Sunday, October 4, 2009

இவ்வுலகம்

பிடித்த சிலரிடமிருந்து
கிடைத்த உன் முகவரி
என்னுள்ளே
சிறிய ஈர்ப்பை
ஏற்படுத்தியதால் - நான்
இங்கே இக்கவிதையுடன்

எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல் அறிமுகமான உன்னை
தினமும் சந்திக்க
துடித்தேன்
பலர் தடுத்த போதும் கூட

பல உறவுகள்
உன்னால் கிடைத்தது எனக்கு
அவை யாவுமே
மறக்க முடியாதவை என்னால்
எதிபார்ப்புகளற்ற அந்த
உறவுகளால்
நன்றி சொல்கிறேன் உனக்கு

சந்திப்புகளால் நிரப்பப்பட்டது
வாழ்க்கையானாலும்
சந்திப்புகள் அமைக்கப் பட்டும் விதம்
வித்தியாசமானதே தவிர்க்கப் படைக்க் கூடியவையுமே
நீ கொடுத்தாய் சந்திப்புகளை
தவிர்க்க முடியாத
அற்புதமான உறவுகளினூடு

பதிவுலேகே - நீ
கற்றுத்தந்தது
அளவிட முடியாதது
அளவிடப் பாடவும் கூடாது
நன்றி ஒன்று மட்டுமே
சொல்ல முடிகிறது உனக்கு

தேடலுக்கான முக்கியத்துவம்
உள்ளுனர்வுக்கான வெளிப்பாடு
சிந்தனைக்குள்ள வலிமை
யாவுமே உன்னால்
வெளிக்காட்டப் படுவது
உனக்கான சிறப்பே -
எனக்கானதல்ல..

தேவையானது - உன்
உறவு எப்போது
என் வாழ்க்கை வட்டப் பாதையில்..

7 comments:

Subankan said...

:-))

Sinthu said...

நன்றி சுபாங்கன் அண்ணா..

சுபானு said...

//தேடலுக்கான முக்கியத்துவம்
உள்ளுனர்வுக்கான வெளிப்பாடு
சிந்தனைக்குள்ள வலிமை

யாவுமே உன்னால்
வெளிக்காட்டப் படுவது
உனக்கான சிறப்பே -
எனக்கானதல்ல..//

வரிகள் ஆழமாகவும் அழகாகவும் இருக்கின்றன்.. வரிகளைப் பார்த்தால் வெறும் காதல் வசனங்கள் போல் தோன்றினாலும் ஆழ்ந்து பார்க்க வியக்க வைக்கின்றது உங்களின் கற்பனை. ஒரு மனிதனுக்குரிய முக்கிமான அம்சம் அவனது சிந்திக்கின்ற ஆற்றலும் அதற்குள்ள வலிமையும். அந்த வலிமையே உன்னால்தான் வந்தது என்று அழகாகப் பொய் கூற முயலும் காதல் கவிதையின் வரிகள் அற்புதம்.. மிகவும் இரசித்தேன்..

//உனக்கான சிறப்பே -
எனக்கானதல்ல..
//

காதலில் தன்னடக்கத்தை மிகவும் அழகாக வெளிப்டுத்தியுள்ளீரகள்..

:)

சுபானு said...

மிகவும் இரசித்தேன்..

Sinthu said...

கருத்துக்கு ரொம்ப நன்றி...
நான் கூட நீங்க சிந்தித்தளவு சிந்திக்கவில்லை...

ரசித்தமைக்கும் நன்றி

அன்புடன் மலிக்கா said...

சிந்தனை சூப்பர் வாழ்துக்கள் சிந்து

Sinthu said...

நன்றி மலிக்கா