Friday, March 6, 2009

மௌனம்

உன் விழிகளின்

முன் மட்டுமே - என் நா

தடுமாறுவது ஏனோ...

மௌன மொழியால்

தோற்கடிக்கும் - நீ

என் மௌனத்தைச்

சோதிப்பது

அருமையடி....

என் மௌனத்தைக்

கலைக்க - நீ

உன் மௌனத்தைக்

கையாண்டது

மறக்கக் கூடிய

விடயமா....?

10 comments:

குமரை நிலாவன் said...

கவிதை அருமை சிந்து

SASee said...

"மௌன மொழியால்

தோற்கடிக்கும் - நீ

என் மௌனத்தைச்

சோதிப்பது

அருமையடி...."


சிந்து
இது மௌன மொழியின்
மந்திரமும் சித்திரமும்..!

வரிகளுக்கு வழிமை சேருங்கள் சிந்து

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

என்ன சிந்து இப்ப உங்களுக்கு மவுனமான நேரமோ....

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

என்ன சிந்து இப்படி எல்லாம் மவுனமா பேசுரத்திலும் நீங்க நல்ல கில்லாடி போல இருக்கு.....

Sinthu said...

"
நிலாவன் said...
கவிதை அருமை சிந்து"

நன்றி

வலிமை சேர்த்திட்டாப் போச்சு... சசீ அண்ணா

"
shanthru said...
என்ன சிந்து இப்ப உங்களுக்கு மவுனமான நேரமோ...."
நான் அதிகம் பேசுவதால் தான் பிரச்சனையே.. அது தான் மௌனமாக இருக்க முயற்சி செய்கிறேன்.

"
shanthru said...
என்ன சிந்து இப்படி எல்லாம் மவுனமா பேசுரத்திலும் நீங்க நல்ல கில்லாடி போல இருக்கு....."
என் பேச்சுத் தொல்லைய சகித்துக் கொண்டு இருக்கிறவர்கள் கேட்டால் plane ஏறி வந்து உங்களுக்கு அடிக்கப் போறாங்க..

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

சிந்து நீங்க மவுனமா இருக்க முயற்சி செய்றதே எல்லாருக்கும் தொல்லையா இருப்பதாக பேசிக்கொள்ளுராங்க உண்மையா...

தமிழ் மதுரம் said...

உன் விழிகளின்

முன் மட்டுமே - என் நா

தடுமாறுவது ஏனோ...


மௌன மொழியால்

தோற்கடிக்கும் - நீ

என் மௌனத்தைச்

சோதிப்பது

அருமையடி....//

இது அருமையடா என்று வந்திருந்தால் கவிதை இன்னும் அருமையாக அமைந்திருக்கும்...

அது சரி நீங்கள் தமிழ் மணத்தில் உங்கள் பதிவை இணைத்து விட்டீர்களா???

Sinthu said...

"shanthru said...
சிந்து நீங்க மவுனமா இருக்க முயற்சி செய்றதே எல்லாருக்கும் தொல்லையா இருப்பதாக பேசிக்கொள்ளுராங்க உண்மையா..."
உண்மையாவா?
ஆமா எங்கயெல்லாம் பேசிறாங்க...?

"கமல் said...
உன் விழிகளின்

முன் மட்டுமே - என் நா

தடுமாறுவது ஏனோ...


மௌன மொழியால்

தோற்கடிக்கும் - நீ

என் மௌனத்தைச்

சோதிப்பது

அருமையடி....//

இது அருமையடா என்று வந்திருந்தால் கவிதை இன்னும் அருமையாக அமைந்திருக்கும்...

அது சரி நீங்கள் தமிழ் மணத்தில் உங்கள் பதிவை இணைத்து விட்டீர்களா???"
அருமையடா என்று தான் எழுதினேன் அப்புறம் அழித்துவிட்டேன். காரணம் இல்லாமல் இல்லை, ஏற்கனவே பல வதந்திகள் (இந்த சின்னப் பொண்ணு சிந்துவுக்கு காதலாம் அது மட்டும் இல்லை தோல்வி வேறையாம் அது தான் சோகமாக எல்லாம் கவிதை எழுதுகிறாள் என்று). அது தான் மாத்திவிட்டேன்.
இன்னும் தமிழ் மனத்தில் இணையவில்லை. இணைந்தால் நல்ல தரமான பதிவுகளை இட வேண்டி இருக்குமே...

kuma36 said...

"மௌனம்"

மகளிர் தின வாழ்த்துக்கள்

Sinthu said...

" கலை - இராகலை said...
"மௌனம்"

மகளிர் தின வாழ்த்துக்கள்'
நன்றி...