Saturday, September 26, 2009

சந்திப்பு


பார்வைகளால் மோதும்
சந்திப்பு
ஈர்ப்பு

கேட்டலில் மெருகேறிய
சந்திப்பு
கவி

இதழ்களின் நெருங்கிய
சந்திப்பு
முத்தம்

மெய் திருடிய
சந்திப்பு
காமம்

நுகர் வாசனைகளின்
சந்திப்பு
பூந்தோட்டம்

இவையுடன் சேர்ந்த
மனங்கள் இடம் மாறும்
சந்திப்பு
காதல்

9 comments:

தேவன் மாயம் said...

கேட்டலில் மெருகேறிய
சந்திப்பு
கவி////

நல்ல கவிஞராக உருவெடுக்கிறீர்கள்!

தேவன் மாயம் said...

படத்தில் கண் காதெல்லாம் குழம்பியிருக்கே சிந்து!!

தேவன் மாயம் said...

உண்மையைச் சொல்லிட்டு போங்கோ.............. ஏச விருப்பமானவர்களும் ஏசலாம்.
///

ஏசினாலும் தாங்கும் ஏசுவா நீ?

யாழினி said...

கவிதை நல்லாயிருக்கு ஆனால் படம் தான் பயமுறுத்துகிறது!

Sinthu said...

"தேவன் மாயம் said...
நல்ல கவிஞராக உருவெடுக்கிறீர்கள்!"
உண்மையாகவா?

"தேவன் மாயம் said...
படத்தில் கண் காதெல்லாம் குழம்பியிருக்கே சிந்து!!"
வாழ்க்கை என்றால் அப்படித் தானே..

"தேவன் மாயம் said...
ஏசினாலும் தாங்கும் ஏசுவா நீ?"
நான் எப்போதும் சிந்துவாகவே இருக்க ஆசைப்படுகிறேன். விட்டிடுங்களேன்..

"யாழினி said...
கவிதை நல்லாயிருக்கு ஆனால் படம் தான் பயமுறுத்துகிறது!'
நன்றி.. எல்லாவற்றையும் உள்ளடக்கிய வேறு படம் கிடைக்கவில்லை. படத்தைப் பார்த்தும் ஓடாமல் வாசித்தமைக்கு நன்றி..

சுபானு said...

//கேட்டலில் மெருகேறிய
சந்திப்பு கவி//

நல்லாயிருக்கு...

Sinthu said...

நன்றி.. என் எல்லோருக்குமே இந்தப் பகுதி தான் பிடித்திருக்கிறது..?

Admin said...

சந்திப்பில் இத்தனை வகை இருக்கிறதா சிந்து...

கண்களின் சந்திப்பு பற்றி மட்டுமே அறிந்திருக்கிறேன். (லொள்ளு)

Sinthu said...

அது ஒன்றுமில்லை அண்ணா.. சந்திப்பு என்று தலைப்பை இட்ட பின்னர் எழுதாமல் விட்டால் நல்லதல்ல என்று நினைத்து சும்மா கிறுக்கினேன்..
கண்கள் பற்றிய சந்திப்பு பற்றி என்ன அறிந்தீர்கள் என்பதை எங்களுடன் பகிரலாமே..