Wednesday, September 30, 2009

கணிதம் பொய்யாகிறது..

என்ன பயந்திட்டீங்களா? தலைப்பு அப்படியானாலும் நான் இங்கே சொல்ல வரும் விடயமே வேறு..


முன்னைய காலத்திலேயே அதிகமான சித்திரங்களை நோக்கியிருந்தாலும், பதிவுலகில் நான் இல்லாததினால் அந்த சித்திரங்களை இது தாங்க. கணித் இப்படிப் பின்னர் இரண்டு படங்கள் மாத்திரம் சிக்கியுள்ளன. இதோ உங்களுடன், ஏன் இவை கணித ரீதியில் தவறானவை என்று பார்க்கலாம் வாங்க...

இந்த சித்திரத்தில் நீரருவி ஒன்று உள்ளது, அதைக் கண்டுபிடித்தவுடன், அந்த நீர் எப்பாதை வழியே செல்கிறது என்பதையும் தெளிவாகப் பாருங்கள். அந்த நீர் மீள மீள சுற்றிக் கொண்டிருக்கின்றமை புரிகிறதா? ஒரு பட்சில்லின் உதவியுடன் நீரானது கடத்தப் படுவது இயல்பாக இருந்தாலும், உண்மையிலே கணிதத்தின் படி, நீர் சம பாதையிலோ அல்லது மேலிருந்து கீழோ தான் செல்லுமே தவிர, கீழிருந்து மேலாக செலுத்தப் பட முடியாது எந்த வித பிரவிசைகளையும் பிரயோகிக்காதவிடத்து . இந்த சித்திரத்தில் மேலிருந்து விழுகின்ற நீரானது மறுபடியும் மேலே செல்வதாக வரையப் பட்டிருக்கிறது. அந்தக் கட்டடத்தின் தூண்களை நன்கு அவதானித்தீர்களாயின் நீரானது கீழிருந்து மேலாக செல்கின்றமையை அவதானிப்பீர்கள்.

இது தாங்க, இந்தப் படத்தில் பிழை. ஆரம்ப காலத்திலேயே, கணிதத்துக்கும் சித்திரத்துக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று நினைத்திருந்தேன், ஆனால் இப்போது தான் புரிந்தது, முன்னைய ஓவியர்களில் பலரும், இப்போதைய ஓவியர்களும் கணிதத்தின் உதவியுடன் தான் ஓவியங்களை வரைகிறார்கள் என்று. ஆனால் அது இந்த சித்திரத்தில் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருந்தாலும், பார்ப்பவர்கள் இதைக் கவனிக்க மாட்டார்கள் (நாங்கள் தான் எத்தையுமே உன்னிப்பாகப் பார்ப்பத்தில்லையே.. அப்ப நீ எப்படிப் பார்த்தாய் என்றீங்களா? அது சும்மா, இப்ப தான் எல்லாவற்றையுமே உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது..)
இப்படியான பல சித்திரங்கள் இருக்கலாம், இப்பவே தேடத் தொடங்குங்க..


1 comment:

Kumaran said...

அருமையான விடயம்.
ஆனால் அந்தக் காலத்தவரை
சும்மா எடை போடக்கூடாது
எந்தகாலத்தவரும் சிந்திக்கத்தக்க வகையில் ஓவியம் வரைஞ்சிருப்பாங்க ........