Thursday, September 10, 2009

சாலையோரம்


புதுமைப் பெண்ணிவள் என்று
பலர் சொன்னதனால்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
சென்ற அவளை
அன்று தலை குனிய
ைத்தவன் அவன்

யாருக்கும் அடங்காதவள்
இவள் என்ற கூற்று
பொய்யானது
அந்த சாலையோரத்தில்
யார் சொல்லியும்
குறையாத அவள் வீரம்
அந்தக் கணத்தில்

சாலையோர ஆண்களையே
குற்றவாளிகளாக்கும்
அவள் பார்வை
அன்று மட்டும்
குற்றவாளியாக்கியது
அவன் பார்வை
அவள் மீது பட்டதாலா...................?

3 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

என்னைக்காவது திடீர்ன்னு கடல் குதிச்சுத்தானே ஆகணும் காதல் எனும் கடலில்

கவிதை நல்லாயிருக்கு

Sinthu said...

வருகைக்கு நன்றி..
நீங்கள் சொல்வது தவறு.... என் எல்லாரும் இந்தக் கடலில் விழுவதில்லையே... நான் விழாத பலரைக் கண்டிருக்கிறேன்...
நன்றி

Thaso said...

Sindhu........
I really impressed by your poems... I did not know that you are a great poet... Superb...... keep writing....