Thursday, March 5, 2009

காதலி

உன் முகம் தெரியாததால்
இத்தனை கற்பனையா
நனவை விரும்பும் - நான்
கனவை ரசிக்க
ஆரம்பித்தேன்
உன் முகத்தை
மட்டுமே
தேடுவதற்காக...


காதலுக்கு முகவழகு
தேவையில்லை என்கிறாயா
அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமடி
உன் மனதை
முகம் காட்டாதா என்ன......

11 comments:

குமரை நிலாவன் said...

காதலி

நனவில் கொள்ளும்
நீ
கனவிலாவது விட்டுவிடு
பாவம் நான்

எப்படி இருக்கு கவிதை

இப்ப எல்லாம்
அகத்தின் அழகு முகத்தில் தெரிவதில்லை

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

என்ன சிந்து நிறையவே கனவு கான்றிங்கபோல. கனவிலு ரொம்ப நல்ல கவிதைகள் வருகிறதே.... இன்னும் எழுதுங்கோ எழுதிக்கொண்டே இருங்கோ...

Sinthu said...

"
நிலாவன் said...
காதலி

நனவில் கொள்ளும்
நீ
கனவிலாவது விட்டுவிடு
பாவம் நான்

எப்படி இருக்கு கவிதை

இப்ப எல்லாம்
அகத்தின் அழகு முகத்தில் தெரிவதில்லை"
நாங்கள் உங்கள் காதலிக்கு இப்படித் தான் சொல்வீர்களோ?

"
shanthru said...
என்ன சிந்து நிறையவே கனவு கான்றிங்கபோல. கனவிலு ரொம்ப நல்ல கவிதைகள் வருகிறதே.... இன்னும் எழுதுங்கோ எழுதிக்கொண்டே இருங்கோ..."
கனவெல்லாம் ஒன்றும் இல்லை. கனவு கான் என்கிறார்கள், கனவு கண்டால் காதல் என்கிறார்களே (கவிதை எழுதிறதுக்கு சொல்றாங்க கனாவா?), ஆனால் நான் கனவு கண்டால் பேய்களாகவே வருகின்றன என்ன செய்ய...?

kuma36 said...

நல்லாயிருக்கு சிந்து.

நிஜமா நிஜமா இது என்ன நிஜமா?

Anonymous said...

"உன் முகம் தெரியாததால்
இத்தனை கற்பனையா
நனவை விரும்பும் - நான்
கனவை ரசிக்க
ஆரம்பித்தேன்
உன் முகத்தை
மட்டுமே
தேடுவதற்காக..."

தேடியது கிடைத்தாத சிந்து
அது தன் இப்ப பகலிலும்3 மணி நேரம் துங்குரின்களே

Anonymous said...

"ஆனால் நான் கனவு கண்டால் பேய்களாகவே வருகின்றன என்ன செய்ய...?"

அங்க கொஞ்சபேர் உண்மையிலேயே பேய் வருகுது என்டுரங்கள், நீங்க என்னடா எண்டால் கனவில் பேய் வருகுது எண்டு சொல்லுரிங்க, எனக்கு இங்கு நித்திரை வரதே பிரச்சினையாக இருக்குப்பா !!!!!!!!!!!!!!!!

SASee said...

கவனவை ரசிக்கலாம்
நனவின் நிஜங்களோடு சிந்து

நன்று தொடருங்கள் தொடருங்கள்

குமரை நிலாவன் said...

சும்மா ......

Sinthu said...

கலை அண்ணா இது சும்மா.... என் வேலையைப் பார்க்கவே நேரமில்லாமல் இருக்கிறது எனக்கு.... இது வேறையா?


என்ன துஷா அக்க இரவில் நேரம் கிடைக்காததால் பகலில் நித்திரை அதுவும் விடுமுறை நாட்களில் தான்.............(நீங்க எல்லோரும் தானே என் நித்திரையைக் கெடுப்பது....) lolz
உங்கள் கூட இருக்கிறேனே அது போதாதா எனக்கு..


சசீ அண்ணா நிஜத்தை நினைத்தால் பயமாக இருக்கிறதே...



"
நிலாவன் said...
சும்மா ......"
அப்படியா நன்று....

SASee said...

சிந்து

நிஜத்தில் பயம் உண்டு உன்மைதான்,
என்ன செய்ய போராட வேண்டியது நிஜத்துடன் தானே....?

Sinthu said...

போராச்சமே வாழ்க்கை ஆனதால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமல் போய்விட்டது அண்ணா..