Thursday, January 15, 2009

ஏன் இப்படி............?

பூயா அக்காவினதும், லோஷன் அண்ணாவினதும், ராகவன் அண்ணாவினதும், ஹிஷாம் அண்ணாவினதும் வலைப்பூக்களை வாசித்த பின்னர் எழுத வேண்டும் என்று தோன்றியவற்றை எழுதலாம் என்று தொடங்கி இருக்கிறேன்.



பொதுவாக எல்லா தமிழர்குக்குமே தமிழர்களின் நிலை தெரிந்திருக்கும் (தெரிந்திருக்க வேண்டும்). அப்படி தெரியாதவர்கள் தமிழர்களாகவே இருக்க முடியாதவர்கள். தமிழர்களின் உண்மை நிலைமையை இலங்கையில் இருப்பவர்களோ, இலங்கைக்கு செல்ல வேண்டி உள்ளவர்களோ எழுத முடியாது என்பது வெளிப்படையான உண்மை (காரணம் தெரியாதவர்கள் இருக்க முடியாது). அப்படி இருந்தும் எழுதிக் கொண்டிருப்பவர்களை போற்ற வேண்டும் அதை விடுத்து அனானி என்ற பெயரில் தங்களால் மட்டுமே பேச முடியும் என்ற நோக்கில் பேசுபவர்களைப் பற்றி தவறாக ஏசுபவர்கள், ஹிஷாம் அண்ணா சொன்னது போல், அநாதைகள் என்றே சொல்லுவேன். (நான் தப்பிச்சேன்.... எனக்கு அப்படி ஒரு அனானியும் கிடைக்கவில்லை.....)



எப்படா A9 பாதை திறக்கும் என்று காத்திருந்த எங்களுக்கு இப்போது அந்த பாதை திறந்ததே சந்தோசம் இல்லாத ஒரு நிகழ்வாக இருப்பதற்கு காரணம் நம்மவர்களின் நிலைமை தான். ஒவ்வொரு நாளும் பார்க்கும் செய்திகளும் படங்களும் நம்மவர்களின் நிலைமைகளில் தெட்டத் தெளிவாக காட்டிய போதும் கூட புரிந்து கொள்ள முடியாதவர்கள், உண்மைகளை வலைப்பூக்களினூடு சொன்னால் மட்டும் புரிந்து கொள்வார்களா என்ன..?(அனானிகளைத் தான் சொல்கிறேன்.)



வெளிநாட்டவர்களில் பலருக்கே நம் நிலைமைகள் தெரிந்திருக்கும் போது இந்த தமிழ் தெரிந்த முட்டாள்களுக்கு மட்டும் ஏன் புரியாமல் இருக்கிறது..? அதிகமாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் (உண்மைத் தமிழன்/ தமிழிச்சி) தமிழர்களின் நிலைமைகளை வெளிநாட்டவர்களுக்கு புரியவைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் (நிறைய கடமைப் பட்டிருக்கிறோம் - எண்களின் தாய் மண்ணுக்கு).

தமிழன் யாருக்கும் அஞ்சியவன் அல்ல... குட்டக் குட்ட குனிபவனும் அல்ல (குட்டக் குட்ட குனிபவனும் முட்டாள் குனியக் குனிய குட்டுபவனும் முட்டாள்) எனவே எசுவதயினும் உங்கள் பெயரைச் சொல்லியே திட்டுங்கள். பதிவர்கள் யாவரும் ஏற்றுக்கொள்வார்கள். அதை விட்டு விட்டு கொலைகளாக உண்மையை நேரசியாக சொள்ளத்தேரியாதவர்களாக இருக்கிறீர்கள்................?

திட்ட விரும்புவர்கள் திட்டலாம்................. பெயர் சொல்லி மட்டும்....

9 comments:

Kumky said...

ஏன் இந்த கோபம்...உங்களுக்கு...யார் மீது..?
அனானிகள் குறித்தெல்லாம் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டாம்.
கமெண்ட் பிடிக்கவில்லையெனில் டெலீட் செய்துவிடலாமே...
பெயர் சொல்லகூட தைரியமில்லாதவர்கள் குறித்து எதற்க்கு மெனக்கெட வேண்டும் சகோதரி..

Sinthu said...

"
கும்க்கி கூறியது...
ஏன் இந்த கோபம்...உங்களுக்கு...யார் மீது..?
அனானிகள் குறித்தெல்லாம் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டாம்.
கமெண்ட் பிடிக்கவில்லையெனில் டெலீட் செய்துவிடலாமே...
பெயர் சொல்லகூட தைரியமில்லாதவர்கள் குறித்து எதற்க்கு மெனக்கெட வேண்டும் சகோதரி.."
இல்லை அண்ணா நான் அண்ணா என்று கூப்பிடுறவங்களுக்கு தான் இந்த நிலைமை வந்திருக்கிறது.. மற்றயது என் நாட்டு நிலைமை தெரிந்தவர்கள் பலர். பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியல்ல.. அது தான்...

Kumky said...

எழுத்து பிழைகளை கூடுமான வரை இனி தவிர்த்து விடுவீர்களென நம்புகிறேன்.
அதே போன்று பின்னூட்டமிட கோடிங் தேவையில்லை என்று பரிந்துரைக்கின்றேன்.கமெண்ட் மாடுரேசன் மட்டுமே போதுமானது.

Sinthu said...

சரீங்கண்ணா ......................நீங்க சொல்லிட்டீங்க இல்ல இனிப் பாருங்க......

Anonymous said...

"எப்படா A9 பாதை திறக்கும் என்று காத்திருந்த எங்களுக்கு இப்போது அந்த பாதை திறந்ததே சந்தோசம் இல்லாத ஒரு நிகழ்வாக இருப்பதற்கு காரணம் நம்மவர்களின் நிலைமை தான்."


தமிழரின் நிலை இது (எங்களுக்கு எப்பதும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது)

"ஏன் இந்த கோபம்...உங்களுக்கு...யார் மீது..?"

கோபம் உண்டாக்க வில்லை அவளுக்கு உருவக்கப்பட்டுவிட்டது
காரணங்கள் பல பல சில வேலை நானாகவும் இருக்கலாம் ...............


இது வரைக்கும் பின்னுட்டம் போடச்சொல்லி போடாதா உன் அன்பு துஷா அக்கா

Sinthu said...

U r correct akka........

Hisham Mohamed - هشام said...

thanks dear.........
keep on writing..........

Sinthu said...

u all r like my brother so I must write anna........
thanks for visiting my blog...

Anonymous said...

அருமையாக சொன்னீர்கள் சிந்து......