Thursday, October 8, 2009

சிறியவை...

*******************************
மேகங்களின் சேரல்
மழையானது
காதலின் சேரல்
என்னவானது?
*******************************
சந்திப்புகளுடன்
கலைந்த அவள்
வாழ்க்கை
முதல் சந்திப்பிலேயே
அரும்பானத்தை
யாரறிவார்
******************************
உன் மீதான
என் நட்பு
எப்படிப் பிரித்தது
உன்னுடனான அவள் நட்பை...
*************************************
நீலாம்பரி ராகத்தினாலான
பாடல்களே
தூங்க வைக்கும் என்பர்..
உனைப் பற்றிய பாடல்களும்
தூங்க வைத்தடி - என்னை
கனவிலும் நீ வருவாய்
என்ற நம்பிக்கையில்...
***********************************

2 comments:

Subankan said...

என்னவோ போங்க சிந்து, இப்பெல்லாம் பெரிய கவிஞர் ஆயிட்டீங்க. வரிக்கு வரி ரொம்ப யோசிக்க வைக்கிறீங்க.

Sinthu said...

பெரிய கவிஞர்கள் யோசிக்க வைப்பார்களா? எனக்குத் தெரியாதே...

வாழ்க்கையை யோசிங்கடா, தலைஎழுத்தை நல்லா வாசிங்கடா...... என்றாங்க, தலைஎழுத்து நல்ல இருக்கிறதுக்கு நல்ல யோசிக்கனுமாம், நீங்க யோசிக்க ஆரம்பித்ததால் உங்கள் தலைஎழுத்து நல்லா வரப் போகிறது... வாழ்த்துக்கள்..