காரணமில்லாமல்
காரியமோ மனிதனோ வாழ்க்கையோ
யாவுமே பொய்யடி என்றாள் அன்று
அதே காரணம் காரணமின்றி
இன்று
ஏன் எதற்கு எப்படி
என்று
கேள்வி கேட்டு வளர்ந்தும்
காரணம் ஏதும் தெரியாமல்
இன்று
எப்படி என்றாலும்
எதற்காக என்றாலும்
ஏன் என்றாலும்
மௌனமே பதில்
இன்று
எதிர்காலம் பற்றி
முன்னே திட்டமிடுபவள்
எதிர்காலமா?
அது என்ன என்கிறாள்
இன்று
இதற்கெல்லாம் காரணம் கேட்டால்
என்னிடமே காரணமா
என்ற வெறித்துக் கிடக்கும்
சிரிப்பு தான் மீதமாக
இன்று
காரணமில்லாத பலர்
காரணமில்லாத விடயங்கள்
காரணமில்லாத காரணிகள்
காரணமில்லாத சந்தர்ப்பங்கள்
காரணமில்லாத சந்திப்புகள்
யாவுமே
அவள் காரணம் சொல்லாமைக்கு
காரணம் இன்று
9 comments:
அழகான கவிதை
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
நன்றி, உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்
காரணம் தெரிய வரும்போது அதன் அர்த்தமும் புரிந்து விடும்..
நல்ல வார்த்தை விளையாட்டு..
எங்கேயோ போய்விட்டிங்க சிந்து....
பொங்கல் வாழ்த்த்துக்கள்...
நீங்கள் எழுதிய காரணம் எனக்கு புரியவில்லை
ஆனால் எல்லாம் பன்மையிலே வருகிறதே அதுவா காரணம்..lol
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
sweet
அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்
//ரிஷபன் said...
காரணம் தெரிய வரும்போது அதன் அர்த்தமும் புரிந்து விடும்..
நல்ல வார்த்தை விளையாட்டு..//
நன்றி ரிஷபன்
காரணமில்லாமல் எழுதிய கவிதையின் அர்த்தம் புரிந்தென்ன பயன்.
நன்றி சந்ரு அண்ணா.
//கருணையூரான் said...
நீங்கள் எழுதிய காரணம் எனக்கு புரியவில்லை
ஆனால் எல்லாம் பன்மையிலே வருகிறதே அதுவா காரணம்..lol//
காரணமில்லாமல் எழுதிய கவிதைக்கு காரணத்தை எங்கு போனாலும் கண்டுபிடிக்க முடியாது.
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் திகழ்.
//பாத்திமா ஜொஹ்ரா said...
sweet//
Thanks
Post a Comment