிடையாது ( ஸ்ரீ லங்காவில் நான் படித்த வரை நான் கேள்விப்பட்டதே இல்லை)

ஆனால் சூழலில் நான் வாழ்கிறோம் என்பதிலிருந்து நான் அறிந்து கொள்ள வேண்டியவை அதிகம். காரணம் ஒரு உயிரினம் இல்லை என்றால் அதில் தங்கி இருக்கின்ற மற்றைய உயிரினங்களும் பாதிக்கப்படும் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல பிற உயிரினங்களுக்கும் தான். உணவுச் சங்கிலி என்பதைப் படித்தால் மட்டும் போதாது அதன் உள்ளார்ந்த கருத்தையும் அறிய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியவேண்டும். எதோ படிச்சமா புள்ளியை வாங்கினமா என்பது வாழ்க்கை இல்லை. படித்ததை எங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

மனிதனின் வளர்ச்சியாலும் மனிதனால் வளர்க்கப்படும் விஞ்ஞானத்தாலும் தான் இந்தப் பிரச்சனையே..
மனிதனால் உயிரினங்கள் நேரடியாக அழிக்கப்படுவது மட்டுமல்லாமல் மறைமுகமாகவும் அழிக்கப்படுகின்றன. காடழிப்பு, CO2 வாயுவுன் வெளியேற்றம் என்பது மனிதனின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பொதுவாக யாருமே சிந்திப்பதில்லை. (இப்ப தாங்க விடயத்துக்கே வாறன்..)

அடடா இது என்ன இப்படி வெக்கையா இருக்கே ஐயயோ அந்த விசிறி (இது கை விசிறி இல்லீங்க, மின் விசிறி அது தான் fan) அப்புறம் AC ஐப் போடுங்க என்றெல்லாம் சொல்லுவாங்க, ஆனால் அதன் காரணத்தைக் கேட்டால் தெரியாது. பூமி வர வர வெப்பமடைந்துகொண்டு போகிறது ஆனால் நாங்க தான் சிந்தித்தபாட்டைக் காணவில்லை. பூவி வெப்பமடையும் ஒவ்வொரு கணமும் பனி உருகிய வண்ணமே இருக்கும் அதுவும் விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பதை விட அதிக மடங்குகளால். அதனால் பல உரியினங்கள் அளிக்கப் பட்டுக்கொண்டிருப்பது கசப்பான, பலர் அறியாத உண்மை.


ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 50, 000 - 55, 000 உயிரின வகைகள் அழிவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன ஏன் அழிகின்றன என்றே சொல்லலாம்...
இவை எம்மால் சிந்திக்க முடியாதவை தான ஆனால் அவை தான் நடந்துகொண்டிருக்கின்றன.

Tuesday, March 10, 2009

விஞ்ஞானம் தேவை தானா?

விஞ்ஞானம் வளராமல் மனிதன் ஆதிவாசியாகவே இருந்திருந்தால் எந்தப் பிரச்சனையுமே வந்திருக்காது என்று யாராவது யோசித்திருக்கிறீர்களா?

நிறைய நாட்களாக இதைப் பற்றி சிந்தித்ததே இல்லை (பிறந்த நாள்த் தொடக்கம் சிந்தித்ததே இல்லை). ஆனால் அண்மித்த காலங்களில் அடிக்கடி இதைப் பற்றி எல்லாம் யோசிக்கிறேன் ( காரணம் - என் கல்வியாகக் கூட இருக்கலாம்)
விஞ்ஞான உலகம் தொழினுட்ப உலகம் என்றெல்லாம் சொல்லும் பொது கோபம் கோபமாக வருகிறது ( ஏன் என்று புரிகிறதா? புரியும் புரியும், முழுமையாக வாசியுங்க)

விஞ்ஞான வளர்ச்சியால் நன்மைகள் இருப்பதால் நம்மவர்கள் அதனால் பூமிக்கு வரப் போகின்ற பாரதூரமான விளைவுகள் பற்றி சிந்திப்பதே இல்லை. (எதைப் பார்த்தாலும் நல்ல விடயங்களை எடுத்துக் கொண்டு தீய விடயங்களை விட்டு விடவும் என்று பெற்றோர் சொல்வதால் தான் எந்த விளைவுகளை யோசிக்காமல் விட்டு விட்டார்களோ. உதாரணமாக, ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்லாமே என்றால் இது எனக்கு நடந்தது தான். அம்மாவிடம் சொன்னேன் "அம்மா இங்கு படமே பாக்கிறது இல்லை அப்படிப் பார்த்தாலும் ஆங்கிலப் படம் தான் பார்ப்பது ஏன் என்றால் ஆங்கில அறிவை வளர்க்கத் தான்" என்று. அதற்கு அம்மா சொன்னவே ஒரு பதில் ஒரே அதிர்ச்சி நான் "என பிள்ளை அதில இருக்கிற நல்ல விடயங்களை எடுத்திட்டு கேட்டதை எல்லாம் விட்டிடு சரியா?" நானும் பதிலுக்கு "ஓம் அம்மா எனக்குத் தெரியாதா?" என்றுவிட்டு எதோ சொல்வது என்று "அம்மா எல்லாம் இந்தப் பாடங்களில் சகயமாக இருக்கிதே அதையும் தான் அம்மா பார்ப்பது" என்று சொல்லிவிட்டேன் (அதுக்கு அம்மா என்ன சொன்னங்க என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்க))

வாழ்க்கை என்பது வாழ்வதற்குத் தான் என்று சொல்லும் நாங்க தினம் தினம் நாம் வாழும் பூமியின் வாழ் நாளைக் கொறித்துக் கொண்டிருக்கிறோமே. எப்பவாவது சிந்தித்திருக்கிறீர்களா (சிந்தித்தவர்கள் ஏசக்கூடாது)

இந்த மாசடைதல், உயிர்களின் கொலை (மனிதன் மட்டும் இல்லீங்கோ), வேலை இல்லாமை, வறுமை அப்படி இப்படி என்று பல பிரச்சனைகள் எல்லாம் வருகிறதே எப்படி என்று பெரும்பாலானவர்கள் யோசித்ததே இல்லை. என்னைப் பொறுத்த வரை எல்லாவற்றுக்கும் காரணம் இந்த விஞ்ஞான வளர்ச்சி தான். ஆனால் ஒரு விஞ்ஞானி சொன்னார் "விஞ்ஞானத்தை வைத்து நாங்க பூமியை அளிக்காமல், அதைப் பயன்படுத்தி பூமியைப் பாதுகாக்க வேண்டும்" (விஞ்ஞானியின் பெயர் மறந்துவிட்டது. மன்னிக்கவும்). இதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் தான்..

சிந்தியுங்கள்.... உயிரினங்களைப் பாதுகாப்பதன் மூலமாக உங்கள் சந்ததியினரைக் (மனிதன் தானே சுயநலவாதி அது தான் அவர்களின் வம்சம் என்றாலாவது சிந்திப்பானா? நம்புவோம், நம்பிக்கை தான் வாக்கை என்று சொல்கிறார்களே) காப்பாற்றுங்கள்.

Monday, March 9, 2009

நியம்

நியங்கள் யாவுமே
உன்னை
ஏமாற்றியதால்..
கனவை நீ ஏமாற்றலாமா..?

நீச்சல் தெரிந்த
உன்னால்
எதிர் நீச்சல்
போட முடியவில்லையா..?
வாழ்க்கையில்

நியத்தை ரசியடி
பெண்ணே
முடியவில்லையா கனவை
வாழ்க்கையாக்கிக் கொள்...
சந்தோசப்படுவாய் தினமும்..

Sunday, March 8, 2009

பெண்

பெருமை கொள்ளடி
மகளீர் என்பதனா
சிறுமை உனக்கல்லடி
பெண்ணே

வாழ்கையைப் படிக்க
உன் பிறப்பு
உதவியது - நீ
பெண் ஆதலினாலே....

வர்ணிப்புப் பொருளாக
இருக்கும் - நீ
உதாரணமாக
எவ்வளவு நேரம்

எழ்மை உனக்கானதல்ல
வெல்வாய் - நீ
பெண்ணென - நீ
பெருமை கொண்டால்

அனைவருக்கும் மகளீர் தின நாள் வாழ்த்துக்கள்...
(குறிப்பாகப் பெண்களுக்கு - பெண்கள் வருகை குறைவாக இருந்தாலும் கூட..)

பி.கு: கலை அண்ணா நன்றி முதலாவதாக மகளீர் தின வாழ்த்துச் சொன்னதற்கு0

திருமணமான பெண்கள்.....

திருமணத்துக்குப் பின்னர் பெண்கள் வேலைக்குப் போவது சரியா? தவறா? என்று என்னை வதீஸ் அண்ணா கேட்டாரு............
அந்தக் கேள்விக்குப் பதிலாக வேருவது தான் இந்தப் பதிவு..

பெண்கள் வேலைக்குப் போவதில் தப்பு என்ன இருக்கு என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் என்றால் ஆண்களுக்கு சமமாகப் படிக்கும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஏன் உழைக்கக் கூடாது? அதுவும் கல்யாணத்துக்குப் பின்னர் ( கல்யாணத்துக்கு முன்னர் என்பதை விட..)

கல்யாண நாள் அன்று மணமகனும் மணமகளும் வாக்குறுதி எடுத்து கொள்வார்களே: நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சரி சமனாக மதிப்போம் என்று சத்தியம்செய்வார்கள்.
(எதோ இப்படித் தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்)

இப்ப உதாரணத்துக்கு குழந்தைகளை எடுத்துக் கொண்டால், சிலருக்கு அவர்கள் சந்தோசமானவர்கள். சிலருக்கு அவர்களில் குழந்தையைப் பராமரிப்பதே பெரும் பாடா இருக்கிதாம் ( பலர் வாழ்க்கையைப் பார்த்திருக்கிறேன்). என்ட இவள் இப்படி எல்லாம் சொல்றாளே என்று பார்க்கிறீன்கா? கொஞ்சம் பொறுங்க....

கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணு என்றால் பிள்ளைகளிப் பார்க்க வேண்டும். அது மட்டுமா கணவனையும் பார்க்கணும் என்று பெரிய பெண்கள் தான் சொல்லுவார்கள் ( அவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தார்கள் என்பது பெரிய விடயம்). அது தான் இன்ப துன்பங்களை எல்லாம் பகிர்ந்து கொள்வோம் என்று சொன்னார்களே. குழந்தைகளை வளர்ப்பது இன்பமானாலும் துன்பமானாலும் பகிர்த்து கொள்ள வேண்டியது தானே..

இன்னுமொரு விடயாம் கணவன் வேலை செய்கிறாரோ இல்லையோ, ஒரு பெருமைக்காக என் மனைவி கல்யாணத்துக்கு அப்புறமா வேலைக்கு போக வேண்டியதில்லை என்னால் என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். காலப் போக்கில் அவரது உழைப்பு காணாமல் போக வீட்டில் சண்டை சச்சரவு அப்புறம் மணமகள் வீட்டிலிருந்து பணம் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பு..

இப்படியான பிரச்சனைகளை எல்லாம் தடுக்க வேண்டும் என்றால் பெண்கள் வேலைக்குப் போகத் தான் வேண்டும்.

பெண்களாக விருப்பப் பட்டு வேலைக்குப் போகாமல் இருந்தாலும், காலம் பூராகவும் கணவனால் அதிகளவு சம்பாதிக்க முடியும் என்றாலும் பெண்கள் வேலைக்குப் போகாமல் இருக்கலாம்.

வாழ்க்கையில் படித்துவிட்டு வேலைக்குப் போதாமல் இருப்பது கொடுமை (ஆண்களாக இருந்தாலும் கூட)
வாழ்க்கையே பணமாகாவிட்டாலும் வாழ்வதற்குப் பணம் தேவை என்பது எழுதப் படாத உண்மை. அதனால் எல்லோரும் படிக்க வேண்டும். அதுவும் அதை பங்களாதேசத்துக்கு வந்ததற்கு அப்புறமாக நான் நன்கே உணர்ந்தேன்.

ஆண்களைப் போல பெண்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருக்கலாமே... (அதுக்காக நீங்க என்ன சாத்திக்கப் போறீங்க என்றெல்லாம் கேக்காக கூடாது) அதனால் பெண்கள் திருமணத்துக்கு அப்புறம் வேலைக்குப் போகலாம் என்பது என் கருத்து...

வதீஸ் அண்ணா ஏதோ உளறி இருக்கிறேன் என்பது மட்டும் தெரிகிறது. நீங்கள் கேட்டதற்கு விடை கிடைத்ததா?கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்க (பயப்படாதீங்க இன்னொரு பதிவு எல்லாம் போட மாட்டேன்- நீங்க கேள்வி கேட்ட பதில் சொல்றேன், பதிவாக இல்லை செய்தியாக)

Friday, March 6, 2009

மௌனம்

உன் விழிகளின்

முன் மட்டுமே - என் நா

தடுமாறுவது ஏனோ...

மௌன மொழியால்

தோற்கடிக்கும் - நீ

என் மௌனத்தைச்

சோதிப்பது

அருமையடி....

என் மௌனத்தைக்

கலைக்க - நீ

உன் மௌனத்தைக்

கையாண்டது

மறக்கக் கூடிய

விடயமா....?

Thursday, March 5, 2009

காதலி

உன் முகம் தெரியாததால்
இத்தனை கற்பனையா
நனவை விரும்பும் - நான்
கனவை ரசிக்க
ஆரம்பித்தேன்
உன் முகத்தை
மட்டுமே
தேடுவதற்காக...


காதலுக்கு முகவழகு
தேவையில்லை என்கிறாயா
அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமடி
உன் மனதை
முகம் காட்டாதா என்ன......

Tuesday, March 3, 2009

உண்மை

நினைவுகளுடன்

வாழ்ந்த நாட்கள்

நனவுகளைத்

தோற்கடித்து விட்டன..

++++++++++++++++++++++

வேகமும் தாக்கமும்

குறைந்தால்

ரசனைக்குத்

தட்டுப்பாடு வந்துவிடுமோ....

+++++++++++++++++++++++++++

குழம்பினால் தான்

தெளியலாம் என்பதால்

என் வாழ்க்கையையே - நீ

குழப்பியது

கானல் நீரையே

சாக்கடையாக்கியதடி....

Monday, March 2, 2009

பிடித்த கோப்புக்கள்

நான் Al Gore என்பவரது "Inconvenient Truth" என்ற documentary ஐப் பார்த்த போது தான் பூமி வெப்பமாதல் பற்றி பேசலாமே என்று யோசித்தேன் (அதை நான் இப்போ சொல்ல மாட்டேன் ஆனால் இன்னுமொரு பதிவில் கண்டிப்பாக வரும்). ஸ்ரீ லங்காவில் இருக்கும் போது இதைப் பற்றியே கவலைப் படாத நான், இங்கு சூழல் வெப்பமடைதல் பற்றிப் படிக்கும் போது தான் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறியக் கூடியதாக இருக்கிறது.

Al Gore தன் வாழ்க்கையையும் தனது நாட்டையும் உதாரணமாகக் காட்டி உண்மைகளை நன்கே வெளிக் காட்டி இருந்தார். விளக்கங்கள் யாவுமே அருமையாக இருந்தன. அமெரிக்கா நினைத்தால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் (இந்த documentary ஐ இவர் election க்கு முதல் செய்திருந்தால் சிலவேளைGeorge Bush க்குப் பதிலாக இவரே அமெரிக்காவின் அதிபராக வந்திருப்பாரோ ) அமெரிக்காவின் ஒவ்வொரு குறைகளையும் சொல்லி விட்டு சிரிப்பார் அப்பப்பா........ அது மட்டுமா அந்த நேரம் அரங்கத்தில் கைதட்டல்கள் வேறு ...

Documentary 90 நிமிடங்களாக இருந்தாலும் சலிப்பே இல்லாமல் பார்க்கக் கூடியதாக இருந்தது.

வாழ்க்கையில் நாங்க எங்களை அறியாமல் செய்யும் தவறுகள் மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்து கொண்டேன் அந்த documentary ஐப் பார்த்த பின்னர் (ஆனால் இந்த விடயம் documentary இல் இல்லை, ஆனால் அதைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது.

இந்த documentary ஐப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் தவற விடாதீர்கள்..... வடிவமைப்பு விதம் அருமை.. இப்படி எல்லாம் நடக்கிறதா என்று எண்ணத் தோன்றும்.
நான் முன்பு அறிந்திராத விடயங்கள் பலவற்றை அறிந்து கொண்டேன். பார்த்தால் நீங்களும் அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பி.கு: Al Gore க்கு இதற்காக நோபல் பரிசு கிடைத்தது. அவரின் வாழ்நாள் சாதனைகளில் இதுவும் ஒன்றாம் .

பூமி வெப்பமடைதல் பற்றிய தகவல்கள் கூடிய சீக்கிரமே வரும்...

Saturday, February 28, 2009

சிந்திக்காதது...

உன் நடிப்பை

யதார்த்தம்

என்றெண்ணியது - என்

தவறாக மட்டுமே

இருக்க முடியும்

***************************

இல்லை இல்லை

நீயுமில்லை

நானுமில்லை

என்ற போதே

நினைத்திருக்க

வேண்டும் - நீ

ஒன்றுமில்லை

என்ற போது

சிந்தித்து என்ன

பயன்

இப்போது தான்

நாமுமில்லை

என்றாகிவிட்டதே....

Friday, February 27, 2009





ஏதாவது பதிய வேண்டும் என்று எண்ணிய போது தான் வலைத் தளத்தில் எடுத்த இந்த படங்களின் ஞாபகம் வந்தது...
எதோ போடலாம் என்று தோன்றியதால் தான் இந்தப் பதிவு...

சந்தேகம் ஒன்று வந்தது.. ( எல்லாவற்றையும் நம்பக் கூடாது என்று முடிவு எடுத்ததால் எல்லாம் சந்தேகமாவே இருக்கிறது...)
இதைத் தான் உயிருள்ள காதல் என்பார்களோ.........?
எனக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் தா இந்த சந்தேகம் என்று நினைக்கிறேன்...
தெரிந்தவர்கள் சொல்லவும்................

Thursday, February 26, 2009

மெத்தை.....

ஒரு முறை மட்டுமே
உறங்கக் கூடிய
மெத்தை..
அது தான் கடவுள்
அதிக நாட்கள்
உறங்குவதற்கு
அனுமதித்தானோ....?

நாம் எண்ண முடியாத
அந்த நாட்களை
நம் உறவுகள்
எண்ணின நமக்காகவே

கனவுகள் காணத்
துடித்த காலம்
அந்த மெத்தையில்
உறங்கிய காலம்

கனவையே மறக்க
வைத்தது
நான் வாழ்ந்த
உலகம்

என்றென்றும் நன்றி
சொல்வேன் அந்த
மெத்தைக்கும்
அந்த சுகத்தைத்
தருவித்த
அன்னைக்கும்......

எதைப் பற்றி எழுதி இருக்கிறேன் என்று புரிகிறதா? புரிந்தால் சொல்லுங்க. புரியாட்டியும் சொல்லுங்க. பின்னூட்டலில் சொல்கிறேன்.

பி.கு: நன்றி சசீ அண்ணா. உங்கள கவிதையை வாசித்த பின்னர் தோன்றியதாலேயே எழுதினேன்.

Tuesday, February 24, 2009

ஏமாற்றம்......

எனக்காக மற்றவர்கள்

என்பதை விட

மற்றவர்களுக்காக - நான்

என்பது
சந்தோசமானதே

மற்றவர்கள்

என்னைத் தப்பாகப்

பயன்படுத்தாத

வரை...



உறவுகள் ஏற்படுத்தப்

படுபவை தான்

பல உறவுகளை முறித்து

உருவாகும் உறவு

தேவையானது

தானா..?