Saturday, October 17, 2009

hostel இலிருந்து பார்

பார் காதலித்துப் பார் என்ற கவிதையை லோஷன் அண்ணா ஃபெயில் பண்ணிப்பார் என்று மாற்றி அமைத்ததைத் தொடர்ந்து ஆதிரை (கடலேறி) அண்ணா பல்கலை வந்து பார் என்ற தலைப்பைத் தத்துருவமாக வடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அண்ணா 3 A எடுத்துப்பார் என்ற தலைப்பிலும் சுபாங்கன் அண்ணா பதிவு எழுதிப்பார் என்ற தலைப்பிலும் எழுது கலக்கிவிட்டார்கள். இப்படியான திறமையான பதிவர்களின் வரிசையிலே நீயும் எழுதலாமே சிந்து (நீ திறமையானவலா என்ற கேள்வியை இங்கே கேக்க வேண்டாமே) என்று ஒரு சின்ன ஆசை. அது தான் உங்க......... சும்மா........





கவிப் பேரரசு வைரமுத்து தன பாவம் இந்தக் கவிக் கீல்கரசி கூட கவிதை எழுத வந்திட்டாலே என்று வாசித்து நொந்து போகாமல் இருக்கட்டும் என்பதற்காக இந்தக் கவிதையை இங்கே பிரசுரிக்கிறேன்..





hostel இலிருந்து பார்
உன் வாழ்க்கை
வட்டமே மாறியதை
உன்னுள்ளே
உணர்வாய்
எத்தனை பேர் இருந்தாலும்
நீ மட்டும்
சுதந்திரப் பறவையாய் உணர்வாய்
நீ சாதரணமானவளாக இருந்தும்
வானிலிருப்பதாய் உணர்வாய்
உன் நடத்தை உனக்கே வியப்பாய்த்
தெரியும்
வாழ்க்கையே புதிதாய்
உணர்வாய்

hostel இலிருந்து பார்
இனி எங்கு சென்றாலும்
வாழ்ந்துவிடலாம் என்பாய்
சந்தூச்த்தைக் கொண்டாட
நண்பிகளை அழைப்பாய்
நள்ளிரவில் நண்பிகளின்
குரலுக்காய் விளித்திருபபாய் - வரும் வரை
missedcall இடுவாய்
வந்துவிட்டால் தூங்கிவிடுவாய்
பல மாடிகள் தள்ளி இருந்தும்
ஒரே அறையில் இருப்பதாய் உணர்வாய்
நீயே வாழ்க்கையின் அதிஷ்டசாலி என்பாய்


சோகம் வரும் வரை
சந்தோசத்துக்காய் மட்டுமே
hostalகள் என்பாய்
இது என் மாடி வீடு என்பாய்
hostel இலிருந்து பார்

சந்தோசத்தில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா?

உண்மை நட்பை
புரிந்து கொள்ள வேண்டுமா?

குதுகலத்தின் உச்சத்தை

அடைய வேண்டுமா?

நண்பர்களே
வாழ்க்கையாக வேண்டுமா?

உன்னுள்ளே தன்னம்பிக்கை

பிறக்க வேண்டுமா?


hostel இலிருந்து பார்

homesick என்ற வார்த்தை மனப்படமாகும்

உன் மொழியில் கலப்படம் தெரியும்

உன் பேச்சில் கருத்துக்கள் மறையும்

சந்திப்புகள் மெல்ல மெல்ல சகயமாகும்

hostel இலிருந்து பார்


புதிய நட்புகளில் இணைந்து இணைந்தே

வாழ வேண்டுமா?
சண்டை சச்சரவுகளில் நுழைந்து நுழைந்தே
மீண்டு வர வேண்டுமா?


உனக்குப் பிரதியீடாக நீயே வேண்டுமா?

நண்பிகளை எதிரியாக்கவும்
எதிரிகளை நண்பிகளாக்கவும்
முடிய வேண்டுமா?


hostel இலிருந்து பார்
சின்னச் சின்ன சந்தோசங்களில்

மூழ்க முடியுமே
அதற்காகவேனும்
உன்னைப் பார்த்து முறைத்த பெண்ணின்
வாயிலிருந்து ஒரு hi வேண்டுமா
அதற்காகவேனும்
எதிரியும் உன்னுடன் உனக்காக
நடை போட வேண்டுமா
அதற்காகவேனும்

hostel இலிருந்து பார்
புதிய புதிய
அனுபவங்களில் நீ
இணைக்கப் பட வேண்ட
அதற்காகவேனும்
அழுதுகொண்டே சிரிக்கவும்
சிரித்துக்கொண்டே அழவும்
அதற்காகவேனும்
இன்ப துன்பங்களை
மாற்ற முடியுமே
அதற்காகவேனும்
hostel இலிருந்து பார்



சொர்க்கம் நரகம்

இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்



பி.கு: இக்கவிதை பொதுவாகப் பெண்களுக்கு, அதுவும் வெளிநாடு சென்று hostel இல் தங்கிப் படிப்பவர்களுக்கும் பெண்களுக்கு மிகப் பொருத்தமானது..

இதுவே என் கடைசிப் பதிவாகவும் இருக்கலாம்.. சில மாற்றங்கள், சில கஷ்டங்கள் இந்த பதிவுலகாலும் ஒரு பெண் என்ற வகையில்......

Saturday, October 10, 2009

சண்டைகள் இப்படியும் வரலாம்..


நேற்றுத் தான் தூயா அக்காவின் Farm Ville பற்றிய பதிவைப் படித்துவிட்டு, Farm Ville இப்படி பிரபலமாகி விட்டதா என்ற கேள்வியுடன் எனது விவசாயத்தை ஆரம்பித்தேன். இணையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் புதிதாக நட வேண்டிய பயிர்களையும் நடாமல், அறுவடை செய்ய வேண்டிய பழங்களையும் அறுவடையும் செய்யாமல் கவலையுடன் திரும்பினேன்.

Farm Ville இல் என்ன முக்கியத்துவம் என்னவென்றால், எங்களுக்காக மட்டுமல்ல, நண்பிகளுக்கும் சேர்த்து தானே விளையாடுகிறோம். அவள் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் அவளுக்கு நேரம் இல்லை என்றால், அவளின் முகப்புத்தகத்தை நாமே திறந்து அறுவடை செய்யக் கூடத் தயங்குவத்தில்லை. இப்படியே சும்மா சின்னச் சின்ன சண்டைகள் Farm Ville வியாளையாடுபவர்களுக்கும் விளையாடாதவர்கலுக்கும் வருவது வழமை..
அப்படியே முடிந்துவிட்டும் என்று நினைத்த நாட்கள் போய். நேற்று சிறிய வாய்ப் பேச்சு, பெரிதாக்கி ஒரு பதினைந்து நிமிடங பேசாமல் இருக்கிற அளவு சண்டையாகிவிட்டது.
முகப்புத்தகத்தில் Farm Ville க்கு எதிராக குழு ஆரம்பித்ததே சண்டைக்குக் காரணமானது. நண்பிகள் எழ்வரில் இருவர் வேறு கட்டடத்தில் இருப்பதால் இரவு 12 மணிக்கு அப்புறம் எம்முடன் இருப்பதில்லை, அதனால நாங்கள் இவர் தான் கூடியிருந்தோம். Farm Ville இவரிடமும் இருந்தாலும் மூவர் மட்டுமே விளைய்டாடுவதுண்டு. அதனால் விளையாடாத இருவரும் சேர்ந்து தங்கள் குழுவின் பெருமைகளைப் பேச, நாங்கள் யார் சும்மா விடுவமா ஏட்டிக்குப் போட்டியாக பேச்சுகள் தொடர்ந்தன.
அவர்கள் சொன்னார்கள், வெட்டியாக முகப் புத்தகத்தில் இருந்து Farm Ville விளையாடி நேரத்தை நாங்கள் வீனாக்குகிரோமாம். நாங்கள் விடுவமா, அதுவும் நான், வழமையாகவே என் வாய் சும்மா இருக்காது, அதுக்குள்ளே இப்படி வர "உங்களளவு நாங்க படிக்கிறோம், அதே நேரத்தில் Farm Ville ஆயும் manage பன்னிரமே, நாங்கள் talented ஆனா ஆக்கள். நீங்களும் நாங்களும் ஒரே நேரம் தானே தூன்கிரம், படிக்கிறம், வீட்டு வேலை செய்கிறோம்," - இது நான். காரணம் எல்லோரும் ஒன்றாக படித்து ஒரே நேரம் தான் தூங்குவது வழமை. நான் சொன்ன இந்த வார்த்தை ஒருத்தியைக் காயப்படுத்தவே அவள் நான் சொன்ன அந்த "talented" என்ற சொல்லைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
இது ஒரு படியாக இந்தப் பிரச்சனை முடிய...
அவர்கள் தொடங்கிறார்கள், Farm Ville விளையாடும் ஒருவரே எண்கள் குழுவில் அங்கத்தவர் என்று. அவள் விட்டப் அதில்லை, காரணம் அவளாக இந்தக் குழுவில் இணையவில்லையே, எங்களில் ஒருத்தி அவளது முகப் புத்தகத்தினைத் திறந்து அவளையும் அங்கத்தவராக்கிவிட்டாள். அவள் தொடங்கினால், 'நீ என்னுடைய முகப் புத்தகத்தைத் திறக்கலாம், ஆனால் எனக்கு விருப்பமில்லாத குழுவில் என்னை இணைத்தது கேவலம்." அவளை இந்தக் "கேவலம்' என்ற சொல் காயப் படுத்த அவள் ஆரைக்குப் போவதாகக் கிளம்பினாள், அவளும் இவளும் ஒரே அறை என்பதால் சண்டை சிறிதே நீடித்தது. காரணம் இருவரும் ஒன்றாகவே அறைக்குப் போக வேண்டும்.
அப்படியாக அவர்கள் இனி Farm Ville பற்றிக் கதைக்க மாட்டோம் என்ற முடிவைச் சொல்ல, நாங்கள் மூவரும் சந்தோசம் என்று ஒன்றாகவே சொல்ல, அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
பதினைந்து நிமிட அமைதியின் பின்னர், எங்களுக்குப் பசிக்கிது என்று தொடங்கினார்கள், எண்கள் மூவரிடமுமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காததால், இரவு சாப்பிடாமல் எடுத்து வைக்கப் பட்ட சாப்பாட்டை மெல்லத் திறந்தார்கள், நாங்கள் அசையவே இல்லை. இப்ப சாப்பிடப் போறீங்களா இல்லையா என்று ஒருத்தி தொடங்கினாள். ஒருவரை விட்டுவிட்டு எவருமே சாப்பிடுவது வழக்கமால. ஒருவர் சாப்பிடாவிட்டால் எல்லாரும் பட்டினி என்பதால், அவர்களுக்காகவே கொஞ்சமாவது எல்லோரும் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்தால், சண்டை மெல்லத் தனிய ஆரம்பித்தது. வேண்டாமடா இனி இதைப் பற்றியே கதைக்க வேண்டாம் என்று நினைத்து, தூங்கலாம் என்று முடிவெடுத்தோம்.
அவர்கள் இருவரும் தங்கள் அறைக்கு செல்லவே, நாங்களும் எங்கள் கட்டிலிலே தூங்க ஆரம்பித்தோம். ஒருத்திக்கு நித்திரை வரவில்லை என்று, மற்றவர்கள் இருவரையும் தூங்க விட்டாளா..........? இல்லவே இல்லை...
இப்படித் தான் ஒவ்வொரு நாளும் உறங்குவதற்கு 2, 3 மணி ஆகும்...
எப்படியோ.............. Farm Ville கூட எங்களுக்குள் சண்டை வரக் காரணமாகிவிட்டது. நல்ல வேலை அந்தக் கோபம் எல்லாம் பதினைத்து நிமிடங்கள் தான், இல்லை என்றால் ஒரு அறையில் அவர்கள் இருவரும், நாங்க மூவரும் கதைக்காமல் இருந்திருப்போமே........
வழமையாக இருவருக்கு ஒரு கட்டில், மூவருக்கு இருகட்டில் ஒன்றாகத் தான் போடப் பட்டிருக்கும், இனி எப்படி
நண்பிகள் யாவரும் ஒரே அறையில் வசிக்க வேண்டும் என்பதட்கால நாங்க போட்ட நாடகமே நாங்கள் மூவரும், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கக் காரணமானது....
பேச்சு எச்சாகி சண்டையாகியது வியப்பானது, காரணம் இப்படிப் பல பிரச்சனைகள் நடந்தாலும், அதை நாங்க பெரிதாக எடுப்பதில்லை. ஆனால் இந்த Farm Ville இப்படி இரு பிரச்சினையக் கிளப்பும் என்று நாம் நினைக்கவே இல்லை...

பி.கு: படங்கள் எனது தோட்டத்தில் எடுக்கப்பட்டவை...

Thursday, October 8, 2009

சிறியவை...

*******************************
மேகங்களின் சேரல்
மழையானது
காதலின் சேரல்
என்னவானது?
*******************************
சந்திப்புகளுடன்
கலைந்த அவள்
வாழ்க்கை
முதல் சந்திப்பிலேயே
அரும்பானத்தை
யாரறிவார்
******************************
உன் மீதான
என் நட்பு
எப்படிப் பிரித்தது
உன்னுடனான அவள் நட்பை...
*************************************
நீலாம்பரி ராகத்தினாலான
பாடல்களே
தூங்க வைக்கும் என்பர்..
உனைப் பற்றிய பாடல்களும்
தூங்க வைத்தடி - என்னை
கனவிலும் நீ வருவாய்
என்ற நம்பிக்கையில்...
***********************************

Tuesday, October 6, 2009

காதல் வராதா?

தன் கையே தனக்குதவி என்று
எல்லாம் என் செயல் என்றவன்
எல்லாம் அவள் செயல் என்றானே

அம்மா என்றெல்லவா அழைப்பான்
இன்றென்ன மாற்றமோ
அஞ்சலி என்கிறான்

அவனால் தொலைபேசி தூக்கப் படுவதே
அவன் அம்மா அழைத்தால் மட்டுமே
அது நேற்று வரையா...?
நான் அழைக்காவிட்டால்
யாரடா அழைப்பால் அவளை
என்கிறான் இன்று

காதலிக்கிறாயா?
என்று ஏளனம் செய்தவனா - இன்று
காதலியை பகல்க் கனவில் காண்கிறான்


கடவுள் நம்பிக்கை
இல்லாதவனே
அழைக்கிறான் "கடவுளே"
காதல் வராதா என்னுள்ளே என்று
புலம்புகிறான் இன்னொருவன்..........

Sunday, October 4, 2009

இவ்வுலகம்

பிடித்த சிலரிடமிருந்து
கிடைத்த உன் முகவரி
என்னுள்ளே
சிறிய ஈர்ப்பை
ஏற்படுத்தியதால் - நான்
இங்கே இக்கவிதையுடன்

எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல் அறிமுகமான உன்னை
தினமும் சந்திக்க
துடித்தேன்
பலர் தடுத்த போதும் கூட

பல உறவுகள்
உன்னால் கிடைத்தது எனக்கு
அவை யாவுமே
மறக்க முடியாதவை என்னால்
எதிபார்ப்புகளற்ற அந்த
உறவுகளால்
நன்றி சொல்கிறேன் உனக்கு

சந்திப்புகளால் நிரப்பப்பட்டது
வாழ்க்கையானாலும்
சந்திப்புகள் அமைக்கப் பட்டும் விதம்
வித்தியாசமானதே தவிர்க்கப் படைக்க் கூடியவையுமே
நீ கொடுத்தாய் சந்திப்புகளை
தவிர்க்க முடியாத
அற்புதமான உறவுகளினூடு

பதிவுலேகே - நீ
கற்றுத்தந்தது
அளவிட முடியாதது
அளவிடப் பாடவும் கூடாது
நன்றி ஒன்று மட்டுமே
சொல்ல முடிகிறது உனக்கு

தேடலுக்கான முக்கியத்துவம்
உள்ளுனர்வுக்கான வெளிப்பாடு
சிந்தனைக்குள்ள வலிமை
யாவுமே உன்னால்
வெளிக்காட்டப் படுவது
உனக்கான சிறப்பே -
எனக்கானதல்ல..

தேவையானது - உன்
உறவு எப்போது
என் வாழ்க்கை வட்டப் பாதையில்..