Wednesday, December 31, 2008

வலைப்பூவுக்கு புதியவள்................

இந்த வருடம் எனக்கு முக்கியமாகியதட்கு ஒரு காரணம் நான் இந்த வலைப்பதிவுக்கு வந்தது தான். வாழ் நாளிலே நினைத்துப் பார்க்காத ஒன்று.
லோஷன் அண்ணா, கார்க்கி அண்ணா, ஹிஷாம் அண்ணா, தூயா அக்கா மற்றும் பலரது வலைப்பூக்களைப் பார்த்த பின்னர் சும்மா இருக்கின்ற நேரத்தில் எதோ சும்மா என்னால் முடிந்ததை எழுதலாமே என்ற சின்ன ஆசை ஒன்று தோன்றியது. வீராப்பாக தொடங்கினே. முதல் பதிவில் என்ன எழுவது என்றே தெரியவில்லை. முன் அனுபவம் இல்லாதது தான் (பொய் பேசவே தெரியாத சின்ன பொண்ணு நான்)காரணம்.

வலையமைப்பை எப்படி வடிவமைப்பது என்று தெரியாவிடாலும் ஏதோ எழுதி கிழிப்பது என்று ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் (தப்பான முடிவா என்று தெரியவில்லை). எந்த காலகட்டத்திலுமே மறக்க முடியாத நாட்கள் (சிறிய காலப்பகுதியாக இருந்தாலும் கூட). எவ்வளவு கஷ்டமான் நிலைமைகளிலும் மகிழ்ச்சியாக இருந்த காலம் இது தான். யாரைப் பற்றியுமே கவலைப் பட்டாமல் யாருடனும் அதிகம் பேசாமல் நானும் என்பாடும் என்று இருந்த இந்த காலத்தை எப்படி.......... மறக்க முடியும்.


எனக்கு தங்களுடைய வலைப்பூவின் முகவரியை தந்த லோஷன் அண்ணாவுக்கும் ஹிஷாம் அண்ணாவுக்கும் நன்றி சொல்லவேண்டும். மற்றது அவர்களை பின்தொடர்பவர்கள் சிலருக்கும் (நல்ல தலைப்புகளை இட்டு என்னை பங்களாதேசத்திலிருந்து தங்கள் பதிவுகளை பார்க்க வைத்த நல்ல உள்ளங்கள்) கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த ஆண்டில் நடந்து முடிந்த கேட்ட தீய விடயங்களை மறந்து (நல்ல விடயங்களை மறந்திடாதீங்க..) இனிய இரு நல்ல ஆண்டை ஆரம்பியுங்கள்..
முன்கூட்டிய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டிலாவது நம்மவர்கள் விடுதலை அடைவார்களா...........? வேண்டுவோம் (இறைவனிடம் தான்)
சமாதானமான இனிய வருடத்தை நோக்கிய பயணம்..........
வருடம்

2 comments:

தேவன் மாயம் said...

இந்த ஆண்டில் நடந்து முடிந்த கேட்ட தீய விடயங்களை மறந்து (நல்ல விடயங்களை மறந்திடாதீங்க..) இனிய இரு நல்ல ஆண்டை ஆரம்பியுங்கள்..
முன்கூட்டிய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டிலாவது நம்மவர்கள் விடுதலை அடைவார்களா...........? வேண்டுவோம் (இறைவனிடம் தான்)
சமாதானமான இனிய வருடத்தை நோக்கிய பயணம்.......///

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!

Sinthu said...

உங்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள்..............
வாழ்க வளமுடன்.............