Friday, January 30, 2009

நன்றி சொல்ல வார்த்தை இல்லை..

இலங்கைத் தமிழர்களான எங்களுக்காக உயிர் நீத்த இந்தியத் தமிழர்..

நம் நாட்டவருக்கே 
இல்லாத தைரியம் 
கண்டேன் உங்களிடம்
உங்களை பற்றி 
பேசவே நாதியற்றவளாக..
நமக்காக எழுதப்பட்ட 
விதி இது தான் 
என்ற போதும் கூட
நமக்காக.
செய்தி அறிந்த நேரம் 
தாமதம்
அதன் பாதிப்போ 
நிரந்தரம்

எப்படி நன்றி சொல்ல
எத்தனை உயிர்களை இழந்தோம் 
அநியாயமாக இன்னொரு உயிரா..?
அந்நியன் என்றிருந்த  நீங்கள் அண்ணனாக


பி.கு: கார்க்கி அண்ணாவின் வலைத்தளம் பார்த்த பின்ன எழுதியது..

6 comments:

Anonymous said...

:(

துஷா said...

உன் உணர்வுத் தீ உன்னையே எரித்துக்கொல்ல உன்னை துண்டியது எரிந்து விடும் உணர்வுகள் பல இருந்தும் ஒன்றுமோ செய்ய முடியதவாலாய் இங்கு நானும் ஒரு தமிழச்சி

நண்பர்களே நன்றி என்று மட்டும் கூறி நாளாடைவில் மறந்து விடாதிர்கள் இந்த நன் மனிதனை இவன் தன் உடலில் ஏற்றிய தீ எறியட்டு எம் நெஞ்சில் என் இனத்தின் விடியலுக்ககா, உங்களால் ஓர் சிறு துரும்பு அளவு உதவ முடிந்தாலும் இன்று முடியாவிட்டலும் நாளையோ அல்லது மறுநாளோ சொல்லாதிர்கள் காரணம் செய்து காட்டுங்கள் உங்கள் செயலில் அப்போது தன் இன் நன் மனிதனின் துயா ஆத்மா சந்தியடையும்

துஷா

தேவன் மாயம் said...

எப்படி நன்றி சொல்ல
எத்தனை உயிர்களை இழந்தோம்
அநியாயமாக இன்னொரு உயிரா..?
அந்நியன் என்றிருந்த நீங்கள் அண்ணனாக

///
உணர்வுத்தீயில் எரிய வேண்டாம் அன்பு மக்களே!!!

திவா said...

இந்த அயலவருக்கு இருந்திட்ட உணர்வுகளில் ஒரு துளியளவாவது நம்மவர்கள் அனைவருக்கும்(என்னையும் சேர்த்துதான்) இருந்திருந்தால் நாமெல்லாம் என்றோ நம் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டிருப்போம்.

இவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல என்மனம் என்னை உறுத்துகிறது..
அண்ணனின் ஆத்மா சாந்தியடையடையட்டும்...

Sinthu said...

எப்படி மறக்க முடியும் துஷா அக்கா.....நமக்காக ஒரு உயிர்...

அப்படி இல்லை தேவா அண்ணா... இது மனக் கவலை....

"இந்த அயலவருக்கு இருந்திட்ட உணர்வுகளில் ஒரு துளியளவாவது நம்மவர்கள் அனைவருக்கும்(என்னையும் சேர்த்துதான்) இருந்திருந்தால் நாமெல்லாம் என்றோ நம் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டிருப்போம்."

நானும் அந்த முட்டாள்களில் அடக்கம்.... தன்னலம் என்பது எம்மிடையே ஒன்கிநிட்கிறது.. அது வெளிப்படையான உண்மை..

Sinthu said...

கவலையான விடயம் தான் கவின் அண்ணா...