Saturday, October 10, 2009

சண்டைகள் இப்படியும் வரலாம்..


நேற்றுத் தான் தூயா அக்காவின் Farm Ville பற்றிய பதிவைப் படித்துவிட்டு, Farm Ville இப்படி பிரபலமாகி விட்டதா என்ற கேள்வியுடன் எனது விவசாயத்தை ஆரம்பித்தேன். இணையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் புதிதாக நட வேண்டிய பயிர்களையும் நடாமல், அறுவடை செய்ய வேண்டிய பழங்களையும் அறுவடையும் செய்யாமல் கவலையுடன் திரும்பினேன்.

Farm Ville இல் என்ன முக்கியத்துவம் என்னவென்றால், எங்களுக்காக மட்டுமல்ல, நண்பிகளுக்கும் சேர்த்து தானே விளையாடுகிறோம். அவள் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் அவளுக்கு நேரம் இல்லை என்றால், அவளின் முகப்புத்தகத்தை நாமே திறந்து அறுவடை செய்யக் கூடத் தயங்குவத்தில்லை. இப்படியே சும்மா சின்னச் சின்ன சண்டைகள் Farm Ville வியாளையாடுபவர்களுக்கும் விளையாடாதவர்கலுக்கும் வருவது வழமை..
அப்படியே முடிந்துவிட்டும் என்று நினைத்த நாட்கள் போய். நேற்று சிறிய வாய்ப் பேச்சு, பெரிதாக்கி ஒரு பதினைந்து நிமிடங பேசாமல் இருக்கிற அளவு சண்டையாகிவிட்டது.
முகப்புத்தகத்தில் Farm Ville க்கு எதிராக குழு ஆரம்பித்ததே சண்டைக்குக் காரணமானது. நண்பிகள் எழ்வரில் இருவர் வேறு கட்டடத்தில் இருப்பதால் இரவு 12 மணிக்கு அப்புறம் எம்முடன் இருப்பதில்லை, அதனால நாங்கள் இவர் தான் கூடியிருந்தோம். Farm Ville இவரிடமும் இருந்தாலும் மூவர் மட்டுமே விளைய்டாடுவதுண்டு. அதனால் விளையாடாத இருவரும் சேர்ந்து தங்கள் குழுவின் பெருமைகளைப் பேச, நாங்கள் யார் சும்மா விடுவமா ஏட்டிக்குப் போட்டியாக பேச்சுகள் தொடர்ந்தன.
அவர்கள் சொன்னார்கள், வெட்டியாக முகப் புத்தகத்தில் இருந்து Farm Ville விளையாடி நேரத்தை நாங்கள் வீனாக்குகிரோமாம். நாங்கள் விடுவமா, அதுவும் நான், வழமையாகவே என் வாய் சும்மா இருக்காது, அதுக்குள்ளே இப்படி வர "உங்களளவு நாங்க படிக்கிறோம், அதே நேரத்தில் Farm Ville ஆயும் manage பன்னிரமே, நாங்கள் talented ஆனா ஆக்கள். நீங்களும் நாங்களும் ஒரே நேரம் தானே தூன்கிரம், படிக்கிறம், வீட்டு வேலை செய்கிறோம்," - இது நான். காரணம் எல்லோரும் ஒன்றாக படித்து ஒரே நேரம் தான் தூங்குவது வழமை. நான் சொன்ன இந்த வார்த்தை ஒருத்தியைக் காயப்படுத்தவே அவள் நான் சொன்ன அந்த "talented" என்ற சொல்லைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
இது ஒரு படியாக இந்தப் பிரச்சனை முடிய...
அவர்கள் தொடங்கிறார்கள், Farm Ville விளையாடும் ஒருவரே எண்கள் குழுவில் அங்கத்தவர் என்று. அவள் விட்டப் அதில்லை, காரணம் அவளாக இந்தக் குழுவில் இணையவில்லையே, எங்களில் ஒருத்தி அவளது முகப் புத்தகத்தினைத் திறந்து அவளையும் அங்கத்தவராக்கிவிட்டாள். அவள் தொடங்கினால், 'நீ என்னுடைய முகப் புத்தகத்தைத் திறக்கலாம், ஆனால் எனக்கு விருப்பமில்லாத குழுவில் என்னை இணைத்தது கேவலம்." அவளை இந்தக் "கேவலம்' என்ற சொல் காயப் படுத்த அவள் ஆரைக்குப் போவதாகக் கிளம்பினாள், அவளும் இவளும் ஒரே அறை என்பதால் சண்டை சிறிதே நீடித்தது. காரணம் இருவரும் ஒன்றாகவே அறைக்குப் போக வேண்டும்.
அப்படியாக அவர்கள் இனி Farm Ville பற்றிக் கதைக்க மாட்டோம் என்ற முடிவைச் சொல்ல, நாங்கள் மூவரும் சந்தோசம் என்று ஒன்றாகவே சொல்ல, அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
பதினைந்து நிமிட அமைதியின் பின்னர், எங்களுக்குப் பசிக்கிது என்று தொடங்கினார்கள், எண்கள் மூவரிடமுமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காததால், இரவு சாப்பிடாமல் எடுத்து வைக்கப் பட்ட சாப்பாட்டை மெல்லத் திறந்தார்கள், நாங்கள் அசையவே இல்லை. இப்ப சாப்பிடப் போறீங்களா இல்லையா என்று ஒருத்தி தொடங்கினாள். ஒருவரை விட்டுவிட்டு எவருமே சாப்பிடுவது வழக்கமால. ஒருவர் சாப்பிடாவிட்டால் எல்லாரும் பட்டினி என்பதால், அவர்களுக்காகவே கொஞ்சமாவது எல்லோரும் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்தால், சண்டை மெல்லத் தனிய ஆரம்பித்தது. வேண்டாமடா இனி இதைப் பற்றியே கதைக்க வேண்டாம் என்று நினைத்து, தூங்கலாம் என்று முடிவெடுத்தோம்.
அவர்கள் இருவரும் தங்கள் அறைக்கு செல்லவே, நாங்களும் எங்கள் கட்டிலிலே தூங்க ஆரம்பித்தோம். ஒருத்திக்கு நித்திரை வரவில்லை என்று, மற்றவர்கள் இருவரையும் தூங்க விட்டாளா..........? இல்லவே இல்லை...
இப்படித் தான் ஒவ்வொரு நாளும் உறங்குவதற்கு 2, 3 மணி ஆகும்...
எப்படியோ.............. Farm Ville கூட எங்களுக்குள் சண்டை வரக் காரணமாகிவிட்டது. நல்ல வேலை அந்தக் கோபம் எல்லாம் பதினைத்து நிமிடங்கள் தான், இல்லை என்றால் ஒரு அறையில் அவர்கள் இருவரும், நாங்க மூவரும் கதைக்காமல் இருந்திருப்போமே........
வழமையாக இருவருக்கு ஒரு கட்டில், மூவருக்கு இருகட்டில் ஒன்றாகத் தான் போடப் பட்டிருக்கும், இனி எப்படி
நண்பிகள் யாவரும் ஒரே அறையில் வசிக்க வேண்டும் என்பதட்கால நாங்க போட்ட நாடகமே நாங்கள் மூவரும், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கக் காரணமானது....
பேச்சு எச்சாகி சண்டையாகியது வியப்பானது, காரணம் இப்படிப் பல பிரச்சனைகள் நடந்தாலும், அதை நாங்க பெரிதாக எடுப்பதில்லை. ஆனால் இந்த Farm Ville இப்படி இரு பிரச்சினையக் கிளப்பும் என்று நாம் நினைக்கவே இல்லை...

பி.கு: படங்கள் எனது தோட்டத்தில் எடுக்கப்பட்டவை...

1 comment:

uyigh said...

orutharum comments podala..athanala naan poodan..avvalauthaan.avvvvvvvvvvvv.