Sunday, September 13, 2009

ஆண்.... பெண்

என்ன தலைப்பே வில்லங்கமாக இருக்கிறது என்று பாக்கிறீங்களா? இவங்க இரண்டு பேரும் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லையே.. வாழ்க்கைக்கு முக்கியமானவர்கள் சந்திக்கின்ற போது ஏற்படுகின்ற பிரச்சனைகளே (பிரச்சனை மட்டுமா என்று கேக்காதீங்க) வாழ்க்கையின் பெரிய பகுதியை அடக்கி விடுகின்றன..

முதலாவதாக சொன்னதெல்லாம் சும்மா.. இப்ப விடயத்துக்கு வரலாம். எனக்கு ஒரு சந்தேகம் நீண்ட காலமாக இருக்கின்றது. அதை முன்வைக்க இது ஒரு சிறந்த இடம் என்பதால் தான் இந்தப் பதிவு. கேள்வி இதோ..?

பெண்கள் ஆண்களுடன் கதைப்பது தவறா? (இது தாங்க கேள்வி....)

பழகினா என்ன நடக்கும் என்று நான் சொல்றேன், சரியா தவறா என்று நீங்க சொல்லுங்க...

பழகினால் இரண்டு விடயங்கள் நடக்கலாம்..

  • பார்ப்பவர்கள் தப்பாகப் பேசுவார்கள்.. (எப்படியா) அவங்களையே கதை கட்டி மற்றும் பலருக்கும் சொல்வார்கள் (இது தான் அவர்களுடைய தொழிலாகவும் சிலர் கருதுவார்கள்) எப்பவுமே பெண்கள் ஆண்களுடன் கதைத்தால் அவர்களை எதிர் மறையான கோணத்தில் பார்ப்பது எங்கள் சமுதாயத்தினருக்குப் பழக்கமாகிவிட்டது. நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் பழகுபவர்களைக் கூட தப்பாகப் பார்க்கும் நல்ல உள்ளங்கள்.. எல்லோரது பார்வைகளும் வித்தியாசமானாலும், இந்த விடயத்தில் ஒன்றாக்குவது ஏன்?
  • பழகுபவர்களே தப்பாக நினைக்கிறார்கள். ஒரு பெண் ஒருவனுடன் சிரித்துப் பேசினால் அதை அவன் தப்பாகப் புரிந்து கொள்வான் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். அப்போதெல்லாம் தெரிவதில்லை, இப்போது சிந்திக்கும் போது அது தான் உண்மை என்று இப்ப தான் புரிகிறது. இதற்குக் காரணம் பெண்களாகவும் இருக்கலாம் என்பது என் கருத்து. ஒருவன் நல்ல பேசினால், அவனுடன் பேசிக் கொண்டிருப்பாங்க. அவள் பேசுவதை அவன் தப்பாகப் புரிந்து கொள்வான். அடடா இந்தப் பொண்ணு என்கூட நல்ல பேசுகிறாளே. அதனால இவள் என்னைக் காதலிக்கிறாளோ.. என்ற பல கேள்விகளுடன் திக்கி திணறி கடைசியாக அவங்க காதலிக்கத் தொடங்குவார்கள்... அங்க தான் பிரச்சனையே ஆரம்பம். அவள் பழகிய விதம் அவளுக்கு சரியாக இருந்தாலும், அவனுக்கு அது அசாதரணமாகவே தான் இருக்கிறது. காதலிக்க ஆரம்பித்தவனால் எப்படி விட முடியும்.. (அது கூட ஒரு வகைப் பிரச்சனை தான்).

இப்படி இரு வேறு வழிகளால் பிரச்சனையாகவே வருவதால், பெண்கள் ஆண்களுடன் கதைப்பதை நிறுத்தி விடலாமா?

இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தர முடியுமானவர்கள் தரலாம்....

பி.கு: இத்தளத்தை அதிகமாக ஆண்கள் வாசிப்பதால், உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப் படுகின்ரான..

8 comments:

கவிக்கிழவன் said...

உண்மை பொய்
சரி பிழை

Sinthu said...

குழப்பத்துக்கு தெளிவு கிடைக்கும் என்று பார்த்தால் நீங்கள் இன்னும் குழப்பிறீங்களே...

கார்த்தி said...

// பெண்கள் ஆண்களுடன் கதைப்பதை நிறுத்தி விடலாமா?

ஆம். ரொம்ப நல்லம் நிறுத்திவிடலாம்.. நாங்களும் நிம்மதியா இருப்பம்!!!!

Admin said...

என் கேள்விகளும் இதுவாகத்தான் இருக்கின்றது. சரியான பதில் இன்னும் கிடைக்கவில்லை ......

Sinthu said...

"
கார்த்தி said...
// பெண்கள் ஆண்களுடன் கதைப்பதை நிறுத்தி விடலாமா?

ஆம். ரொம்ப நல்லம் நிறுத்திவிடலாம்.. நாங்களும் நிம்மதியா இருப்பம்!!!!"
அப்படியா? நிறுத்திடலாமா? இனித் தான் நீங்க நின்மதியாக இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்...

"சந்ரு said...
என் கேள்விகளும் இதுவாகத்தான் இருக்கின்றது. சரியான பதில் இன்னும் கிடைக்கவில்லை ......"
பதில் கிடைத்தால் அறியத் தருக்க,,

SShathiesh-சதீஷ். said...

உங்கள் ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன். வந்து விளையாடுங்கள்.

Admin said...

உங்கள் கேள்விகளுக்கான பதிலை ஒரு பதிவாகத் தருகின்றேன் விரைவில்.

Sinthu said...

என்ன கொடுமை சதீஸ்......... பளிவாங்களா?

நன்றி சந்ரு அண்ணா.