எனக்கு நீண்ட நாளா இருக்கிற ஒரு சந்தேகம் உங்களால் முடிந்தால் தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்...
நம்ப நட, நம்பி நடவாதே என்று பெரியவர்கள் எல்லோரும் சின்ன பிள்ளைகளுக்கு சொல்வதைக் கேட்டிருப்பீங்க. ஏன் சிலர் உங்களைக் கூடச் சொல்லியிருப்பர்கள் (நீங்க சின்னப் பிள்ளைகளாக இருந்த போது). இது ஒரு பொருள் இல்லாத கருத்து என்பது என் கருத்து. நீங்க எப்படி..?
நான் இவ்வாறு கருதுவதற்கு என்னிடம் விளக்கம் இருக்கிறது....கொஞ்சம் கீழே போங்கோ....
*
*
*
*
*
*
*
*
*
*
வந்திட்டீங்களா .... எல்லோருக்கும் கணக்கு ( Maths/Math) கற்பிப்பது மாதிரி சொல்றேன் புரிந்து கொள்க.
A,B,C என்று 3 பேர். நம்பி நடவாதே என்பதன் படி, A என்பவர் B, C என்பவர்களை நம்ப மாட்டார். B என்பவர் C, A என்பவர்களை நம்ப மாட்டார். C என்பவர் A, B என்பவர்களை நம்ப மாட்டார். மொத்தத்தில் யாருமே யாரையும் நம்ப மாட்டார்கள். இதுக்குள்ள அவர்கள் எப்படி நம்ப நடப்பது.
என்ன நான் சொன்னது சரி தானே...
3 பேருக்கே இப்படி என்றால் உலகத்தில எத்தனை பேர் இருக்கிறாங்க. அப்பா........
இந்த நம்ப நட, நம்பிநடவாதே சொல்ற அதே பெரியவர்கள் தான் நம்பிக்கை தான் வாழ்க்கை என்றும் சொல்றாங்க. இதில் எதை நாங்க ( அது தான் என்னைப் போல இருக்கிற சின்னப் பிள்ளையால்) கடைப்பிடிப்பது....
பி.கு:உங்கள் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன. எதிர்க் கருத்துகளையும் நீங்கள் தரலாம். சரியாக இருந்தால் கடைப்பிடிக்க நான் தயார்..என்ன சொல்றீங்களா... எண்ணப் ஏச விரும்பிரார்ந்களும் ஏசலாம்....